40 சலவாத்

SALAWAT

சலவாத்து ஓதுவதின் மகிமைகள் சலவாத்து ஓதுவதால் மனிதர்கள் அடையும் பாக்கியங்களைப் பற்றி அல்லாமா ஸகாவீ (ரஹ்) அவர்கள் தொகுத்துள்ள சிறப்புகள்:-

  • 1. சலவாத்து ஓதும் அடியானின் மீது அல்லாஹு தஆலா சலவாத்து சொல்வது.
    2..அவனுடைய மலக்குளும் சலவாத்து சொல்வது.
  • 3.ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் அவரின் மீது சலவாத்துச் சொல்வது.
  • 4. சலவாத்து ஓதுபவரின் தவறுகளுக்கு அது பரிகாரமாக ஆவது.
  • 5.அவருடைய அமல்களைப் பரிசுத்தப்படுத்துவது.
  • .6.அவருடைய அந்தஸ்துகள் உயர்த்தப்படுவது.
    ,7அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது.
  • 8அந்த சலவாத்தே அவருக்காக மன்னிப்புத் தேடுவது.
    9.சலவாத்து ஓதுபவருடைய செயலேட்டில் ஒரு கீராத் அளவு நன்மை எழுதப்படுவது. ஒரு “கீராத்” என்பது உஹது மலையளவுக்கு சமமானது.
  • 10.அவருடைய அமல்கள் பெரிய தராசில் நிறுககப்படுவது.
  • 11.எவர் தனது சகல துஆக்களையும் சலவாத்தாகவே ஆக்கிக் கொள்வாரோ அவருடைய இம்மை மறுமையில் காரியங்களுக்கு அதுவே போதுமானதாக ஆகிவிடுகிறது.
  • 12.அவருடைய குற்றங்கள் அழிக்கப்படுவது.
  • 13.அடிமைகளை உரிமை விடுவதை விட அதிகமான நன்மைகள் கிடைப்பது
  • 14. சலவாத்தின் காரணமாக ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைப்பது.
    15. கியாமத் நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அவருக்கு சாட்சியாக ஆவது.
  • 16. நபி(ஸல்) அவர்களின் ஷபாஅத் வாஜிபாவது.
  • 17. அல்லாஹுதஆலாவுடைய திருப்தியும்
    இறங்குவது.
    கிருபையும்
  • 18. அவருடைய கோபத்திலிருந்து பாதுகாப்புக் கிடைப்பது.
  • 19. கியாமத்து நாளில் அர்ஷின் நிழலை அடைவது.
  • 20. அமல்கள் நிறுக்கப்படும்போது நன்மையின் தட்டு கனமாவது.
  • 21. ஹவ்லுல் கவ்தர் தடாகத்தில் நீர் அருந்தும் பாக்கியம் கிடைப்பது
  • 22. நரக நெருப்பிலிருந்து விடுதலை கிடைப்பது
  • 23. கியாமத்து நாளின் தாகத்திலிருந்து பாதுப்புப் பெறுவது.
  • 24. சிராத்துல் முஸ்தகீமை எளிதாகக் கடந்துவிடுவது.
  • 25. மரணத்திற்கு முனனர் சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தைக் கண்டுகொள்வது.
  • 26. சுவர்க்கத்தில் மிக அதிகமான மனைவியரை பெறுவது
  • 27. இருபது தடவைகள் ஜிஹாது செய்வதைவிட அதிகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வது
  • 28. தருமம் செய்ய வசதியற்றவருக்கு தருமத்தின் ஸ்தானத்தில் அது இருப்பது.
  • 29. சலவாத்துச் சொல்வது ஜகாத்தாக அமைவது.
  • 30. நம்மைப் பரிசுத்தமாக்குவதாக அமைந்திருப்பது.
  • 31. அதன் காரணத்தால் பொருளில் பரக்கத்து ஏற்படுவது.
  • 32. சலவாத்தின் பரக்கத்தால் நூறு தேவைகளும் இன்னும்

அதிகமானவையும் நிறைவேற்றித் தரப்படுவது.

  • 33. அதுவே ஓர் இபாதத்தாக இருப்து.
  • 34. அமல்களில்
    எல்லாவற்றையும்விட
    விருப்பமானதாக இருப்பது.
    அல்லாஹ்வுக்கு
  • 35. மஜ்லிஸ்களுக்கு அலங்காரமாக இருப்பது.
  • 36.வறுமையையும் நெருக்கடியையும் தூரமாக்குவது.
  • 37. சலவாத்தின் காரணத்தால் நன்மைக்கு வழி தேடப்படுவது.
  • 38.சலவாத்து ஓதுபவர் கியாமத்து நாளில் எல்லோரையும் விட நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நெருங்கி இருப்பது.
  • 39. சலவாத்தின் பரக்கத்தால் அதை ஓதுபவரும், அவர் பிள்ளைகளும் அவருடைய பேரக்குழந்தைகளும் பலன்பெறுவது.
  • 40. மற்றவருடைய ஈசாலே தவாபுக்காக ஓதும்போது அவரும்
    பலன் பெறுவது.
  • 41. அல்லாஹ்வின்
    இன்னும் அவனுடைய தூதரின்
    சந்திதானத்தில் நெருக்கம் கிடைப்பது
  • 42. அது சந்தேகமின்றி ஒளியாக இருக்கிறது
  • 43. எதிரிகளை வெல்லக் காரணமாக அமைகிறது.
  • 44. மனதை “நிபாக்” என்னும நயவஞ்சகத்தை விட்டும் துருவை விட்டும் சுத்தப்படுத்துகிறது
  • 45. மக்களின் மனதில் அன்பை உண்டாக்குகிறது.
  • 46. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்
    பாதுகாப்பளிக்ககிறது
  • 47. சலவாத்து ஓதுபரைபற்றி மற்றவர் புறம் பேசுவதை விட்டும் பாதுகாப்பளிக்கிறது.
  • 48. சலவாத்து கூறுவது பரக்கத்துகள் மிகுந்த அமல்களில்

உள்ளதாக இருக்கிறது.

  • சிறப்புமிக்க அமலாக இருக்கிறது
  • ஈருலகிலும் அதிகப் பலன்களை அளிக்கும் அமலாக அமைந்திருக்கிறது
    இவையன்றி இன்னும் ஏராளமான நன்மைகள் உள்ளன. நல்ல அமல்களையும அதன் பலன்களையும் திரட்டிக்கொள்ளும் பேராவல் உள்ள விவேகமுள்ளவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டால் மென்மேலும் ஸலவாத்து ஓதிக்கொண்டே இருக்க ஆசைப்படுவார்கள்.

  • ஜும்ஆ நாளின் சலவாத்து

  • ஹஜ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள் வாக்கை அறிவிக்கின்றார்கள்: “என் மீது சலவாத்துக் கூறுவது சிராத்துல முஸ்தகீமைக் கடக்கும் போது ஒளியாக இருக்கும், மேலும், எவர் என்மீது ஜும்ஆ நாள்ன்று எண்பது தடவை சலவாத்துச் சொல்வாரோ, அவருடைய எண்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
    அல்லாமா ஸகாவீ (ரஹ்) அவர்கள் அல் கல்லுல் பதீ என்னும் கிதாபில் இந்த ஹதீஸை பல அறிவிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள். ஹஜ்ரத் அபூ ஹுதரைரா (ரலி) அவர்களால் அறிவிக்கப்ட்ட மற்றொரு ஹதீஸில், “எந்த மனிதர் ஜும்ஆ நாள் அஸருடைய தொழுகைக்குப் பின் தொழுத இடத்தைவிட்டு எழுந்திருக்கும் முன்,
  • அல்லாஹும்ம
    ஸல்லி அலா முஹம்மதினின்
  • னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹீ வசல்லிம் தஸ்லீமா


என்ற சலவாத்தை எண்பது தடவை ஓதுவாரோ அவருடைய எண்பது வருடப் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; எண்பது வருட வணக்கத்தின் நன்மைகள் எழுதப்படுகின்றன என
அறிவிக்கப்பட்டுள்ளது..


