பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
யா அய்யுஹல் முஜம்மிலு குமில் லைல இல்லா கலீலன் நிஸ்fபஹு அவின்குஸ் மின்ஹு கலீலா
அவ்ஜித் அலைஹி வரத்திலில் குர்ஆன தர்தீலா
இன்னா ஸனுல்கீ அலைக கவ்லன் ஸகீலா
இன்ன நாஸிஅதல்லைலி ஹிய அஷத்து வத்அவ் வ அக்வமு கீலா
இன்ன லக fபின்னஹாரி ஸப்ஹன் தவீலா
வத்குரிஸ்ம ரப்பிகவதபத்தல் இலைஹி தப்தீலா
ரப்புல் மஷ்ரிகி வல் மஃரிபி வாயிலாஹ இல்லா ஹுவ fபத்தஹித்ஹு வகீலா
வஸ்பிர் அலா மா எகூலூன வஹ்ஜுர்ஹும் ஹஜ்ரன் ஜமீலா
வதர்னீ வல் முகத்திபீன ஊலின் நஃமதி வமஹ்ஹில்ஹும் கலீலா
இன்ன லதைனா அன்காலவ் வஜஹீமவ்
வதஆமன் தா உஸ்ஸதிவ் வ அதாபன் அலீமா
எவ்ம தர்ஜுfபுல் அர்ழு வல் ஜிபாலு வகானதில் ஜிபாலு கஸீபம் மஹீலா
இன்னா அர்ஸல்னா இலைகும் ரஸுலன் ஸாஹிதன் அலைக்கும் கமா அர்ஸல்னா இலா fபிர்அவ்ன ரஸுலா
Fபஅஸா fபிர்அவ்னுர் ரஸுல fபஅஹத்நாஹு அஹ்தவ் வபீலா
Fபகைfப தத்தகூன இன் கfபர்தும் எவ்மைய் எஜ்அலுல் வில்தான ஷீபனிஷ்
ஸமாஉ முன்fபதிரும் பிஹி கான் வஃதுஹு மfப்ஊலா
இன்ன ஹாதிஹி தத்கிரதுன் fபமன்ஷாஅத் தஹத இலா ரப்பிஹி ஸபீலா
இன்ன ரப்பக எஃலமு அன்னக தகூமுஅத்னா மின் ஸுலுஸியல் லைலி வநிஸ்பஹு வஸுலுஸஹு வதாயிபதும் மினல்லதீன மஅக வல்லாஹு யுகத்திருல் லைல வன் நார் அலிம அல்லன் துஹ்ஸுஹு fபதாப அலைக்கும் fபக்ரஉ
மாத. தயஸ்ஸர மினல் குர்ஆனி அலிம அன்ஸ எகூனு மின்கும் மர்ழா வ ஆஹரூன எழ்ரிபூன fபில் அர்ழி எப்தஙூன மின் fபழ்லில்லாஹி வ ஆஹரூன யுகாதிலூன fபீ ஸபீலில்லாஹி fபக்ரஉ மா தஎஸ்ஸர மின்ஹு வ அகீமுஸ்ஸலாத வ ஆதுஜ்ஜகாத வ அக்ரிழுல்லாஹ கர்ழன் ஹஸனா வமா துகத்திமூ லி அன்fபுஸிகும்
மின்ஹைரின் தஜிதூஹு இன்தல்லாஹி ஹுவ ஹைரவ் வ அஃழம அஜ்ரா
வஸ்தஃfபிருல்லாஹ இன்னல்லாஹ ஙfபூருர் ரஹீம்

முஜம்மில் தமிழ் _ தமிழாக்கம்
அளவற்ற அருளாளனும், அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம் செய்கிறேன்.)
1. போர்வை போர்த்திக் கொண்டி ருப்பவரே!*
2. இரவில் (தொழ) எழுந்து நிற்பீராக! சிறிது நேரம் தவிர!
3. அதில் பாதி (நேரத்தில் தொழுவீராக!) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!
