அல்லாஹ்வின் உதவியை இறக்கும் முனாஜாத்
بسمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ ان ابطَتْ غَارَةُ الْأَرْحَامِ وَابْتَعَدَتْ عَنَّا فَأَسْرَعُ شَيْءٌ غَارَةُ اللهِ(1) இன் அப்தஅத் காரதுல் அர்ஹாமி வப்த அதத் அன்னா பஅஸ்ரஉ ஷையின் காரத்துல்லாஹி |
يَا غَارَةَ اللَّهِ حُتَّى السَّيْرَ مُسْرِعَةً في حَلِّ عُقْدَ تِنَايَا غَارَةَ اللهِ(2) யா காரதல்லாஹி ஹுத்திஸ் ஸைர முஸ்ரி அதல் ஃபீ ஹல்லி உக்ததினா யா காரத்தல்லாஹி |
ضَاقَتُ أَحَاطَتُ بِنَا فِي كُلِّ نَاحِيَةٍ وَأَظْلَمَتْ جُلَلًا وَالْحَمْدُ لِلَّهِ(3) ளாகத் அஹாதத் பினா ஃபீ குல்லி நாஹியதின் வ அழ்லமத் ஜுலலன் வல்ஹம்து லில்லாஹி |
لَمْ نَرْ تَجِي كَشْفَ ، ضُرِّ ثُمَّ حَادِثَةٍ فِي كُلِّ نَائِبَةِ الأَمِنَ اللَّهِ(4) லம் நர்தஜீ கஷ்ப ளுர்ரின் தும்ம ஹாதிஃதத்தின் பீ குல்லி நாஇபத்தின் இல்லா மினல்லாஹி |
فَتْقُ بِهِ فِي مُلِمَّاتِ الْأُمُورِ وَلَا تَجْعَلْ يَقِينَكَ يَوْمًا غَيْرَ مَا اللَّهِ(5) ஃபஃதிக் பிஹி ஃபீமுலிம் மாத்தில் உமூரிவலா தஜ்அல் யகீனக்கயல் மன்ஙைர மல்லாஹி |
انَّ الشَّدَائِدَ فَهُمَا ضَاقَتِ الْفَرَجَتْ لا تَقْنِطَنَّ إِذَا مِّنْ رَّحْمَةِ اللَّهِ(6) இன்னஷ் ஷதாஇத மறமா ளாகதின் ஃபரஜத் லா தக்னிதன்ன இதன் மின் ரஹ்மத் தில்லாஹி |
كَمْ مِّنْ تَطَائِفَ أَوْلَاهَا الإِلهُ وَكَمْ أَشْيَاءَ لَا تَنْحَحِي مِنْ نِعْمَةِ اللَّهِ(7) கம்மின் லதாஇப் அவ்லாஹல் இலாஹு வகம் அஷ்யா அ லா தன்ஹஸீ மின் நிஃமதில்லாஹி |
لَهُ عَلَيْنَا جَزِيلُ الْفَضْلِ مُنْتَشِرًا في كُلِّ جَارِحَةٍ فَضْلَ مِّنَ اللهِ (8) லஹு அலைனா ஜஸீலுல் ஃபலுலி முன் தஷிரன் பீ குல்லி ஜாரிஹத்தின் பள்லு(ன்)ம் மினல்லாஹி |
فَافْزَعُ سَرِيعًا بِقَلْبٍ تُخْرَقٍ وَجِل مُسْتَعْطِفًا خَائِفًا مِّنْ سَطْوَةِ اللهِ(9) பப்ஸஃ ஸரீஅன் பிகல்பி(ன்)ம் முக்ரகி(ன்)வ் வஜிலி முஸ்தஃதிபன் காஇஃப(ன்)ம் மின் ஸத்வத்தில்லாஹி |
وَقُلْ إِذَا ضَاقَتِ الْأَحْوَالَ مُبْتَهِلا بِرَفْعِ صَوْتٍ أَلَا يَا غَارَةَ اللَّهِ(10) வகுல் இதா ளாகத்தில் அஹ்வாலு முப்தஹிலா பிரஃப்இ ஸவ்த்தின் அலா யா காரத்தல்லாஹி |
