مُنَاجات
ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் உருக்கமான பாவமன்னிப்பு வேண்டுதல்
جَدّ بلُطْفِكَ يَا الهِي مَنْ لَهُ زَاد قَلِيل مُفْلِسٌ بِالصِّدْقِ يَأْتِي عِنْدَ بَابِكَ يَا جَلِيل
ஜுத் பிலுத் Fபிக யாஇலாஹீ மன்லஹூ ஜாதுன் கலீல் முப்லிஸுன் பிஸ்ஸித்கி யஃதீ இன்த பாபிக யாஜலீல்
எனது நாயனே! நற்செயல் என்னும் சாதனத்தை மிகக் குறைவாகவே சேமித்திருக்கும் எனக்கு உனது அருட்கொடையைத் தந்தருள்வாயாக.கண்ணியத்திற்குரியோனே! ஏழை அடியானாகிய நான் கள்ளமின்றி உனது வாயிலில் வந்து நிற்கின்றேன்
.اِنَّ لِي ذَنْبًا عَظِيمًا فَاغْفِرِ الذَّنْبَ الْعَظِيمَ انَّنِي شَخْصٌ غَرِيْبٌ مُذِنِبٌ عَبْدٌ ذَلِيْلٌ
இன்னலீ தன்பன் அளீமன் FபஃFபிரித்தன்பல் அளீம் இன்னனீ ஷஹ்ஸுன் ஃகரீபுன் முத்னிபுன் அப்துன்தலீல்
உண்மையிலேயே நான்பெரும் பாவங்களைப் புரிந்துவிட்டேன். அக்கொடிய மன்னித்தருள். பாவங்களைநானோ பரம ஏழை; பாவி; அற்பனான அடிமை
.مِنْهُ عِصْيَانٌ وَنِسْيَانٌ وَسَهْوَ بَعْدَمَا مِنْكَ إِحْسَانٌ وَفَضْلَ بَعْدَ إِعْطَاءِ الْحَزِيلِ
மின்ஹு இஸ்யானு வ்வநிஸ்யானுவ்வஸஹ்வுன் பஃதமா மின்க இஹ்ஸானுவ் வFபள்ளுன் பஃத இஃதாயில் ஜலீல்
உனது அளவற்ற அருட்கொடைகளையும், உதவிகளையும் பெற்ற பின்னரும், உன்னை மறந்து விட்டேன்; அத்துடன் உனக்கு மாறாகவும் நடந்துகொண்டேன்
.طَالَ يَارَتِي ذُنُوبِي مِثْلَ رَمْلٍ لَاتُعَدُّ فَاعْفُ عَنِّي كُلَّ ذَنْب فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ
கால யாரப்பீ துனூபீ மிஸ்ல ரம்லின் லாது அத்து FபஃFபு அன்னீ குல்ல தன்பின் Fபஸ்Fபஹிஸ்ஸFப்ஹல்ஜமீல்
.நான் செய்த பாவங்களோ மணலில் உள்ள துகள்கள் போன்று எண்ணிலடங்காதவை. அவை அனைத்தையும் மன்னித்து, என்னைக் காப்பாற்றுவாயாக
.عَافِنِي مِنْ كُلِّ دَاءٍ وَاقْضِ عَنِي حَاجَتِي إِنَّ لِي قَلْبًا سَقِيمًا أَنْتَ مَنْ يَشْفِي الْعَلِيلِ
ஆபினீ மின்குல்லி தாஇன் வக்ளி அன்னீ ஹாஜதீ இன்னலீ கல்பன் ஸகீமன் அன்த மய்யஷ்Fபில் அலீல்
எனது நோய்கள் அனைத்தையும் குணமாக்கி, எனது தேவைகளனைத்தையும் நிறைவேற்றி வைப்பாயாக.