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை இமார் தாருகுத்னீ (ரஹ்) அவர்கள் ரிவாயத்துச் செய்கிறார்கள்: எவர் ஜும்ஆ நாளில் என்மீது எண்பது தடவை சலவாத்து கூறுவாரோ, அவருக்கு எண்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படு” என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியபோது,” யாரசூலுல்லாஹ்! எவ்வாறு சலவாத்து ஓதவேண்டும்?” என ஒருவர் வினவினார், அதற்கு நபி (ஸல்) அவர்கள்,


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக வநபிய்யிக வரசூலிகன் நபிய்யில் உம்மிய்யி
என
என்று ஓதி ஒரு விரலை மடக்கி கொள்ளவும் பதிலளித்தார்கள். விரலை மடக்கி கொள்ளவும் என்பதின் கருத்து, விரலால் எண்ணிக்கையை கணக்கிடு என்பதாகும்.


ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது : எந்த மனிதர் ஜும்ஆ நாளன்று என்மீது நூறு சலவாத்து ஓதுவாரோ அவருடன் கியாமத்து நாளில் ஓர் ஒளிவரும். அந்த ஒளியை படைப்பினம் அனைத்தின் மீதும் பகிர்ந்தளித்தால் அவைருக்கும் அது போதுமானதா ஆகிவிடும் என ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளினார்கள்..

ஹஜ்ரத் ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் மூலமாக அறிவிக்கப்படுவதாவது: எவர் ஜும்ஆ நாளின் அஸருக்குப்பின்,


அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதினின் னபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹீ வசல்லிம்
என்று எண்பது தடவை ஓதுவாரோ அவருடைய எண்பது ஆண்டுகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.


தேர்ந்தெடுக்கப்பட்ட அவனுடைய நல்லடியார்கள் மீது
ஸலாம் உண்டாவதாக. ரஸூல்மார்களின் மீது ஸலாம் உண்டாவதாக.
இருபத்தைந்து சலவாத்துகள் !

1.யா அல்லாஹ்! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் சலவாத்து அருள்வாயாக! மேலும் உன்னிடம் நெருக்கமான ஸ்தானத்தை அவர்களுக்குக் கொடுத்தருள்வாயாக!


2.யா அல்லாஹ்! நிலைபெறும் இந்த அழைப்பின் இன்னும் பலன் தரும் தொழுகையின் ரப்பே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சலவாத்துச் சொல்வாயாக ! நீ பொருந்தியபின் எக்காலமும் கோபமடைய மாட்டாயே அத்தகைய பொருத்தமாக என்னை நீ பொருந்திக் கொள்வாயாக!


3.யா அல்லாஹ்! உன்னுடைய அடியாரும் திருத்தூ தருமாகிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்களின் மீதும், முஃமினான ஆண்கள், பெண்கள் மீதும் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் மீதும் சலவாத்துச்
சொல்வாயாக!

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ சலவாத்தும் பரக்கத்தும் கிருபையும் அருளியது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் சலவாத்துச் சொல் வாயாக! பரக்கத்துச் செய்வாயாக! கிருபை செய்வாயாக! நிச்சயம் நீ புகழுக்குரியவன், மேன்மைக்குரியவன்.

  1. யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தினர் மீது நீ சலவாத்துச் சொல்லியது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தினர் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! மேன்மைக் குரியவன். நிச்சயம் நீ புகழுக்குரியவன், யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தினர் மீது நீ அருளிய பரக்கத்தைப் போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அன்னாரின் குடும்பத்தினர் மீதும் பரக்கத்தினை அருள்வாயாக! நிச்சயம் நீ புகழுக்குரியவன். மேன்மைக்குரியவன்.

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தினர் மீது நீ சலவாத்துச் சொல்லியது போன்று, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! நிச்சயம் நீ புகழுடையோன். மேன்மையானவன். இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தினர் மீது நீ பரக்கத்துச் செய்தது போன்று முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் பரக்கத்துச் செய்வாயாக! நிச்சயம் நீ புகழுடையோன், மேன்மையானவன்.

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள்

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீது நீ சலவாத்துச் சொல்லியது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! நிச்சயம் நீ புகழுக்குரியவன், மேன்மைக்குரியவன். யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீது நீ பரக்கத்துச் செய்தது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் பரக்கத்துச் செய்வாயாக! நிச்சயம் நீ புகழுக்குரியவன், மேன்மைக்குரியவன்.