4. அல்லது அதைவிட (சற்று) அதிகப்படுத் திக் கொள்வீராக! (அதில்) குர்ஆனை தெளிவாக, நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக! 5. நிச்சயமாக, நாம் விரைவில் உம் மீது கனமான ஒரு சொல்லைப் போடுவோம். 6. நிச்சயமாக, இரவில் (வணக்கத்தை நிறைவேற்ற) எழுந்திருப்பதானது (மனமும், நாவும் ) ஒன்றிணைந்திருக்க அது மிக்க வலிமையுடையதாகும். இன்னும் சொல்லால் மிக நேர்த்தியானதுமாகும்.
7.நிச்சயமாக, உமக்குப் பகலில் நீண்ட வேலை இருக்கின்றது.
8.இன்னும், உம்முடைய ரப்பின் திருப் பெயரைத் துதித்திடுவீராக! (வணக்கத் தையும், பிரார்த்தனையையும் அவனுக்கே ஆக்கி) அவனளவிலேயே முற்றிலும் சார்ந்திருப்பீராக!
9.(அவன்) கிழக்குத் திசை – மேற்குத் திசையின் ரப்பாவான். அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) எந்த நாயனு
மில்லை, . ஆகவே அவனையே ா யின்
(உம்முடைய) பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்வீராக!
10. (நபியே!) அவர்கள் (உமக்கெதிராக சொல்வதின் மீது நீர் பொறுமையுட னிருப்பீராக! இன்னும், அவர்களை அழகான வெறுப்பாக வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக! 11. என்னையும், (உலக) இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொய்யர் களையும் நீர் விட்டு விடுவீராக! அவர்க ளுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக! 12.நிச்சயமாக, நம்மிடத்தில் (அவர்களுக் காக) விலங்குகளும், நரகமும் உள்ளன. 13.இன்னும் விக்கிக் கொள்ளும் உணவும், நோவினையளித்திடும் வேதனையும் (இருக்கின்றன)
14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்திடும்; மலைகள் சரிந்து மணல் மேடாகி விடும்.
15. நிச்சயமாக நாம், பிர்அவ்னிடம் ஒரு தூதரை அனுப்பியது போன்றே, உங்கள் மீது சாட்சி சொல்கின்ற ஒரு தூதரை அனுப்பி வைத்தோம்.
16. அப்பொழுது, பிர்அவ்ன் அந்தத் தூதருக்கு மாறு செய்தான். எனவே, நாம் அவனை கடினமான பிடியாக பிடித்துக்கொண்டோம்.
17. நீங்கள் நிராகரித்து விட்டால், குழந்தை களையும் (நரைத்த) கிழவர்களாக ஆக்கிடும் நாளில், (நமது பிடியிலிருந்து தப்ப உங்களை) நீங்கள் எவ்வாறு காத்துக் கொள்வீர்கள்?
18. அதில் (நிகழும் பெரும் அமளியின் காரணமாக) வானமும் பிளந்துவிடும். அவனது வாக்கு செயல்படக்கூடியதாகி விடும்.
முஸம்மில் சூராவின் எழுபது பலன்கள்
1.
தினமும் வழமையாக ஒரு மனிதன் ‘சூரா முஸம்மிலை’ ஓதி வந்தால் இம்மையிலும், மறுமையிலும்அவனுக்கு எவ்வித இன்னல்களும் வராது அல்லாஹ் அவனைக் காத்தருள்வான் என்று நபிகள் நாதர்(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
2. இதனை வழக்கமாக தினந்தோறும் ஓதி வருபவர் இன்ஷா அல்லாஹ் பெருமானார் (ஸல்) அவர்களை தமது கனவில் காணும் பாக்கியத்தை பெறுவர்.
3. ஒரு மனிதன் ஒரு காரியத்தில் முயற்சியினை மேற்கொள்கிறான். அவன் மேற்கொண்டிருக்கும் காரியம் நல்ல காரியம் தான். இருந்தும் அவன் எடுக்கும் முயற்சிகளெல்லாம் தோல்வியுறுகின்றன என்றால், அவன் தினமும் 3 தடவை சூரா முஸம்மிலை ஓதி தனது முயற்சியில் வெற்றியருளும்படி அல்லாஹ்விடம் துஆக் கேட்க வேண்டும். அவனது காரியத்தை அல்லாஹ் வெற்றியாக்கித் தருவான், இன்ஷா அல்லாஹ்.