எனது உள்ளமோ நோய்வாய்பட்டுவிட்டது. நீயோ நோய்களை குணமாக்கக் கூடியவனாக இருக்கின்றாய்
.كَيْفَ حَالِي يَا الهِيَ لَيْسَ لِي خَيْرُ الْعَمَلِ سُوءٍ أَعْمَالِي كَثِيرٌ زَادُ طَاعَتِي قَلِيلٌ
கைFப ஹாலீ யாஇலாஹீ லைஸலீ கைருல் அமல் சூஉ அஃமாலீ கதீருன் ஜாது தாஅதீ கலீல்
.என் நாயனே! நற்செயல்களை சேமித்திராத எனது நிலை என்னவாகுமோ? எனது தீய செயல்களோ அளவிலடங்காதவை; எனது நற்செயல்களோ மிகவும் குறைவு
.قُلْ لِنَارِ ابْرُدِي يَارَبِّ فِي حَفِّيْ كَمَا قُلْتَهَا يَا نَارُ كُونِي أَنْتَ فِي حَقِّ الْخَلِيلِ
குல்லி நாரின் உப்ருதீயாரப்பி Fபீஹக்கீ கமா குல்தஹா யாநாரு கூனீ அன்த Fபீ ஹக்கில் ஃகலீல்
பாதுகாவலனே! நபி இப்ராஹீம் கலீல் (அலை) அவர்களுக்காக நெருப்பை நோக்கி, ஏ நெருப்பே சாந்தியாகவும், குளிராகவும் ஆகிவிடு என்று நீ ஆணையிட்டது போல், எனக்காகவும் ஆணையிடுவாயாக.
انْتَ شَافِي أَنْتَ كَافِي فِي مُهِمَّاتِ الْأُمُورِ انتَ رَبِّي أَنتَ حَسْبِي أَنْتَ لِي نِعْمَ الْوَكِيلُ
அன்த ஷாFபீ அன்த காFபீ Fபீ முஹிம்மாதில் உமூர் அன்த ரப்பீ அன்த ஹஸ்பீஅன்தலீ நிஃமல் வகீல்
நீயே நலம் தருபவன்; முக்கிய செயல் களையெல்லாம் நடத்தி வைக்க நீயே போதுமானவன். எனக்கு மேன்மையான பொறுப்பாளனாகவும் நீயே திகழ்கின்றாய்
.رَبِّ هَبْ لِي كَنْزَ فَضْلِكَ أَنْتَ وَهَّابٌ كَريم أَعْطِي مَا فِي ضَمِيرِي دُلَّتِي خَيْرَ الدَّلِيلِ
ரப்பி ஹப்லீ கன்ஜபள்லிக அன்த வஹ்ஹாபுன்கரீம் அஃதினீ மாFபீ ளமீரீ துல்லனீ கைரத்தலீல்
.எனது பாதுகாவலனே உனது அருட்சுரங்கத்தை எனக்களித்தருள்வாயாக. நீயோ கண்ணியமான கொடைவள்ளலாய் திகழ்கின்றாய்.எனது உள்ளத்தின் தேவையை நிறைவேற்று வாயாக; எனக்கு நல்வழியைக் காட்டியருள்வாயாக..
هَبْ لَنَا مُلْكًا عَظِيمًا نَجِّنَا مِمَّا نَخَافُ رَبَّنَا إِذَانْتَ قَاضِي وَالْمُنَادِي جِبْرَئِيلَ
ஹப்லனா முல்கன் அளீமன் நஜ்ஜினா மிம்மா நகாFப் ரப்பனா இத்அன்த காளீவல் முனாதீ ஜிப்ரயீல்ல
நாயனே! மகத்தான நல்லாட்சியை எஙகளுக்கு அளித்திடு. எங்களை அச்சத்திலிருந்து காத்தருள்.நீயே தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி தருபவனாகத் திகழ்கின்றாய். உனது கட்டளைகளை அறிவிக்கக் கூடியவராக ஜிப்ரயீல் (அலை) விளங்குகின்றார்கள்
.رَبِّيَ اجْعَلْ لِي نَصِيرًا كَالنَّصِيرِ اسْمَا لَنَا كَالنَّصِيرِ فِي الْقِيمَةِ أَنْتَ لِي نِعْمَ الْوَكِيلُ
ரப்பியஜ் அல்லீ நஸீரன் கந்நஸீரிஸ்மன் லனா கந்நஸீரீ Fபில் கியாமதி அன்தலீ நிஃமல் வகீல்.
எனது நாயனே! எனக்கோர் உதவியாளரை உருவாக்கிக் தருவாயாக. நீ உதவியாளன் என்னும் பெயர் பெற்று விளங்குவது போன்று, மறுமையிலும் அவ்வித உதவியாளனாகவே இருப்பாயாக. நீ மேலான பொறுப்பாளனாக விளங்குகின்றாய்.

முனாஜஆத்