முஹம்மதின் கமா ஸல்லைத அலா ஆலி இப்ராஹீம வBபாரிக் அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் கமா Bபாரக்த அலா ஆலி இப்ராஹீம திபில் ஆலமீன இன்னக ஹமீதும் மஜீத்

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்களுடைய கிளையார் மீது நீ சலவாத்து சொல்லியது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! இன்னும் உலகத்தார்களில் இப்றாஹீம் (அலை) அவர்களுடைய கிளையார் மீது நீ பரக்கத்துச் செய்தது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் பரக்கத்துச் செய்வாயாக! நிச்சயம் நீ புகழப்படுபவன், மேன்மைக் குரியவன்.


12.அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅஜ்வாஜிஹீ வதுர்ரிய்யாதிஹீ கமா ஸல்லைத அலா ஆலி இப்ராஹீம வBபாரிக் அலா முஹம்மதிவ் வஅஜ்வாஜிq வதுர்ரிய்யாதிq: கமா Bபாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீது நீ சலவாத்து அருளியது போல, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாரின் பரிசுத்த மனைவியர் மீதும், சந்ததிகள் மீதும்

சலவாத்துச் சொல்வாயாக! இப்றாஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தினர் மீது நீ பரக்கத்துச் செய்தது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாரின் பரிசுத்த மனைவியர் மீதும், சந்ததிகள் மீதும் பரக்கத்துச் செய்வாயாக! நிச்சயம் நீ புகழுக்குரியவன், மேன்மைக்குரியவன்.

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தினர் மீது நீ சலவாத்து கூறியது போன்று, முஹம்மது அவர்கள் மீதும், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னாருடைய பரிசுத்த மனைவியர் மீதும், சந்ததியினர் மீதும் நீ சலவாத்துக் கூறுவாயாக! இப்றாஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தினர் மீது நீ பரக்கத்துச் செய்தது போன்று. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாருடைய பரிசுத்த மனைவியர் மீதும், சந்ததியினர் மீதும் பரக்கத்துச் செய்வா யாக! நிச்சயம் நீ புகழுக்குரியவன், மேன்மைக்குரியவன்.

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீது நீ சலவாத்து சொல்லியது போன்று, முஹம்மது ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், முஃமின்களின் தாய்மார்களான அன்னாருடைய மீதும், சந்ததியினர் மீதும் அஹ்லுல் பைத்தென்னும் குடும்பத்தினர் மீதும் நீ சலவாத்து அருள்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன், மேன்மைக்குரியவன்.


15.அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம வBபாரிக் அலா முஹம்மதிவ் வஅலா ஆலி முஹம்மதின் கமா Bபாரக்த அலா இப்ராஹீம வதரஹ்ஸம் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா தரஹ்ஹம்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்.

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ சலவாத்துச் சொல்லியது போல, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாருடைய குடும்பத்தினர் மீதும், சலவாத்துச் சொல்வாயாக! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ பரக்கத்துச் செய்தது போல, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாருடைய குடும்பத்தினர் மீதும் பரக்கத்துச் செய்வாயாக! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ கிருபை செய்தது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாருடைய குடும்பத்தினர் மீதும் கிருபை செய்வாயாக!

வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத்.

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும்; அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ சலவாத்துக் கூறியது போன்று, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் மீதும் சலவாத்துக் கூறுவாயாக! நிச்சயம் நீ புகழுடையோன், மேன்மையுடையோன். யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் நீ பரக்கத்துச் செய்தது போன்று, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தார் `மீதும் பரக்கத்துச் செய்வாயாக! நிச்சயம் நீ புகழுடையோன், மேன்மையுடையோன்.!

யா அல்லாஹ்! உலகத்தார்களில் இப்றாஹீம் (அலை) அவர்களின் மீதும், அன்னாருடைய கிளையார் மீதும் நீ சலவாத்தும், பரக்கத்தும், கிருபையும் அருளியது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாருடைய கிளையார் மீதும் சலவாத்தும், பரக்கத்தும், கிருபையும் அருள்வாயாக! நிச்சயம் நீ புகழுக்குரியவன்; மேன்மைக்குரியவன்.

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் நீ சலவாத்துச் சொல்லியது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்கும், மேன்மைக்கும் உரியவன் யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் நீ வழங்கிய பரக்கத்தைப் போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் பரக்கத்து வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்கும் மேன்மைக்கும் உரியவன்.