4. ஒரு மனிதன் தன் கைவசம் வைத்திருந்த பணம் ஏதோ ஒரு காரணத்தின் நிமித்தம் அவனை விட்டும் போய் விட்டது. அவன் கஷ்டநிலையில் இருக்கிறான். அப்படிப்பட்டவன் 40 தடவை தினமும் இதனை ஓதி வர வேண்டும். அவ்விதம் ஓதினால் அம்மனிதனின் கையை விட்டும் போன முதலை இன்ஷா அல்லாஹ் அவன் திரும்பப் பெறுவான்.
5. ஒரு மனிதன் தனது ஊரை விட்டும் பயணம் புறப்படுகிறான். அவன் புறப்பட்டுபோய் பல நாட்கள் ஆகி விட்டன. இன்னும் அவன் திரும்ப வரவில்லை. அவன் எங்கு இருக்கிறான் என்பது தெரியவில்லை. அவன் உயிரோடு இருக்கிறானா அல்லது இறந்து விட்டானா என்பதையும் சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் அம்மனிதனைப்பற்றி அறிய விரும்பினால், ஒரு வெள்ளிக்கிழமை இரவில் குளித்து, துப்புரவான உடையணிந்து கொண்டு அம்மனிதன் எங்கு இருக்கிறான், அவனது நிலையென்ன என்பது தனக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு “முஸம்மில்” சூராவை 40 விடுத்தம் ஓதி தனது நாட்டத்தை நிறைவேற்றி வைக்க வேண்டி அல்லாஹ்வை வேண்டியவனாக தூங்கினால் இன்ஷா அல்லாஹ் அவனது கனவில் பயணம் போன மனிதனைப் பற்றிய விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
6. இதனை வழமையாக ஓதும் பழக்கமுள்ளவர்க்கு இன்ஷா அல்லாஹ் அவர் நாடும் அனைத்து நற்காரியங்களும் கைகூடும்.
7. எந்த நல்ல நாட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு இதனை ஓதினாலும் இன்ஷா அல்லா அந்நாட்டம் நிறைவு பெறும்.
8. கடன் ஏற்பட்டு, அக்கடனை தீர்க்க, எவ்வித வாய்ப்பும் இல்லையாயின், ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்குப் பிறகு 10 விடுத்தம் இதனை ‘தனது
கடன்கள் முழுவதும் நீங்க வேண்டும்’ என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்தவனாய் 40 நாளைக்கு ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் அவனின் அறியாப்புறத்தால் கடன்கள் தீர்ந்து விடும்.
9. ஒருவனுக்கு மிடுமை (தரித்திரம்) ஏற்பட்டு அதனால் அவன் வாழ்வில் துன்பங்களை அனுபவித்து வந்தால் ‘அஸர்’ தொழுகைக்குப் பின்னர் இதனை 7 விடுத்தம் ஓதி துஆ கேட்கவும். இன்ஷா அல்லாஹ். மிடுமை நீங்கி செல்வம் பெருகும்.
10. யாதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு அல்லல்படுவர். முஸம்மிலை ஓதினால் அல்லல்கள் அகன்று சிக்கலிருந்து மீட்சி உண்டாகும்.
11. வெளியூர் பயணம் சென்று திரும்பாதிருந்து அவரைப் பற்றிய துப்பு (தகவல்) ஒன்றும் தெரியாதிருந்தால் 40 நாளைக்கு இதனை ஒவ்வொரு நாளும் 40 விடுத்தம் வீதம் ஓதி வந்தால் அவரைப் பற்றிய விவரங்கள் இன்ஷா அல்லாஹ் தெரியவரும்.
12.ஒருவன் எல்லாக் காரியங்களிலும் தோல்வியையே சந்தித்து வந்தால் 40 நாளைக்கு தினமும் 40 விடுத்தம் இதனை ஓதி வரவும். இன்ஷா அல்லாஹ் அவனது தோல்வி நிலைமாறி எல்லாக் காரியங்களிலும் ஜெயம் உண்டாகும்.