وَلِّي خَنَاقِي الَّذِي قَدْ ضَاقَ فِي عَجَلٍ وَنَفْسِي كُرْبَتِي يَا غَارَةَ اللَّهِ(11) ஃபுக்கீ கனாகில்லதீ கத்ளாக்க ஃபீ அஜலின் வநஃப்பிஸீ குர்பத யா காரதல்லாஹி |
مَا لِي مَلَاظٌ وَلَا ذُخْرُ الْوُذُبِهِ وَلَا عِمَادُ وَلَا حِرْنُ سِوَى اللَّهِ(12) மாலீ மலாஃது(ன்)வ் வலா துக்ருன் அலூஃது பிஹி வலா இமாதுன் வலா ஹிர்ஸுன் ஸிவல்லாஹி |
أَرْجُوهُ سُبْحَانَهُ أَن لَّا يُخَيِّبَ لِي ظَنَّا فَحَسْبِيَ مَا أَرْجُوهُ فِي اللَّهِ(13) அர்ஜூஹுஸுப்ஹானஹு அன்லா யுஃகய்யிபலீ ளன்னன் ஃபஹஸ்பிய மா அர்ஜூஹு ஃபில்லாஹி |
وَكَمْ وَحَتَّى وَكَمْ هُذَا التَّوَانِ وَلَمْ كَمْ أَيُّهَا النَّفْسُ إِعْرَا ضَاعَنِ اللَّهِ(14) வகம் வஹத்தா வகம் ஹாதஃத் தவானி வகம் கம் அய்யுஹன் நப்ஃஸு இஃராளன் அனில்லாஹி |
اهِ عَلَى عُمُرِ مِنِّي مَضَى فَرَطًا سَبَهُلَلًا لَّمْ يَكُنْ فِي طَاعَةِ اللَّهِ(15) ஆஹின் அலா உமுரின் மின்னீ மளா ஃபரதா ஸபஹ்லலன் லம்யகுன் பீதாஅத்தில்லாஹி |
الوُمُ نَفْسِي وَقَلْبِي رُبَّمَا رَجَعَا عَنِ الْمَعَاصِي بِتَوْفِيقِ مِّنَ اللَّهِ(16) அலூமு நப்ஸீ வ கல்பீ ருப்பமா ரஜஆ அனில் மஆஸீ பிதவ்பீகி(ன்)ம் மினல்லாஹி |
فَرُبَّمَا بَكَيَا خَوْفَ الذُّنُوبِ وَمَا قَدْ اسْلَفَا مِنْ خَطِيَّاتٍ إِلَى اللهِ(17) ஃபருப்பமா பகயா ஃகவ்ஃபத் ஃதுனூபி வமா கத் அஸ்லஃபா மின் ஃகதிய்யாதின் இலல்லாஹி |
يَا نَفْسِ قُولِي إِذَا ضَاقَ الْخَنَاقُ أَلَا يَا غَارَةَ اللهِ حُتَّى غَارَةَ اللهِ (18) யா நப்ஸி கூலீ இதா ளாகல் கனாகு அலா யா காரதல்லாஹி ஹுத்தீ காரதல்லாஹி |
لا تَيَاسِي نَفْحَةً تَأْتِي فَرُبَّتَبَا تَأْتِيكَ بَعْدَ إِيَاسٍ رَحْمَةُ اللهِ(19) லா தய்அஸீ நப்ஹதன் தஃதீ பருப்பதமா தஃதீக பஃத இயாஸின் ரஹ்மத்துல்லாஹி |
الصَّبْرُ دِرْعُ حَصِينَ مَنْ تَدَرَعَهُ يَكْفِي الْمَكَارِةَ وَالْأَسْوَا مِنَ اللَّهِ(20) அஸ்ஸப்ரு திர்உன் ஹஸீனுன் மன் ததர்ரஅஹு யக்ஃபில் மகாரிஹ வல்அஸ்வா மினல்லா |
