ஸூரத்துத் தஹ்ர்


மதனீ, வசனங்கள்: 31


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْـٴًـــا مَّذْكُوْرًا‏

ஹல் அதா அலல் இன்ஸானு ஹீனு மினத்தஹ்ரி லம் யகுன் ஷைஅன் மத்கூரா


. திட்டமாக மனிதன் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍۖ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًۢا بَصِيْرًا‏

இன்ன ஹலக்னல் இன்ஸான மின் நுத்ஃபத்தின அம் சாஜின் னப்தலிஹி ஃபஜஅல்னாஹு சமீஅன் பசீரா


. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம்; அவனை நாம் சோதிப்பதற்காக; னைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

اِنَّا هَدَيْنٰهُ السَّبِيْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا‏

இன்ன ஹதைனாஹு ச்சபில இம்மா ஷாகிரன் வஇம்மா கஃபுரா


. நிச்சயமாக நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றியுள்ளவனாக இருக்கின்றான்; அல்லது, (அதைப் புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.

اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَا۟ وَاَغْلٰلًا وَّسَعِيْرًا‏

இன்ன அஹ்தத்னா லில் காஃபீரீன சலாசிலன் வஅஹ்லாலன் வசயீரா


. நிராகரிப்பாளர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்துவிட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.

اِنَّ الْاَبْرَارَ يَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا‌ۚ‏

இன்னல் அப்ரார யஸ்ரபுன மின் கஹ்சின் கான மிஜாஜுஹா காஃபுரா


. நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளையிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும்.

عَيْنًا يَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ يُفَجِّرُوْنَهَا تَفْجِيْرًا‏

ய்னைய் யஸ்ரிபு பிஹா இபாதுல்லாஹி யுஃபஜ்ஜிருனஹா தஃப்ஜீரா


. (அது) ஒரு நீரூற்று; அதிலிருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துவார்கள்; அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள்

يُوْفُوْنَ بِالنَّذْرِ وَيَخَافُوْنَ يَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِيْرًا‏

யுவ்ஃபுன பின்னந்நத்ரி வயஹாஃபுன யவ்மன் வகான சர்ருஹு முஸ்ததீரா


. அவர்கள்தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறைவேற்றி வந்தவர்கள்; ஒரு நாளை அவர்கள் அஞ்சுவார்கள்; அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏

வயுத்இமுன த்துஆம அலா ஹுப்பிஹி மிஸ்கீனன் வயதீமன் வாஸீரா


மேலும், அவ்விறைவன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைக்கும், அநாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.

اِنَّمَا نُطْعِمُكُمْ لِـوَجْهِ اللّٰهِ لَا نُرِيْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا

شُكُوْرًا‏

இன்னமா நுத்இமுக்கும் லிவஜ்ஹி ல்லாஹு லநுரிதும்மின்கும் ஜஷாஅன் வலா சுகுரா


“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ, (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).

اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا يَوْمًا عَبُوْسًا قَمْطَرِيْرًا‏

இன்ன நஹாஃபு மின் ரப்பினா யவ்மன் அபுவ்சன் கம்தரீரன்

. “எங்கள் இறைவனிடமிருந்து (எங்கள்) முகங்கள் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்).

فَوَقٰٮهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْيَوْمِ وَ لَقّٰٮهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا‌ۚ‏

ஃப வகாஹு முல்லாஹு சர்ர த்தாலிக்க ல் யவ்மி வலகாஹும் நஸ்ரத்தன் வசுருவ்ரா


. எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு முகச் செழுமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பான்.

وَجَزٰٮهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِيْرًا ۙ‏

வஜஷாஹும் பிமா சபருவ் வஜன்னத்தன் ஹரீரா


. மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்குச் சுவர்க்கத்தையும், பட்டாடையையும் அவன் (நற்)கூலியாகக் கொடுத்தான்.

مُّتَّكِـِٕـيْنَ فِيْهَا عَلَى الْاَرَآٮِٕكِ‌ۚ لَا يَرَوْنَ فِيْهَا شَمْسًا

وَّلَا زَمْهَرِيْرًا‌ۚ‏

முத்தகீன ஃபீஹா அல ல் அராய்க்க லா யரவ்ன ஃபீஹா ஷம்ஷன் வலா சம் ஹரீரா


அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங்குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.

وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِيْلًا‏

வதா னியத்தன் அலைஹிம் லில்லுஹா வதுல்லிலத் குதுவ்ஃபுஹா தத்லிலா


. மேலும், அதன் (மர) நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.

وَيُطَافُ عَلَيْهِمْ بِاٰنِيَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِيْرَا۟ؔ ۙ‏

வயுதாஃபு அலைஹிம் பிஆனியத்தின் மின் ஃபில்லத்தின் வஅக்வாபின் கானத் கவாரீரா


. (பானங்கள் -) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் அவர்களைச் சுற்றிக் கொண்டுவரப்படும்.

قَوَارِيْرَا۟ؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِيْرًا‏

கவாரிரன் மின் ஃபீல்லதின் கத்தருவ்ஹா தக்தீரா


வெள்ளியினாலான பளிங்குக் கிண்ணங்கள் – அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.