13. துன்பங்கள் நேரும்போது இதனை 7 தடவை ஓதி துஆக் கேட்டால், துன்பங்கள் இன்ஷா அல்லாஹ் அகன்று இன்பம் உண்டாகும்.
14. தினமும் 40 முறை 40 நாட்களுக்கு ஓதி வந்தால் இன்ஷா அல்லாஹ் அவன் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகும்.
15. ஒருவன் அநியாயக்கார அரசன், கெடுதல் தரும் அதிகாரி, துர்க்குணமுள்ளவன் முதலியவர்களிடம் எதன் நிமித்தமாவது போக நேர்ந்தால், இதனை ஓதிவிட்டு போகவும். இன்ஷா அல்லாஹ் அவர்கள் எவ்வித தீங்கும் இவனுக்கு செய்யமாட்டார்கள்.
16. இதனை வழமையாய் தினமும் ஓதி வருபவர் எப்போதும்மகிழ்ச்சியாகவே காணப்படுவார்.
17. யாதொரு அடிமை அல்லது வேலைக்காரன் எங்கேயாவது ஓடிப்போய் விட்டால் இதனை 40 நாளைக்கு தினமும் 10 விடுத்தம் அவன் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஓதினால் ஓடிப்போனவன், இன்ஷா அல்லாஹ் திரும்பி வந்துவிடுவான்.
18. போர்க்களத்திற்கு செல்லுபவர் இதனை ஓதிக் கொண்டு சென்றால், அவர் வெற்றியுடனயே திரும்பி வருவார்.
19. மனதில் சலிப்பு, கவலை, விசாரம் முதலியன வந்தால் இதனை ஓத் அவை பறந்தோடி விடும்.
20. பிரயாணம் செல்லுபவர் இதனை ஓதினால், இன்ஷா அல்லாஹ் பயணம் சிறப்பாக அமையும். அவர் ஸலாமத்தாக தமது ஊருக்கு திரும்பி வருவார்.கபுறு
34. அவ்லியாக்கள், ஒலிமார்கள் முதலிய ஆன்மீகப் பெரியார்களின் ஷரீபுக்குச் சென்றால், “யாஸீன்” சூரா 1 விடுத்தமும், முஸம்மில் சூரா 1 விடுத்தமும் ஓதி ரசூல் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும் என்று சில ஷெய்குமார்கள் கூறுகின்றனர்.
35. யாதொரு குழந்தை அல்லது சிறு பிள்ளை பயந்து அழுதால் இதனை அக்குழுந்தை அல்லது அச்சிறு பிள்ளையின் மீது ஓதி ஊதவும். இன்ஷா அல்லாஹ் திடுக்கம், பயம் முதலியன நீங்கும்.
36. ஷெய்த்தான் பிடித்தவர்களுக்கு முஸம்மில் சூராவை ஓதி ஊதவும். இன்ஷா அல்லாஹ் ஷெய்த்தான் விலகி விடுவான்.
37. அரசர்கள், பெரும்பதவி வகிப்பவர்கள், உத்தியோகஸ்தர்கள், பணக்காரர்கள் முதலியவர்களைக் காண செல்லுகையில் இதனை ஓதி தண்ணீரில் ஊதி, அத்தண்ணீரினால் முகத்தைக் கழுவிக் கொண்டு போனால், அவர்கள் இவ்விதம் செல்லுபவரின் மீது மிகவும் பிரியம் கொள்வார்கள்.
38. தன் கணவன் தன்னை வெறுத்திருந்தால் இதனை 7 விடுத்தும் ஓதி, கையில் ஊதி முகத்தில் தடவிக் கொண்டு தனது கணவனின் முன் சென்றால், அவருக்கு இவளின் மீது இருந்து வந்த வெறுப்புமாறி இவள் மீது மிகுந்த முஹப்பத்துண்டாகும்.