فَاسْتَعْمِلِ الصَّبْرَ فِي مَا جَاءَ مِنْ تَعَبَ فَلَيْسَ بِالصَّبْرِ تَخْفَى نِعْمَةُ اللَّهِ(21) பஸ்தஃமி லிஸ்ஸப்ர பீ மாஜாஅ மின் தஅபின் பலைஸ பிஸ்ஸப்ரி தக்பா நிஃமதுல்லாஹி |
مَا اسْتَعْمَلَ الصَّبْرَ إِنْسَانَ ذَلَّ بِهِ رَأيَّا وَلَا جَانَ بُوسٌ مِّنَ اللهِ(22) மஸ்தஃமலஸ் ஸப்ர இன்ஸானுன் பளல்ல பிஹி ரஃயன் வலா ஜாஅஹு பூஸும் மினல்லாஹி |
الصَّبْرُ فِي جُمْلَةِ الْأَشْيَاءِ شياء مغتنم وَصَاحِبُ الصَّبْرِ مَحْمُودُ لَدَى اللَّهِ(23) அஸ்ஸப்ரு பீ ஜும்லதில் அஷ்யாஇ முக்தனமும் வசாஹிபுஸ் ஸப்ரி மஹ்மூதுன் லதல்லாஹி |
فَلَمْ تَزَلُ طُولَ مَا عُمِدْتَ مُتَّكِلا فِيمَا يَنُوبُكَ مِنْ أَمْرٍ عَلَى اللَّهِ(24) ஃபலம் தஸல் தூல மா உ மி த்த முத்தகிலா ஃபீமா யனூபுக மின் அம்ரின் அலல்லாஹி |
ثمَّ الصَّلُوةُ بِمَحْمُودِ الصَّلاةِ عَلَى محَمَّدِ الْمُصْطَفَى مِنْ خِيرَةِ اللَّهِ(25) ஃதும்மஸ் ஸலாத்து பிமஹ்மூதிஸ் ஸலாத்தி அலா முஹம்மதினில் முஸ்தஃபா மின் ஃகீரதில்லாஹி |
وَالْآلِ وَالصَّحْبِ ثُمَّ التَّابِعِينَ لَهُمْ في سُنَّةِ الْمُجْتَبَى ذِي سُنَّةِ اللهِ(26) வல்ஆலி வஸ்ஸஹ்பி ஃதும்மத் தாபிஈன லஹும் ஃபீ ஸுன்னதில் முஜ்தபா ஃதீ ஸுன்னத்தில்லாஹி |
مَا حَتحَتْ الرَّكْبُ مُؤْتَمَّا لِكَاظِمَةٍ تَبْغِي جَوَارَ النَّبِي الْهَادِي إِلَى اللهِ(27) மா ஹஃத்ஹஃதர் ரக்பு முஃதம்மன் லிகாளிமதின் தப் ஜிவாரன் நபில் ஹாதீ இலல்லாஹி |
الْحَمْدُ لِلَّهِ حَمْدًا دَائِمًا أَبَدًا والْحَمْدُ لِلَّهِ ثُمَّ الْحَمْدُ لِلَّهِ(28) அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் தாஇமன் அபதா ஹம்து லில்லாஹி ஃதும்மல் ஹம்து லில்லாஹி |
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ عَلَى مَا كَانَ يُلْهِمُنِي الْحَمْدُ لِلَّهِ(29) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன அலா மாகான யுல்ஹிமுனீ அல்ஹம்து லில்லாஹி |
தமிழாக்கம்
அல்லாஹ்வின் நல்லுதவியை இறக்கும் துஆ பைத்து தர்ஜமா
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனு மான அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்.
