பிஸ்மில்லாஹிர்ராஹ்மானிர்ரஹிம்
ஒவ்வொரு ஆணுடைய வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் எனும் வார்த்தைகளைக் கூறும் அதே சமயம் “பெண் புத்தி பின் புத்தி” என மட்டம் தட்டக் கூடியவர் களை நாம் பார்த்துள்ளோம்.
ஆனால், இவ்வாறில்லாமல் பெண்களை கண்ணியப்படுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்றால் அது மிகையாகாது
இஸ்லாம் வருவதற்கு முந்தைய காலத்தை ஜாஹிலிய்யா (அறியாமை) காலம் எனக் குறிப் பிடுவர். இக்காலத்தில் பெண்கள் இழிவானவர்களாகவும், போகப் பொருளாகவும் பயன்படுத்தப் பட்டனர். பல எல்லையில்லாத் துன்பங்களுக்கும் ஆளாயினர். இதை விட உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளை வளர்ப்பதை இழி வாகக்கருதினர். மேலும், அவற்றை உயிருடன் புதைப்பதை ஒரு வழக்கமாக்கினர்.
பெண்களின் பிறப்பு ஒரு
நற்செய்தி, அவர்களை உயிருடன் புதைப்பது மோசமான காரியம்” எனவும் ஹள்ரத் நபி (ஸல்) அவர் கள் மூலமாக வல்ல அல்லாஹ் மனிதர்களுக்குஉணர்த்தினான்
ஹழ்ரத் அனஸ் ரழீ அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், “யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப் பேற்று, கருத்தாக வளர்ப்பாரோ அவரும், நானும் மறுமை நாளில் இப்படித்தான் இருப்போம் என த ம் இரு விரல்களையும் இணைத்துக் காட்டினார்கள்.”
(ஆதாரம் : முஸ்லிம்)
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
யாருக்கு பெண் குழந்தை பிறந்து, அதை உயிருடன் புதைக் காமல், இழிவுபடுத்தாமல் மேலும் தன் பெண் குழந்தையை விட ஆண்குழந்தைகளுக்கு முக்கியத் துவம் காட்டாமல் இருப்பாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழையச் செய்து விடுவான்” என்று (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவூது)
மேலும், அடிமையாக இருக்கும் பெண்களுக்குக்கூட மார்க்கக்
கல்விகற்பித்து, விடுதலை செய்து, அவர்களை திருமணம் செய்து கொள்ளவும் இஸ்லாம் ஆர்வமூட்டியுள்ளது.
1444 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என்று கூறியது இஸ்லாம்!
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
“(இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருட்களில் (அவை] அதிகமாகவோ, குறை வாகவோ இருந்த போதிலும் பெண்களுக்கு பாகமுண்டு.
இது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்
பட்ட பாகமாகும்.”
அல்குர்ஆன் (4: 7)
இதன் முலம் அல்லாஹ் பெண்களை எந்தளவு கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது நமக்கு தெரியவரும்.
இந்து மதத்தில் கணவனை இழந்த பெண்கள் திருமணம் போன்ற சுபகாரியங்களில் பங்கெடுக்க உரிமையில்லை.
இஸ்லாத்தில் அப்படிப்பட்ட இழிநிலை இல்லை. கணவனை இழந்த பெண் 4 மாதம் 10 நாட் கள் இத்தா இருந்தால் (துக்கம் அனுஷ்டித்தால்) மட்டும் போதும். பிறகு மறுமணம் செய்து கொள் ரிமையையும் பெண் களுக்கு இஸ்லாம் கொடுக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான உபாதையான மாத விலக்கு, இக்கால கட்டத்தில்பெண்கள் பலவீனமாக உணர் வார்கள். மற்ற மதங்களில் அந்தப் பெண்களை தீட்டுக்காரி எனும் பட்டம் சூட்டி, வீட் டின் பின்புறம் அடைக்கப்படுவார்கள். வீட்டிற்குள் அந்தப் பெண் வருவதற்கும், சமையல் செய்யவும், குழந்தை களைத் தொடவும் உரிமை மறுக்கப் படும். ஆனால், அந்நிலையிலும் இஸ்லாம் பெண்களுக்கு உரிய உரிமையை வழங்கியுள்ளது.
