العلق
بسم الله الرحمن الرحيم
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
أَقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ
كَلَّا إِنَّ الإِنسَانَ لَيَطْغَى
أَن رَّعَاهُ اسْتَغْنَى إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى
أَرَعَيْتَ الَّذِي يَنْهَى عَبْدًا إِذَا صَلَّى
أَرَعَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى أَوْ أَمَرَ بِالتَّقْوى
أَرَعَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّى أَلَمْ يَعْلَمَ بِأَنَّ اللَّهَ يَرَى كَلَّا لَبِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
نَاصِيَةٍ كَذِبَةٍ خَاطِئَةٍ فَلْيَدْعُ نَادِيَهُ سَنَدْعُ الزَّبَانِيَةَ كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِب )
தமிழில்






தமிழாக்கம்
ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி)
மக்கீ, வசனங்கள்: 19
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக!
2. மனிதனை (அட்டைப்பூச்சி போன்று ஒட்டிக்கொண்டிருக்கும்) இரத்தக் கட்டியிலிருந்து அவன் படைத்தான்.
3. ஓதுவீராக! உம் இறைவன் மிக்க கண்ணியமானவன்
.4. அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான்.
5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தான்
.6. எனினும், நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
7. அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும்போது.
8. நிச்சயமாக (அவன்) மீளுதல் உம்முடைய இறைவனிடமே இருக்கிறது.
9. தடை செய்கிறானே, (அவனை) நீர் பார்த்தீரா?
10. ஓர் அடியாரை – அவர் தொழும்போது
,11. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்துகொண்டும்
,12. அல்லது, அவர் இறையச்சத்தைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
13. அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக்கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
15. அப்படியல்ல! அவன் விலகிக்கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். ۚ
16. தவறிழைத்துப் பொய்யுரைக்கும் முன் நெற்றி ரோமத்தை,
ۙ17. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். ۙ
18. நாமும் நரகக் காவலாளிகளை விரைவில் அழைப்போம்.
19. (அவன் கூறுவதுபோல்) அல்ல! அவனுக்கு நீர் கட்டுப்படாதீர்! (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக!ஒரு