(1) உற்றார் உறவினரின் உதவியெல்லாம் தயக்கமாகி நம்மைவிட்டு அற்றுப்போனதும், விரைந்தோடி வரு வது அல்லாஹ்வின் நல்லுதவியேயாகும்
.(2) அல்லாஹ்வின் நல்லுதவியே, அல்லாஹ்வின் சகாயமே, விரைந்து வா! எங்களைப் பீடித்துள்ள துன்ப முடிச்சுகளை அகற்றி எங்களுக்கு நிம்மதி அளிக்க விரைந்து வா!
(3) திசைகளிலும் துயரங்கள் எம்மைச் சூழ்ந்து நெருக்குகின்றன. வாழ்வின் பெரும் பகுதியை இரு ளாக்கிவிட்டன. எந்த நிலையிலும் சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
(4) துயரம், சோதனை, விபத்துகள் போன்ற எது நிகழ்ந்தாலும், அதை விட்டு விடுதலை பெற அல்லாஹ்வையன்றி வேறு எதனிடமும் ஆதரவு வைக்கவில்லை நாங்கள்
(5) எனவே, காரியங்களில் ஏற்படும் அனைத்து சிரமங்களி லும் (அவை நீங்குவதற்கு அல்லாஹ்வாகிய) அவனைக் கொண்டே முழு நம்பிக்கை கொள்வாயாக! அல்லாஹ் அல்லாத மற்றவற்றின் மீது ஒரு நாளும் உன் நம்பிக்கையை வைத்திடாதே!
(6) தொல்லைகள் வந்தால் அவை அல்லாஹ்வின் நல்லரு ளாலேயே வந்திருக்கலாம். அவை அகன்று விடுபவை தாம். எனவே, அவை வந்த தருணத்தில் நீ மெய்யுறுதியை இழந்துவிடாதே!
(7) அளவிலா அருட்கொடைகளையும் செல்வங்களையும் அல்லாஹ் உன்மீது சொரிந்துள்ளான்.(o) அல்லாஹ்வின் அளவிலா அருட்கொடைகள் நம்மில் பரந்து கிடக்கின்றன. நமது அவயவங்களில் எல்லாம் அவனுடைய அருட்கொடைகள் ததும்பிக் கொண்டிருக் கின்றன.
(9) யாவையும் ஆட்சி செய்யும் அல்லாஹ்வின் வல்ல மைக்கு அஞ்சியவனாகவும், அவன் அருளில் நல்லாத ரவு வைத்தவனாகவும் மனமுருகி அவன் பக்கம் அடைக்கலம் தேடி விரைந்து வா!
(10) துன்பங்கள் உன்னை நெருக்குமாயின், மனம் உருக, சப்தமான உயரிய தொனியில் ‘யாகாரத் தல்லாஹ்’ (அல்லாஹ்வின் நல்லுதவியே) என்று அழை!
(II) ‘அல்லாஹ்வின் நல்லுதவியே’ என் தொண்டையை நெருக்கிக் கொண்டிருக்கும் துயரை உடனே அகற்றி வை’ என்று முறையிடு.
(12) அல்லாஹ்வின் இடத்திலன்றி எனக்கு ஒதுங்கும்படி யான வேறு புகலிடமோ, ஆதரவோ பாதுகாவலோ இல்லை
(13) பரிசுத்தனான அல்லாஹ்விடமே நான் ஆதரவு வைக்கி றேன். எனது எண்ணங்கள் கலப்பு அடையாமலிருக்க அவனிடமே புகலிடம் தேடுகிறேன்; அவனிடம் ஆதரவு தேட அவனே எனக்குப் போதுமானவன்.
(14) மனமே, எத்தனை காலந்தான் அல்லாஹ்வை அணுகு வதில் தாமதிப்பாய், அவனை விட்டு அப்பாலான புறக்கணிப்பில் எத்தனை காலந்தான் உழல்வாய்.
(15) அல்லாஹ்வின் வழிபாட்டில் ஈடுபடாமலும், அவ னுக்கு உவப்பான அமல்களைச் செய்யாமலும் கழிந்துவிட்ட என் வாழ்நாட்களை எண்ணி நான் வேதனை அடைகிறேன்.
(16) பாவச் சேற்றில் அழுந்திக் கிடக்கும் என் மனத்தையும், ஆத்மாவையும் பழிக்கிறேன். இறைவனின் நல்லுதவி யால் பாவங்களிலிருந்து நீங்கள் மீட்சி பெறுவது எக்காலம்!
(17) மேலும் நீங்கள் செய்த தவறுகளையும், பாவங்களை யும் நினைத்து அழுது திருந்துவது எக்காலம்!
18) மனமே, துன்பங்கள் தொண்டையை நெருக்குமாயின், ‘யா-காரதல்லாஹ்! அல்லாஹ்வின் நலுதவியே, விரைந்து வா என்று அழைப்பாயாக!
(19) மனமே, அல்லாஹ்வின் நல்லுதவியில் அற்றுவிடாதே! அல்லாஹ்வின் ரஹ்மத் ஆதரவு மயம் நீ ஆதரவு அற்றுப்போன பின்னரும் உன்னைத் தேடி வரலாம்.
(20) பொறுமை அல்லாஹ்வின் பாதுகாவல் பெற்ற கவசமாகும். அது தன்னை அணிபவருக்கு தீங்குகளை விட்டும் கார்மானம் நல்குகிறது சகல
(21) எனவே, கஷ்டம் வந்த காலையில் பொறுமையுடன் இரு. அல்லாஹ்வின் அருட்கொடை பொறுமைக்கு மறைவானதன்று. (அதாவது பொறுமை அல்லாஹ் வின் அருட்கொடைகளை உன் மீது சொரியும்.)
(22) பொறுமையைக் கைக்கொண்டவன் அதனால் வழிதவ றவே மாட்டான்; அவனைத் துன்பமும் தொடராது.
(23) क பொருட்களிலும் விரும்பித் தேடப்படுவது பொறுமையேயாகும். பொறுமையானவன் அல்லாஹ் வின் சந்நிதியில் போற்றலுக்கு உரியவன் ஆவான்.
(24) எனவே சோதனை வருங்காலை அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடியவனாக ஆகிவிடு; யாவையும் அவனிடமே ஒப்படைத்துவிடு!
(25) அல்லாஹ்வின் அடியார்களில் சிரேஷ்டரான முஹம் மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் மீது ‘ஸலவாத்’ எனும் புகழப்பட்ட கருணை உண்டாவதாக!
(26) நபி பெருமானாரின் கிளைர்கள், தோழர்கள் மீதும் தாபியீன்கள் மீதும் ‘ஸலவாத்’ என்னும் நல்லாசி உண்டாவதாக!
(27) அல்லாஹ்வின் பக்கல் வழிகாட்டும் நபி (ஸல்) அவர்களுடைய சகவாசத்தில் நாட்டமான ஆஷிகீன் கள், ‘காழிமா’ எனும் சந்திக்கும் தலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் காலம் வரை நபி (ஸல்) மீதும், அவர்கள் கிளையார்கள் ஆஷிகீன்கள் மீதும் ‘ஸலவாத்து’ என்னும் நல்லாசி உண்டாவதாக!
(28) சர்வ புகழும் என்றென்றும் அல்லாஹ்வுக்கே உரியதா கும். மீண்டும், மீண்டும், சர்வ புகழும் அல்லாஹ் வுக்கே உரியதாகும்.
(29) புகழ் அனைத்தும் சர்வலோக ரக்ஷகனான அல்லாஹ் வுக்கே உரித்தாகும். புகழ் அனைத்தும் அல்லாஹ் வுக்கே உரியதாகும்! என்ற எண்ணத்தை உதிப்பாக்கித் தந்ததற்கான புகழும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
.
