Arabic
ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِّن بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُّعَاسًا يَغْشَىٰ طَائِفَةً مِّنكُمْ ۖ وَطَائِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ يَظُنُّونَ بِاللَّهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ ۖ يَقُولُونَ هَل لَّنَا مِنَ الْأَمْرِ مِن شَيْءٍ ۗ قُلْ إِنَّ الْأَمْرَ كُلَّهُ لِلَّهِ ۗ يُخْفُونَ فِي أَنفُسِهِم مَّا لَا يُبْدُونَ لَكَ ۖ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ الْأَمْرِ شَيْءٌ مَّا قُتِلْنَا هَاهُنَا ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ وَلِيَبْتَلِيَ اللَّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِي قُلُوبِكُمْ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ
English
Summa anzala ‘alaikum mim ba’dil ghammi amanatan nu’aasai yaghshaa taaa’ ifatam minkum wa taaa’ifatun qad ahammat-hum anfusuhum yazunnoona billaahi ghairal haqqi zannal jaahiliyyati yaqooloona hal lanaa minal amri min shai’; qul innal amra kullahoo lillaah; yukhfoona fee anfusihim maa laa yubdoona laka yaqooloona law kaana lanaa minal amri shai’ummaa qutilnaa haahunaa; qul law kuntum fee buyootikum labarazal lazeena kutiba ‘alaihimul qatlu ilaa madaaji’ihim wa liyabtaliyal laahu maa fee sudoorikum wa liyumah hisa maa fee quloobikum; wallaahu ‘aleemum bizaatis sudoor

TAMIL
ஆல இம்ரான் 154
சும்ம அன்சல அலைக்கும் மீம் பஹ்தி யல் ஹம்மி ஆமனத்தன் நுஆசன் யஹ்ஸா தாயீ( fபதன் மின்கும் வதாயீ(fபதுன் கத் அஹம்மத்துஹூம் அன்பூசுஹும் யலுன்னுவ்ன பில்லாஹி ஹைரல் ஹக்கி லன்னல் ஜாஹிலியத்தி யகுவ்லுன ஹல் லனா மினல் அம்ரி மின் ஷைய்யின் குல் இன்னல் குல்லஹூ லில்லாஹி யுஹ்பூவ்ன (fபீஅன்புஷிஹிம் மாலா யுப்துவ்ன லக யகுலுன லவ் கான லனா மினல் அம்ரி ஷையின் மா குதில்னா ஹாகுனா குல் லவ் குன்தும் (fபீ புயுதிகும் ல பரசல்லதீன குதிப அலைஹிமுல் கத்லு இல மலாஜியிஹிம் வலியப்தலி யல்லாஹூ மா ( fபீ சுதுரிசும் வலியுமஹ்ஹிச மா(fபீ குலுபிகும் வல்லாஹு அலிமுன் பிதாதீ சுதுர்
இந்த ஒரு ஆயத்துகளில் அல்லாஹ் இஸ்முல் அஃலத்தை கூறு இருக்கிறான்
இதை யார் அரபியில் 29 தடவை ஓதிவருவாரோ அவர் நாட்டங்கள் நிறைவேறும் தூஆ ஒப்புக்கொள்ளப்படும்
வறுமை கடன் நீங்க இதை தினமும் இருபத்து ஒன்பது தடவை இருப்பத்தொண்பது நாட்கள் ஓதிவந்தால் வறுமை நீங்கி செல்வம் பெறுகும்
தலை வழி ஏற்படாமல் இருக்க பத்து தடவை இதை ஓதிக்கொள்ளவும்
இதை முன்று தடவை ஓதி தண்ணிரில் ஓதி குடிக்கச்செய்தால் காய்சல் நோய் குனமாகி மற்ற எல்லா நோய்களும் நீங்கும்
154.பின்னர், இத்துயரத்திற்குப் பிறகு நிம்மதியான ஒரு தூக்கத்தை உங்களின் மீது அவன் இறக்கி வைத்தான். உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. (முனாபிக்கான) மற்றொரு கூட்டத்தினரோ, அவர்களது உள்ளங்கள் திட்டமாக அவர்களுக்குத் துயரத்தை உண்டாக்கிவிட்டன. (அதனால்) அவர்கள் அறியாமை
குடி கொண்டோரின் எண்ணம் போன்று, அல்லாஹ்வைப் பற்றி உண்மைக்குப் புறம்பானதை எண்ணலாயினர். இ(ப் போர்)க் காரியத்தில் நமக்கு(ச் சாதகமாக) ஏது முண்டா?’ என்று கூறினர். ‘நிச்சயமாகக் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன’ என்று (நபியே!) நீர் கூறும். அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் உமக்கு வெளியாக்காத வற்றை மறைத்துக் கொண்டுள்ளனர். ‘இக்காரியத்தில் நமக்கு(ச் சாதகமாக) ஏதாவதொன்று இருந்திருக்குமாயின், நாம் இங்கு கொல்லப் பட்டிருக்கவும் மாட்டோம்’ என்று(ம்) கூறுகின்றனர். ‘நீங்கள் உங்கள் இல்லங்களில் (பதுங்கி) இருந்திருந்தாலும், கொல்லப்படுவது எவர்கள் மீது விதியாக்கப் பட்டிருக்கிறதோ, அவர்கள் (வெட்டப்பட்டு) விழும் இடங்களுக்கு(த் தாமாகவே) வெளி யேறி வருவார்கள்’ என்று (நபியே! அவர் களுக்கு) நீர் கூறும். (இது ஏனெனில்) உங்களது நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களி லுள்ளவற்றை (நீக்கி)த் தூய்மைப்படுத் திடவுமே (உஹத் போரில் இவ்வாறு செய்தான்.) மேலும், அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.*
154. ஜூபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: உஹத் யுத்தத்தில் எங்களைப் பயம் ஆட்கொண்டது. மேலும் எங்களுக்குத் தூக்கமும் மேலிட்டது. அந்தத் தூக்கத்தில் கனவு காண்பவனைப் போல் மப்தப் இப்னு குஷைர் என்ற முனாபிக்கின் வார்த்தையைக் கேட்டேன். அதாவது, அவன் நாங்கள் இஷ்டமில்லாமல் இங்கு வந்து, இப்படிக் கொல்லப்பட வேண்டுமா? என்று கூறினான். அப்போது இவ்வசனம் இறங்கியது.