39. யாதொருவனுக்கு உள்ளத்தில் பயம், நடுக்கம் உண்டாயிருந்தால் இதனை ஓதி தண்ணீரில் ஊதி, அத்தண்ணீரை அவனின் முகத்தில் எறியவும். இன்ஷா அல்லாஹ் பயம், நடுக்கம் நீங்கி விடும்.
40. தினமும் 40 விடுத்தம் இதனை ஓதி, தண்ணீரில் ஊதி, தனது உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளவும். இவ்விதம் 40 நாட்களுக்கு செய்து முடித்தால் அவன் தொடும் எல்லாக் காரியங்களிலும் பரக்கத் உண்டாகும்.
41. ஒருவன் குளிரினாலும், காய்ச்சலினாலும் துன்புற்றால் அவன் மீது இதனை ஓதி ஊதவும். இன்ஷா அல்லாஹ் குளிர், காய்ச்சல் சுகமாகும்.
42. ஒருவனுக்கு தான் இருக்குமிடத்தில் இருக்க பயமாக இருந்தால், இதனை ஓதி, தண்ணீரில் ஊதி, அவன் இருக்கும் இடத்தில் 4 மூலைகளிலும் அந்த தண்ணீரை தெளிக்கவும். பயம் அகன்று விடும்.
43. வெண்குட்டம், கருங்குட்டம் கண்டால், இதனை ஓதி, தண்ணீரில் ஊதி, நோய் கண்ட இடத்தில் நன்குபடும்படி ஊற்றவும். இவ்விதம் 40 நாட்களுக்கு செய்து வரவும். இன்ஷா அல்லாஹ் அந்நோய்கள் குணமாகும்.
44. ஒரு பெண், பிள்ளைப்பெற கஷ்டப்பட்டால், இதனை ஒதி, அவளின் உச்சி முதல் உள்ளங்கால்வரை ஊதவும். இன்ஷா அல்லாஹ் எளிதில் பிள்ளைப் பெறுவாள்.
45. அரையாப்புக் கட்டி (BUBO) உண்டானால், மண்கட்டி கொண்டு வந்து அதனை உடைத்து தண்ணீர் விட்டு குழைத்து, முஸம்மில் சூராவை அதில் ஓதிஅல்லாஹ் அக்கட்டி
கரைந்து விடும்.
46. தலைமுடி கழிந்து கொண்டு வந்தால், 40 நாட்களுக்கு இதனை தண்ணீரில் ஓதி ஊதி, தலையில் எல்லா இடங்களிலும் படும்படி அதனை ஊற்ற
வேண்டும், சுகம் கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்.
47. வஞ்சனை, சூனியம் பிடித்தவர்களுக்கு இதனை 40 விடுத்தம் ஓதி, தண்ணீரில் ஊதி, அத்தண்ணீரை வஞ்சனை, சூனியம் பிடிக்கப்பட்டவரின் தலை முதல் உள்ளங்கால் வரை ஊற்றவும். இன்ஷா அல்லாஹ் வஞ்சனை, சூனியத்தினால் ஏற்பட்டுள்ள எல்லா தீங்குகளும் நீங்கி சுகம் ஏற்படும்.
48. யாதொருவனுக்கு பாம்பு, தேள் முதலிய விஷ சந்து தீண்டினால் இதனை ஓதியவண்ணம் வேப்பக்குளையால் விஷசந்து தீண்டிய இடத்தில் அடித்துக் கொண்டிருந்தால் இன்ஷா அல்லா விஷம் இறங்கி விடும்.
49. வாயுத் தொல்லையால் துன்புறுபவர்களுக்கு இதனை பீங்கான் தட்டில் எழுதி கரைத்துக் கொடுக்க, இன்ஷா அல்லாஹ் வாயு உபாதை குணமாகும்.
50. தவறான நட்பு ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்பட்டிருந்து, நன்மையைக் கருதி அவர்கள் இருவரையும் பிரிக்க நினைத்தால் இதனை ஒரு ரொட்டியில் எழுதி நாயிக்கு தினனக் கொடுக்கவும். இன்ஷா அல்லா அவ்விருவருக்கும் பிரிவினை ஏற்படும்.