“ஒரு சமயம் நபி (ஸல்) அவர் கள், பள்ளியினுள் இருந்து கொண்டே. ‘ஆயிஷாவே! தொழுகை விரிப்பை எனக்கு எடுத்துக் கொடு’ என்று கூறிய தற்கு, ஆயிஷா (ரளி) அவர்கள் ‘நிச்சயமாக நான் மாதவிடாய்க் காரியாக உள்ளேன்’ என பதிலளித்தார்கள்.”
அப்போது நபி (ஸல்)அவர்கள் “உன் மாதவிலக்கு
உன் கையில் இல்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹுரைரா (ரளி) அவர்கள் (நூல்: முஸ்லிம் )
இவ்வாறு அழகான நடை முறைகளைக் கொண்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
அல்லாஹ் குர்ஆனில் கூறும் பொழுது
உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன். (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்” (திருக்குர்ஆன்-3:195)
“ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கையாளராக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல் களைச் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச்செய்வோம். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் இருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்” (திருக்குர்ஆன்-16:97)
ஒரு தாய்க்கு இஸ்லாம் கொடுக்குமளவு மரியாதையை யும், கண்ணியத்தையும் வேறு எந்த மதமும் கொடுத்தது இல்லை.
“சுவர்க்கம் தாய்மார்களின் காலடியில் உள்ளது” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
தாய்க்கு அடுத்த ஸ்தானத்தி லிருந்து ஒரு மனிதனை அமைதிப்படுத்துவதும் நல்வழிபடு்த்துவதும் அவனுடைய மனைவியே !!
ஆண்களை விட பெண்களுக்கு அல்லாஹ் தாலா அதிகமான பெறுப்புகளையும் கடமைகளும் கொடுத்துள்ளான்
பள்ளிக்கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள் போட்டித்தேர்வுகள் ஆண்களை விட பெண்கள் தான் அதிக மதிப்பென்கள் எடுத்துவருகின்றனர் இதன் ஆண்களை விட பெண்களுக்கு தான்ஞாபக சக்தி அதிகம் என்பது புறியும்
ஆனால் நாம் இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு விஷயத்தை உண்மைப்படுத்த சாட்சியாக ஒரு ஆண் போதும் அதே சமயம் இரண்டு பெண் சாட்சி ஒரு ஆண் சாட்சி க்கு சமம் என்று இஸ்லாம் கூறுகிறது
ஆண்களை விட பெண்களுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பதை இஸ்லாம் மறுக்கவில்லை
பிறகு ஏன் இந்த வேறுபாடு ???
சாட்சி கூறும் போது உள்ளதை உள்ளபடி மறைக்காமல் கூற வேண்டும் தவறினால் குற்றவாளி நிரபராதி ஆவான்
பெண்களின்மூளையை விடஆண்களின் மூளை100
கிராம் அதிகமாகப் படைக்கப் பட்டுள்ளது. ஆனால், பெண்களின்
படுத்துவதும், நல்வழிப்படுத்து மூளையில் 13% நியூட்ரான்கள்
அதிகமாகப் படைக்கப்பட்டுள்ளது
எனவே தான் குர்ஆனில் அல்லாஹ் தாலா இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்சிக்கு சமம் என்று அருளியுள்ளான்
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக, தற்போதைய பெற்றோர் கள் சிலர் திருமணம் செய்து வைக் கின்றனர். இந்த நவநாகரீக உலகில் கூட இது நீடிக்கிறது.
21ம் நூற்றாண்டில் கூட பெண் களுக்குக் கிடைக்காத உரிமையை 6ம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது. பெண்களின் சம்மதம் அவர் களின்திருமணத்திற்கு அவசியம் என இஸ்லாம் கூறுகிறது.
இவ்வாறு பல்வேறு வகை களில் பெண்களுக்கு விலை மதிப்பில்லாத அளவில் மதிப்பை இஸ்லாம் மார்க்கம் வழங்கியுள்ளது.
, எனவே, நம்முடை பெண் குழந்தைகளை மகிழ்வோடும்
கண்ணியத்தோடும் வளர்ப்போம்.
மேலும், இஸ்லாத் தின் உயர்வான, உண்மையான கருத்துக்களை எட்டுத் திக்கும் எடுத்துரைக்கும் மனிதர்களில் ஒருவராக ஆவோம்!