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் நீ சலவாத்துச் சொல்லியது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்கும், மேன்மைக்கும் உரியவன் யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் நீ வழங்கிய பரக்கத்தைப் போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் பரக்கத்து வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்கும் மேன்மைக்கும் உரியவன்.

salawat

யா அல்லாஹ்! உன்னுடைய அடியாரும், தூதரு மாகிய உம்மீ நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாருடைய குடும்பத்தினர் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! யா அல்லாஹ்! முஹம்மத
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் உனக்குப் பொருத்த மாகவும், அன்னாருக்கு நற்கூலியாகவும், அன்னாருடைய கடமையை நிறைவேற்றுவதாகவும் ஆகிவிடும் சலவாத்தாக சலவாத்துச் சொல்வாயாக! வஸீலாவையும், சிறப்பையும் அன்னாருக்கு நீ வாக்களித்துள்ள மகாமே மஹ்மூதையும் அவர்களுக்கு நீ தந்தருள்வாயாக! அன்னாருடைய தகுதி க்குத் தக்கவாறு எம் சார்பாக அவர்களுக்கு நற்கூலியை வழங்குவாயாக! ஒரு நபிக்கு அவருடைய கூட்டத்தினர் உம்மத்தினர் ஒரு ரசூலுக்கு அவருடைய சார்பாக நீ வழங்கும் நற்கூலியில் சிறந்ததை அன்னாருக்கு நீ வழங்குவாயாக! அன்னாருடைய சகோதரர்களான நபிமார்கள், ஸாலிஹீன்கள் அனைவர் மீதும் நீ சலவாத்துச் சொல்வாயாக! கிருபையாளர்களில் மிகுந்த கிருபையாளனே!

யா அல்லாஹ்! உம்மீ நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் நீ சலவாத்துச் சொல்லியது போல, உம்மீ நபியான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் நீ பரக்கக் செய்வாயாக! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர்க களுடைய குடும்பத்தினர் மீதும் நீ பரக்கத்துச் செய்ததைப் போல; நிச்சயமாக நீ புகழ் மிக்கவன்; மேன்மை மிக்கவன்.

2222222222222222222222222222222222222222222222222222222222222222222

மஅஹும் ஸலவாத்துல்லாஹி வஸலவாத்துல் முஃமினீன அலா முஹம்மதினின் னBபிய்யில் உம்மிய்யி!

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீது நீ ஸலவாத்துச் சொல்லியது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாருடைய அஹ்லெ பைத்துகளின் மீதும் சலவாத்துச் சொல்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன்; மேன்மைக்குரியவன்.
யா அல்லாஹ்! அவர்களுடன் எங்களின் மீதும் நீ சலவாத்து அருள்வாயாக! யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீது நீ பரக்கத்துச் செய்தது போல், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அன்னாருடைய அஹ்லெ பைத்துகள் மீதும் பரக்கத்துச் செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன்; மேன்மைக்குரியவன். யா அல்லாஹ்! அவர்களுடன் எங்களுக்கும் நீ பரக்கத்துச் செய்வாயாக! அல்லாஹ்வின் சலவாத்துகளும் முஃமின்களின் சலவாத்துகளும் உம்மீ நபியான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது உண்டாவதாக!

யா அல்லாஹ்! இப்றாஹீம் (அலை) அவர்களுடைய கிளையார் மீது உன்னுடைய சலவாத்துகளையும், ரஹ்மத்தையும், பரக்கத்துகளையும் நீ அருளியது போன்று, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாருடைய கிளையார் மீதும் அவற்றை அருள்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன்; மேன்மை மிக்கவன். இன்னும் இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும், அவர் களுடைய கிளையார் மீதும் நீ பரக்கத்துச் செய்தது போன்று, முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களுடைய கிளையார் மீதும் பரக்கத்துச் செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவன்; மேன்மையானவன்.

وَ صَلَّى اللهُ عَلَى النَّبِي الْأُمِّي

வஸல்லல்லாஹு அலன்னBபிய்யில் உம்மிய்யி.
25.உம்மீ
சொல்வானாக!
நபியின் மீது அல்லாஹ் சலவாத்துச்
பதினைந்து ஸலாம்கள்

التَّحِيَّاتُ اللهِ وَالصَّلوات والطيبات السلام عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *