பிறப்பு
கி.பி.570ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் பிறை 12 மக்காவில் பிறந்தார்கள். பாட்டனார் அப்துல் முத்தலிப் ‘அவர்கள் முஹம்மது’ (புகழப்பட்டவர்) என்று பெயரிட்டார். இப்பெயர் எவருக்கும் இதற்கு முன் சூட்டப்படவில்லை. பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் தந்தை அப்துல்லாஹ்வை இழந்தார்கள். (அநாதை) பிறந்த ஆறாம் ஆண்டு தன் தாய் ஆமினா அம்மாவை இழந்தார்கள். தாய் “அஹ்மது” (புகழுக்குரியவர்) என அழைத்தார்கள்.
ஆறு வயதிலிருந்து எட்டு வயது வரை பாட்டனார் அப்துல் முத்தலிப் வளர்த்தார்கள். எட்டாம் வயதில் அப்துல் முத்தலிப் மரணித்தவுடன் தாயையும், தந்தையையும், தந்தையின் தந்தையையும் இழந்து ஒரு ஓரத்தில் அநாதையாக நின்று அழுது கொண்டிருந்தார்கள்.
வளர்ப்பு
யார் வளர்ப்பது என்ற கேள்வி எழுந்தது. தந்தையுடன் பிறந்த பெரிய தந்தை அபூதாலிப் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். மூன்று ஆண்டுகள் ஆடு மேய்த்தார்கள். (நபியாவதற்கு முன் மனிதக் கூட்டத்தை அல்லாஹ்வுடைய பட்டியில் கொண்டு வந்து சேர்ப்பதற்காக எல்லா நபிமார்களும் ஆடு மேய்த்துப் பயிற்சி பெற்றார்கள்) 12ஆம் வயதில் தனது பெரிய தந்தையுடன் வியாபாரத்திற்காக ஸிரியா (ஷாம்) சென்றார்கள்.
இளம் வயதில் எல்லா மக்களிடமும் நற்பண்புகளுடன் பழகுவார்கள். மது அருந்திய
தில்லை, சிலைகளை வணங்காதது மட்டுமல்ல; முற்றிலுமாக வெறுத்தார்கள். இல்லாதவருக்கும், எளியோருக்கும் உதவுவார்கள்.
விருந்தினரை உபசரிப்பார்கள். வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராக இருந்ததால் அல்அமீன் (நம்பிக்கையாளர்) என மக்கள் அழைத்தனர். 24ஆம் வயதில் செல்வச்சீமாட்டி கதீஜா நாயகியின் வணிகப் பங்குதாரராக வியாபாரம் செய்தார்கள். 25ஆம் வயதில் கதீஜா நாயகியை (வயது 40) மணந்தார்கள். இப்ராஹீமைத் தவிர மற்ற அனைவரும் அன்னை கதீஜாவுக்குப் பிறந்தவர்கள். முதல் குழந்தை காஸிம். எனவே பெருமானார் ‘அபுல் காஸிம்’ என அழைக்கப் பட்டார்கள். பிறகு ஜைனப், ருகைய்யா, உம்மு குல்ஸூம், பாத்திமா, அப்துல்லாஹ் ஆகியோர் பிறந்தனர். இந்த அப்துல்லாஹ்வுக்கு தய்யிப், தாஹிர் என்ற வேறு பெயர்களும் உண்டு. பாத்திமாவைத் தவிர அனைவரும்நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முன்பே மரணமடைந்து விட்டனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணத்திற்குப் பின் ஆறு மாதம் கழித்து ஃபாத்திமா (ரலி) மரணமடைந்தார்.
நபி
35ஆம் வயதில் கஅபத்துல்லாஹ் புதுப்பிக்கப்பட்ட சமயம் ஹஜருல் அஸ்வத் கல்லை வைப்பதில் சச்சரவு வந்த போது நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர்வையை விரித்து அதன் நடுவே கல்லை வைத்து அனைத்து கோத்திரத்தாரின் தலைவர் களை ஓரங்களைப் பிடித்து தூக்குமாறு கூறிபிரச்சனையைத் தீர்த்தார்கள்.
37ஆம் வயதில் தனிமையில் இறை தியானம்.
ஹிராக் குகைசென்றார்கள். நபித்துவத்தின் மக்கா வாழ்க்கை
(13 ஆண்டுகள் கி.பி.610-622)
நபித்துவம் :
40ஆம் வயதில் ஹிராக் குகையில் திருக்குர்ஆனின் ஐந்து வசனங்கள் ஜிப்ரயீல் (அலை) மூலமாக அருளப்பட்டது. இறுதித்தூதராக பிரகடனம் ஆனார்கள். (கி.பி.610)
பணி
செய்யத்
நபித்துவத்திற்குப் பின் மூன்று ஆண்டுகள் இரகசியமாக இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு பணி செய்தார்கள். நபித்துவத்தின் நான்காம் ஆண்டு பகிரங்கமாக அழைப்புப் தொடங்கியவுடன் மக்கா குறைஷியர்களால் பரிகசிக்கப்பட்டார்கள்; இழிவுபடுத்தப்பட்டார்கள்; எள்ளி நகையாடப்பட்டார்கள். ஜோசியக்காரர், பைத்தியக்காரர், கவிஞர், சூனியக்காரர் என தூற்றப்பட்டார்கள்.
5வது ஆண்டு நபித்தோழர்கள் குறைஷியர் களின் கொடுமையைத் தாங்காமல் அபிஸீனியா (எதியோப்பியா)விற்கு ஹிஜ்ரத் – இடம் பெயர்ந்து சென்றார்கள். 6வது ஆண்டு ஹம்ஜா (ரலி) உமர் ஆகிய இருவரும் இஸ்லாத்தை
(ரலி) தழுவினார்கள்.
7வது ஆண்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை குறைஷிகளிடம் கொல்லுவதற்கு ஒப்படைக்க மறுத்ததால் ஹாஷிம் மற்றும் முத்தலிப் கிளையாரிடம் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என உடன்படிக்கை எழுதப்பட்டு கஅபாவில் தொங்கவிடப்பட்டது. அபூதாலிப் கணவாயில் மூன்று ஆண்டுகள் முழுக் குடும்பமும் பசி பட்டினியால் வாடியது.
10வதுஉடன்படிக்கையை
ஆண்டு கரையான் தின்று அழித்துவிட்டது. கணவாயி லிருந்து வெளியேறிய ஆறாவது மாதத்தில் அபூதாலிப் மரணமடைந்தார். அடுத்து இரண்டு மாதங்களில் அன்னை கதீஜா (ரலி) மரணமடைந் தார். எனவே இது துயர ஆண்டு என வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
தாயிஃப் செல்லல்
மக்காவில் எந்த ஆதரவும் இல்லாததால் மக்காவிலிருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள தாயிஃபிற்குச் சென்றார்கள். பத்து நாட்கள் தங்கி தீனுடைய அழைப்புப் பணி செய்தார்கள். எவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. கல்லால் அடித்து ஊரை விட்டு விரட்டி விட்டனர். முத்இம் என்பவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மக்காவில் அடைக்கலம் தர பொறுப்பேற்றார். அதன் பின் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மக்காவில் நுழைந்தனர்.
11வது ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தில் மினாவின் அகபா என்னுமிடத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரவு நேரத்தில் மதீனா வாசிகள் ஆறு நபர்களைச் சந்தித்து தீனின் பக்கம் அழைக்க அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
12வது ஆண்டுஹஜ்ஜில் முஸ்லிம் எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது. முஸ்அப் இப்னு உமைர் (ரலி) முதல் அழைப்பாளராக மதீனா அனுப்பப்பட்டார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் விண்ணுலக மிஃராஜ் பயணம் நடைபெற்றது.
13வது ஆண்டு ஹஜ்ஜில் எண்ணிக்கை 70 ஆனது. மதீனாவில் இரண்டு குடும்பத்தைத் தவிர அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினர். அகபா ஒப்பந்தம் செய்யப்பட்டது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனா வந்து விட்டால் தங்கள் மனைவி மக்களைப் பாதுகாப்பது போல் நபியைப் பாதுகாப்போம் என மதீனா வாசிகள் வாக்குறுதியளித்தனர். இதையறிந்த மக்கா குறைஷிகள் பெருமானாரை கொலை செய்ய முயன்றனர். இறையாணைப்படி மதீனா ஹிஜ்ரத் செய்தனர். ஹிஜ்ரத் : மதீனா வாழ்க்கை (10 ஆண்டுகள்) கி.பி.622-32
ஹிஜ்ரீ முதல் ஆண்டு
மதீனா நுழையும் முன்னர் குபா என்ற இடத்தில் மஸ்ஜிதே குபா கட்டினார்கள். நான்குநாட்கள் தங்கினார்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ கடமையாக்கப்பட்டது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மதீனா நுழைந்தவுடன் ‘யத்ரிப்’ என்ற பெயருடைய நகரம் “மதீனத்துந் நபி” நபிகளாரின் நகரம் என்று அழைக்கப்பட்டது. மதீனாவில் ‘மஸ்ஜிதுந்நபவி – நபிகளார் கட்டிய பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.
ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு
நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால் அவர்களை எதிர்த்துப் போர் புரிய அனுமதிக்கப்பட்ட குர்ஆன் வசனம் இறங்கியது. பத்ருப் போர் ஸஹாபாக்கள் 313 பேர் – மக்கா குறைஷிகள் 1000 பேர். 313, ஆயிரத்தை வென்றது. பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. கிப்லா கஅபாவின் பக்கம் மாற்றப்பட்டது.
ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு உஹதுப் போர்
ஸஹாபாக்கள் 700 பேர், எதிரிகள் 3000 பேர். வெற்றிதோல்வியின்றிபோர் முடிவுறுகிறது. 70 ஸஹாபாக்கள் ஷஹீதாக்கப் பட்டனர்.
ஹிஜ்ரீ நான்காம் ஆண்டு
இரண்டாம் பத்ருப் போர் ஸஹாபாக்கள் 1500 பேர். அபூஸுப்யான் 2000 மக்காவாசி களை அழைத்துக் கிளம்பி, படையினர் பயத்தால் நடுங்கியதால் போர் செய்யாமல் திரும்பி விட்டனர்.
ஹிஜ்ரீ ஐந்தாம் ஆண்டு
அகழ்ப்போர், அபூஸுப்யான் 4000 வீரர்களுடன் போர் தொடுத்தார். மதீனாவை சுற்றிஅகழ் வெட்டப்பட்டது. எதிரிப்படை முற்றுகை யிட்டது. அல்லாஹ் அவர்களை விரட்ட இரவில் பலத்த காற்றை அனுப்பினான். அக்காற்று அவர்களின் கூடாரங்களைக் கழற்றி வீசியது. பாத்திரங்களை தலை கீழாய்ப் புரட்டியது. எதிரிகள் நிலை குலைந்து பயத்தால் காலை விடிவதற்குள் ஓடி விட்டனர்.
ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு –
ஹுதைபிய்யா உடன்படிக்கை
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உம்ரா செய்வதற்காக 1500 தோழர் களுடன் புறப்பட்டார்கள். மக்கா குறைஷிகள் மக்காவினுள் நுழைய விடாமல் தடுத்ததால் ஹுதைபிய்யா என்ற இடத்தில் உடன்படிக்கை செய்யப்பட்டது. இவ்வாண்டு திரும்பிச் சென்று அடுத்த ஆண்டு வந்து மக்காவில் மூன்று நாட்கள் மட்டும் தங்கலாம் என உடன்படிக்கை எழுதப்பட்ட தால் திரும்பி விட்டனர். இவ்வாண்டு மது ஹராமாக்கப்பட்டது. இவ்வாண்டில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அரசர்களுக்கும், ஆளுநர்களுக்கும் தீனின் பக்கம் அழைத்து கடிதம் எழுதினார்கள்.
ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு –
கைபர் போர்
முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த கைபர் நகரம் மையமாக விளங்கியதால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்ட 1400 தோழர்களுடன் கைபர் மீது போர் தொடுத்தனர். ஹலரத் அலீ (ரலி) அவர்களின் வீரச் செயல்களால் அல்லாஹ் வெற்றியை வழங்கி னான். ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்ட தோழர்களுடன் மக்கா சென்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உம்ரத்துல் கழாவை நிறைவேற்றினார்கள்.
ஹிஜ்ரீ எட்டாம் ஆண்டு
மக்கா வெற்றிநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 10,000 தோழர்களுடன் புறப்பட்டு வாளெடுத்துப் போரிடாமல் மக்காவை வெற்றி கொண்டனர். இவ்வாண்டில் மக்கா வெற்றிக்கு முன்பு முஃதா போர் நடைபெற்றது. மக்கா வெற்றிக்குப்பின் ஹுனைன் யுத்தம் நிகழ்ந்தது.
ஹிஜ்ரீ ஒன்பதாம் ஆண்டு –
தபூக் போர்முஸ்லிம்களை தாக்குவதற்காக ரோமானி யர்களும், கஸ்ஸானியர்களும் மதீனா நோக்கிவருவதை அறிந்து 30,000 தோழர் களுடன் புறப்பட்டு தபூக் சென்றடைந்தனர். இஸ்லாமியப் படையை சந்திக்க துணிவின்றி எதிரிகள் பல திசைகளில் சிதறி ஓடி விட்டனர். இவ்வாண்டு ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) தலைமையில் ஹஜ்ஜுக்குச் சென்றனர். ஹஜ்ரத் அலீ (ரலி)யும் உடன் சென்றார்கள். இந்த ஆண்டிற்குப்பின் முஷ்ரிக்குகள் எவரும் மக்கா வரக்கூடாது. நிர்வாணமாக கஅபாவை எவரும் வலம் வரக் கூடாது என அறிவிப்புச் செய்யப்பட்டது.
ஹிஜ்ரீ பத்தாம் ஆண்டு
ஹஜ்ஜத்துல் விதா! நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஜ்ஜு செய்ய செல்வதை அறிந்து மக்கள் கூட்டங்கூட்டமாகப் புறப்பட்டார்கள். அரஃபா மைதானத்தில் 1,24,000 அல்லது 1,44,000 முஸ்லிம்கள் ஒன்று கூடினர். பெருமானார் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள். இறுதியாக “இங்கு வந்திருப்பவர்கள், வராதவர் களுக்கு இச்செய்தியை எத்தி வையுங்கள்!” என்ற
நபியின் பொறுப்பை இந்த உம்மத்திடம் ஒப்படைத்தார்கள்.
இறுதிப் பயணம் –
ஹிஜ்ரீ 11வது ஆண்டு
ஹஜ் முடித்து மக்கா திரும்பும் போது ஜூரம் ஏற்பட்டது. துல்ஹஜ் – ஹிஜ்ரீ 11 முஹர்ரம், ஸபர், ரபீயுல் அவ்வல் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு பிறை 12, திங்கட்கிழமை “அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக. என் மீது கருணை காட்டுவாயாக. உயர்ந்த நண்பனுடன் என்னை சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே எனது உயர்ந்த நண்பன்” எனக் கூறியவர்களாக, 63வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஹஜ்ரத் அலீ (ரலி) புனித உடலை குளிப்பாட்டினார்கள். வெள்ளை நிற பருத்தி ஆடையால் கஃபன் போர்த்தப்பட்டு எந்த இடத்தில் உயிர் பிரிந்ததோ அதே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ஆதார நூல் : ரஹீக்