51. சில பெண்களுக்கு பிள்ளை உண்டாகாது மாதா மாதம் மாதவிடாய் வந்துவிடும். வேறு சில பெண்கள் கர்ப்பமுறுவர். ஆனால் கர்ப்பமுற்றிருக்கையில் மாதாவிடாய் வந்துவிடும். இத்தனைய பெண்களை நோன்பு பிடிக்கச் சொல்ல வேண்டும். முஸம்மில் சூராவை 7 விடுத்தம் ஓதி, சீனியில் (Sugar) ஒதி, ஊதி, அவளிடம் கொடுத்து அதைக் கொண்டு அவளை நோன்பு திறக்கச் சொல்ல வேண்டும். இன்ஷா அல்லாஹ் விரைவில் கர்ப்பமுறுவாள்.
52. முஸம்மில் சூராவை தாயத்து அடைத்து அணிந்து கொண்டால் எவ்வித பலாய், முஸீபத்தும் இன்ஷா அல்லாஹ் அணுகாது.
53. கணவனுக்கும், மனைவிக்கும் ஒற்றுமையின்றி பிணக்கு ஏற்பட்டிருந்தால் இதனை பீங்கான் தட்டில் 7 நாட்களுக்கு எழுதி கரைத்து அவ்விருவரையும் குடிக்கச் செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ் அவ்விருவரும் முகப்பத்தாவர்.
54. துட்டர்களுடன் (துஷ்டர்களுடன்) பழகுவதை நிறுத்த விரும்பின் அவனுக்கு இதனை பீங்கான் தட்டில் எழுதி கரைத்துக் கொடுக்கவும். துட்டர் சகவாசத்தை விட்டும் இன்ஷா அல்லாஹ் அவன் நீங்கி விடுவான்.
55. யாதொரு அரசன் அல்லது மேலதிகாரி உன்னுடன் மகிழ்ச்சியோடு பழக வேண்டுமென்று நீ விரும்பினால் குங்குமம், கஸ்தூரி இரண்டையும் பன்னீரில் கரைத்து அதனைக் கொண்டு முஸம்மில் சூராவை எழுதி, தாயத்து அடைத்து நீ
ஊதி, அரையாப்புக்கட்டியில் வைத்துக் கட்ட, இன்ஷா அணிந்து கொண்டால் முஸம்மில் சூராவின் பரக்கத்தினால் அவர்கள் இன்ஷா அல்லாஹ் எப்போதும் மகிழ்ச்சியுடன் பழகுவர்.
56. பிள்ளை இல்லாதவர்களுக்கு இதனை பீங்கான்தட்டில் எழுதி 11 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க இன்ஷா அல்லாஹ் அவள் குழந்தை உண்டாகுவாள்.
57. மாதத்துக்கு ஒரு தடவைக்கு மேலாக மாதவிலக்கு வந்து துன்புறுவர்களுக்கும், தொடர்ந்து மாதவிடாய் இருந்து கொண்டிருப்பவர்களுக்கும் இதனை எழுதி தாயத்து அடைத்து அதனை அவளின் உடலில் அசுத்தம் படாத இடத்தில் கட்டிக் கொள்ளச் செய்ய அவ்உபாதை இன்ஷா அல்லாஹ் நீங்கி விடும்.
58. திருகுர்ஆன் பாடம் வராதவர்களுக்கும், ஞாபக் சக்தி குறைந்தவர்களுக்கும் இதனை பீங்கான் தட்டில் எழுதி கரைத்துக் கொடுக்க இன்ஷா அல்லாஹ் திருகுர்ஆன் பாடம் நன்கு வரும். ஞாபக சக்தி (MEMORY POWER) அதிகரிக்கும்.
59. பிள்ளையில்லாப் பெண்டிற்கு பிள்ளை உண்டாக அவளை நோன்பு பிடிக்கச் சொல்ல வேண்டும். அத்துடன் புதுப்பானை ஒன்றைக் கொண்டு வந்து அதில் தண்ணீரை நிரைத்து அத்தண்ணீரில் முஸம்மில் சூராவை 40 விடுத்தம் ஓதி ஊதி திங்கட்கிழமை பொழுது உதயமாகும் (சூரியன் உதிக்கும்) நேரம், அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை எல்லா இடங்களிலும் படும்படியாக ஊற்றிக் கொள்ளச் சொல்ல வேண்டும். இவ்விதம் மூன்று திங்கட்கிழமைகளுக்கு தொடர்ந்து செய்து வந்தால், இன்ஷா அல்லா அவளின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பமுறுவாள்.
60. யாருக்காவது வஞ்சனை, சூனியம் செய்யப்பட்டு அதனால் உபாதைகள் உண்டாகி எவ்வித பரிகாரத்தினாலும் அவ்உபாதைகள் தீராது துன்பப்பட்டுக் கொண்டிருந்தால், கீழ்க்கண்டவாறு செய்யவும். இன்ஷா அல்லா வஞ்சனை, சூனியம் முதலியவற்றால் ஏற்பட்டுள்ள எல்லா கெடுதல்களும் நீங்கி நற்சுகத்தை அடைவர்:
ஒரு புதுப்பானையைக் கொண்டு வந்து அதில் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு 7 மிளகு, கொஞ்சம் மண், சிறிது நெல், முச்சந்தியிலுள்ள 7 கற்கள், சிறிது மருதானி விதைகள், சிறிது பயறு, சிறிது பருத்தி விதை இவற்றை ஒன்றாய் விரவி வைத்துக் கொண்டு, அதில் சூரா முஸம்மிலை 21-தடவை ஓதி ஊத வேண்டும். இதன் பின்னர், இவற்றை எடுத்து, ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் தண்ணீருக்குள் போட வேண்டும்.
அதற்குப்பிறகு சூரா முஸம்மிலை 11 தடவை ஒதி அத்தண்ணீர் கலவையுள் ஊதி, தலையில் ஊற்ற வேண்டும். இவ்விதம் 7 ஞாயிற்றுக்கிழமைகள் செய்து வந்தால் வஞ்சனை, சூனியத்தினால் ஏற்பட்டிருக்கும் எல்லா கோளாறுகளும் நீங்கி, இன்ஷா அல்லா பூரண சுகம் கிடைக்கும்.61. யாராவது ஒரு பெண்ணுக்கு பேறுகால சமயத்தில் கஷ்டம் ஏற்படின் 1. முஸம்மில் சூராவை ஒரு தாளில் எழுதி அவளது கையில் அல்லது கழுத்தில் அல்லது அறையில் அசுத்தம் படாத இடத்தில் கட்டவும். 2. அத்துடன் முஸம்மில் சூராவை ஓதி அவளின் உச்சி தொடுத்து உள்ளங்கால் வரை ஊதவும். 3. அதனை பீங்கானில் எழுதி கரைத்து அவளை குடிக்கச் செய்யவும். இன்ஷா அல்லாஹ் கஷ்டம் நீங்கி எளிதில் குழந்தை பெற்றெடுப்பாள்.
62. பல்லாண்டு காலமாக மக்கட்பேறு இல்லாதவர்கள் மக்கட்பேறு பெற : அவள் உயரம் ஏழு நூல் இழை ‘எடுத்து கயிறு திரித்து, முஸம்மில் சூராவை 40 தரம் ஓதி ஊதி, 40 முடிச்சுகளை அக்கயிற்றில் முடிந்து சாம்பிராணி தூபம் காட்டி அவளின் அறையில் கட்டிக் கொள்ளச் சொல்ல வேண்டும்.
63. போர்க்களத்துக்குச் செல்பவர், முஸம்மில் சூராவை 3 விடுத்தம் ஓதி தண்ணீரிலும், கரைத்து வைக்கப்பட்டுள்ள சந்தனத்திலும் ஊத வேண்டும். அத்தண்ணீரினால் அவ்வீரன் தனது முகத்தை கழுவிக் கொள்வதுடன், அச்சந்தணத்தை தன் உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டு போர்க்களம் புகுந்தால் இன்ஷா அல்லா போரில் வெற்றியடைவான்.
64. பேய் பிடித்தவளுக்கு முஸம்மில் சூராவை தாளில் எழுதி அவளின் கையில் அல்லது கழுத்தில் கட்டினால் அவளைப் பிடித்திருக்கும் பேய் இன்ஷா அல்லா அவளை விட்டும் நீங்கி விடும்.
65. யாதொருவருக்கு கை, கால் முடங்கிப் போனால், இதனை பீங்கான் தட்டில் எழுதி 40 நாட்களுக்கு தினமும் கொடுக்கவும். இன்ஷா அல்லா சுகம் ஏற்படும்.
66. காய்ச்சல், தலைவலி, கை, கால்வலி முதலிய நோய்களுக்கும், ஷைத்தான் பிடித்தவர்களுக்கும்.
1. முஸம்மில் சூராவை ஒரு காகிதத்தில் எழுதி தாயத்து அடைத்து அதனை ஐந்துவர்ண நூலில் முறுக்கிய கயிற்றினால் சுற்றிக்கட்டி, அந்த நோயாளியை அணியச் செய்ய வேண்டும்.
2. புதுப்பானையில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு முஸம்மில் சூராவை ஏழுவிடுத்தம் ஓதி அத்தண்ணீருள் ஊதி, நோயாளி இருக்கும் இடத்தில் 4 மூலைகளிலும் எறிய வேண்டும்.
3. முஸம்மில் சூராவை ஒரு பீங்கான் தட்டில் எழுதி அதனைக் கரைத்து அந்நோயாளியைக் குடிக்கச் செய்ய வேண்டும்.
இன்ஷா அல்லா அந்நோயாளி சுகம் பெறுவான்.
67. ஒருவனுக்கு ஆணுடம்பு உசும்புதல் யாதும் இல்லாதிருந்தால், அவனை நாளைக்கு ஓதி அவன்மேல் முழுவதும் ஊதி வந்தால், ஆணுடம்புக்கட்டு அகன்று முன்னால் உட்காரவைத்து, தினமும் முஸம்மில் சூராவை 40 விடுத்தம் வீதம் 40 அவனுக்கு நல்ல சக்தி ஏற்படுவதுடன், ஆணுடம்பு உசும்புதலும் உண்டாகும்,
இன்ஷா அல்லாஹ்.68, ஒரு கணவனுக்கு அவனின் மனைவி மீதோ அன்று ஒரு மனைவிக்கு அவளின் கணவன் மீதோ முஹப்பத் இல்லையாயின் சர்க்கரை, சீனி போன்றவை சேர்ந்த இனிப்புப்பதாரித்தங்களில் முஸம்மில் சூராவை எழுதி, அதனை மனைவி மீது முஹப்பத்தில்லா கணவனுக்கோ அல்லது கணவன் மீது முஹப்பத் இல்லா மனைவிக்கோ தின்னக் கொடுத்தால் இன்ஷா அல்லா அவ்விருவரும் நீங்காத முஹப்பத்துடையவராய் இருப்பர்.
69. எல்லா ஹாஜத்துக்கும் கீழ்க்கண்ட முஸம்மிலுடைய அச்சரத்தை எழுதி தாயத்து அடைத்து அணிந்து கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் எல்லா ஹாஜத்துகளும் நிறைவுறும். இதனை பலர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள் (முஜற்றபு). எனது முன்னோரின் கையெழுத்துப் பிரதியில் கண்டவாறு அப்படியே இதன் அடியில் தந்திருக்கிறேன்.

70. கீழ்க்கண்டவாறு முஸம்மில் சூராவின் அச்சரம் “பவாயிதுல் குர்ஆனில் மனாபிஉல் அஸ்மா வதல்ஸமாத்” என்னும் நூலில் முஹிம்மத் வரையப்பட்டுள்ளது. “ஜின், ஷைத்தான், தேவு. பரி, கபீது முதலான சகல பரியாத்துக்களுக்கும் இந்த நல் முஸம்மிலை எழுதிக் கட்டினால், அல்லாஹுத்த ஆலாவின் உதவிகொண்டு சகல பலாய்களும் தூராகி விடும் (விலகி விடும்)” என்று அந்நூலில் எழுதப்பட்டிருக்கிறது.