‌ ‌ وَيُسْقَوْنَ فِيْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيْلًا ۚ‏

வயுஸ்கவ்ன ஃபீஹா கஹ்ஸன் கான மிஷாஜுஹா சன் ஜபீலா


மேலும், அ(ச் சுவர்க்கத்)தில் ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்; அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.

عَيْنًا فِيْهَا تُسَمّٰى سَلْسَبِيْلًا‏

அய்னன் ஃபீஹா துஸம்மா சல் சபிலா


‘ஸல்ஸபீல்’ என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.

وَيَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ‌ۚ اِذَا رَاَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُـؤْلُـؤًا مَّنْثُوْرًا‏

வயதுவ்ஃபு அலைஹிம் வில் தானுன் முஹல்லதுன இதா ரைதுஹும் ஹஸிப்தஹும் லுஹ்லுஅன் மன்சுரா


இன்னும், எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி(ச் சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் பரத்தப்பட்ட முத்துக்களாக அவர்களை நீர் எண்ணுவீர்.

وَاِذَا رَاَيْتَ ثَمَّ رَاَيْتَ نَعِيْمًا وَّمُلْكًا كَبِيْرًا‏

வஇதா ரைய்த்த சம்ம ரைய்த்த நயிமன் வமுல்கன் கபிரா


அன்றியும், அங்கு நீர் பார்த்தீராயின், இன்பபோக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்குக் காண்பீர்.

عٰلِيَهُمْ ثِيَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ‌ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ‌ۚوَسَقٰٮهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا‏

ஆலியஹுமு சியாபு சுன்துசின் ஹுல்ருன் வஇஸ்தப்ரகுன் வஹுல்ளு அஸாவிர மின் ஃபில்லதின் வசகாஹும் ரப்புக்கும் சராபன் தஹுரா


அவர்களின் மீது ‘ஸுன்துஸு’, ‘இஸ்தப்ரக்’ போன்ற பச்சை நிற பட்டாடைகள் இருக்கும்; இன்னும், அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.

اِنَّ هٰذَا كَانَ لَـكُمْ جَزَآءً وَّكَانَ سَعْيُكُمْ مَّشْكُوْرًا

இன்ன ஹாதா கான லகும் ஜஷாஅன் வகான சஹ்யுகும் மஸ்குரா


“நிச்சயமாக இது உங்களுக்கு (நற்)கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் நன்றிக்குரியதாகி (அங்கீகரிக்கப்பட்டு)விட்டது” (என்று அவர்களிடம் கூறப்படும்).

اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَيْكَ الْقُرْاٰنَ تَنْزِيْلًا ۚ‏

இன்னா நஹ்னு நஸ்ஸல்னா அலைக்க ல் குர்ஆன தன்சீலா


நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.

فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا‌ۚ‏

ஃபஸ்பிரு லிஹுகுமி ரப்பக்க வலா துதிவு மின்ஹும் ஆசிமன் அவ் கஃபுரா


ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர்பார்த்து) இருப்பீராக! அன்றியும், அவர்களிலிருந்து எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் கீழ்ப்படியாதீர்!

وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِيْلًا ۚ  ۖ‏

வத்குர் இஸ்ம ரப்பக்க புக்ரத்தவ் வஅஸீலா


. காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை நினைவுகூர்வீராக!

وَمِنَ الَّيْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيْلًا‏

வமினல்லைலி ஃபஸ்ஜுது லஹு வசப்பிஹு லைலன் தவிலா


இன்னும், இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக! அன்றியும், இரவில் நெடுநேரம் அவனைத் தஸ்பீஹ் (துதி) செய்வீராக!

اِنَّ هٰٓؤُلَاۤءِ يُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَيَذَرُوْنَ وَرَآءَهُمْ يَوْمًا ثَقِيْلًا‏

இன்ன ஹாவுலாயி யுஹிப்புனல் ஆஜீலதன் வயதருன வராஅஹும் யவ்மன் சகீலா


நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்றுவிடுவர்; (தாம் இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்; அப்பால், பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.

نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ‌ۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِيْلًا‏

ஹ்னு கலக்னாஹும் வசசதத்னா அஸ்ரரஹும் வஇத் சிஹ்னா பத்தல்னா அம்சாலஹும் தப்தீலா


நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய படைப்பின் அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்; அன்றியும், நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டுவருவோம்.

اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ‌ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ سَبِيْلًا‏

இன்ன ஹாதிஹி தத்கிரதுன் ஃபன் ஷாஅ அத்தஹத இலா ரப்பிஹி சபிலா


நிச்சயமாக இது ஓர் உபதேசமாகும்; எனவே, யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன்பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக!

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا  ۖ

வமா தஸாவுன இல்லா அய்யஸாவு ல்லாஹூ இன்னல்லாஹ கான அழிமன் ஹகீமா

. எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

يُّدْخِلُ مَنْ يَّشَآءُ فِىْ رَحْمَتِهٖ‌ؕ وَالظّٰلِمِيْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًا

யுத்ஹிலு மை யஷா வு ஃபீ ரஹ்மதிஹி வல்லாலிமீன அ அத்தலஹும் அதாபன் அழீமா

அவன் தான் விரும்புவோரை தன்னுடைய அருளில் புகுத்துகிறான்; அன்றியும், அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்

த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *