கதிஜா (ரலி)

பெண்களின் தலைவி

ஹஸ்ரத் கதீஜா (ரலி)

ஈருலகத் தலைவர் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களின் ஹதீஸிற்கு ஏற்ப, அண்ணலார் (ஸல்) அவர்கள் முதலில் மணம் முடித்த மனைவி – முஃமின்களின் தாய் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் சொர்க்கத்தின் பெண்களுக்கு தலைவி ஆவார்கள். ஒருமுறை ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்: “ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் பாத்திரத்தில் ஏதோ கொண்டு வருகிறார்கள், தாங்கள் அவர்களிடம் இறைவனுடைய மற்றும் என்னுடைய ஸலாமை கூறிவிடுங்கள்”. (ஜாமிஉஸ்ஸகீர் லிஸ்ஸயூத்தி பாகம் : 2, பக்கம் : 2, இஸ்தியாப் பாகம் : 2, பக்கம் : 740) இன்னொரு சந்தர்ப்பத்தில் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஹஸரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஹஸ்ரத் நபிகள் நாயம் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்: “அவர்களுக்கு முத்துக்களால் ஆன சொர்கத்தின் வீட்டைப் பற்றிய ஒரு நற்செய்தி கூறுங்கள்”, (உஸ்ஸதுல் காபா பாகம் : 5, பக்கம் : 438, கதீஜா என்ற சொல்லின் கீழ் காண்க)

இந்த வாழ்த்துக்குரிய சொற்களின் ஊற்று சந்தேகத்திற்கு இடமின்றி இறை அறிவிப்பு ஆகும். ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் வாழ்க்கை, இறை அறிவிப்பின் சாராம்சமாகும்.

காரணம் என்னவென்றால், ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்களின் கூற்றின்படி, “இஸ்லாத்தின் சொர்க்கம் என்பது, இவ்வுலகின் நம்பிக்கை மற்றும் செயல்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பால் உண்டாவதாகும். அது வெளியே இருந்து வந்து மனிதனுக்கு கிடைக்கக் கூடிய புதிய பொருள் அல்ல. மனிதனின் சொர்க்கம் மனிதனுக்குள்ளிருந்தே வெளிப்படுகின்றது. மேலும் ஒவ்வொருவருடைய சொர்க்கமும் அவருடைய நம்பிக்கை மற்றும் அவரவருடைய நற்செயல்களே ஆகும்”. (இஸ்லாமிய போதனைகளின் தத்துவ ஞானம்). ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் தூய வாழ்வை ஏதாவதொன்றோடு ஒப்பிட்டுக் கூறுவதாக இருந்தால் அதனை பளிச்சென்று பிரகாசித்து ஜொலிக்கும் முத்துக்களால் ஆன ஒரு மாளிகைக்கு ஒப்பிட்டுக் கூறலாம். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு, ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களும் ஒப்புமையற்ற முத்துப்போன்று காணக் கிடைக்கின்றது.

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் பிரபல்யமான குறைஷி கோத்திரமாகிய பனூ அஸதின் குலவிளக்காகத் திகழ்ந்தார்கள். அழைப்புப்பெயர் உம்மே ஹிந்த் ஆகும். தகப்பனார் பெயர் குவைலித்; தாயாரின் பெயர் பாத்திமா பின்த் ஸாயிதா ஆகும். ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களுடைய பரம்பரை மூன்று வழிகளில் நபி (ஸல்) அவர்களுடைய பாட்டனாருக்கு பாட்டனாராகிய ஜனாபே கஸ்ஸீ வரை சென்றடைகின்றது. ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய பிறப்பிற்கு 15 வருடம் முன்னதாக,

பெண்களின் தலைவி ஹஸ்ரத் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா)

கி.பி. 555-ல் பிறந்தார்கள். விழிப்புணர்வை அடைந்த பருவத்தை எட்டியபோது தனது உயர்ந்த நல்லொழுக்கத்தின் காரணமாக ‘தாஹிரா’ என்ற பெயரால் பிரபலமடைந்தார்கள்.

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களுடைய முதல் திருமணம் அபூஹாலா என்பவரோடு நடந்தது. கணவருடைய மரணத்திற்குப் பிறகு, அவர்கள் அத்திக் பின் ஆயிஸோடும் பின்னர் ஸஃபீ பின் உமய்யாவோடும் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபீயும் வஃபாத்தானார்கள். இவ்வாறாக அவர்கள் மூன்றாம் முறையும் விதவை ஆனார்கள். (தபக்காத்துப்னி ஸஅத் :கதீஜா (ரலி) – வாழ்க்கை) இந்தக் காலகட்டத்திலேயே அரேபியர்களுக்கிடையே ஹர்புல் ஃபுஜ்ஜார் என்ற போர் மூண்டது. இதில் அவர்களின் தகப்பனாரும் கொல்லப்பட்டார்கள். கணவன் மற்றும் தந்தை ஆகிய இருவரின் மரணத்தால் அன்னார் மிகுந்த கவலைக்குள்ளானார்கள்,

அவர்களுக்கிருந்த வாழ்வாதாரம் வியாபாரம் ஆகும். அதனைக் கண்காணிப்பவர் எவரும் இருக்கவில்லை. எனவே அவர்கள் தமது உறவினர்களுக்கு சம்பளம் கொடுத்து சிரியா போன்ற நாட்டிற்கு வியாபரத்திற்காக அனுப்பி வந்தார்கள். பாரம்பரிய மரபுகளுக்கு ஏற்ப அவர்கள் இயல்பாகவே வாரிவழங்கும் மனப்பான்மையுடையவராகவும், தயாள குணம் உடையவராகவும் இருந்தார்கள். தன்னுடைய செல்வத்தை ஏழைகள், தேவையுடையவர்கள், அனாதைகள் மற்றும் விதவைகளின் நலனுக்காக எவ்வித தயக்கமுமின்றி வழங்கி

வந்தார்கள். (ஸீரத்துஸ் ஸஹாபியாத் பக்கம் 21,22) அன்னாருடைய இந்த நற்செயல் அல்லாஹ்வுக்கு எந்த அளவுக்கு பிடித்தமானதாக இருந்தது என்றால், அன்னாருடைய காலடியில் செல்வமும் பணமும் குவிந்தன. மக்காவில் அனைத்து வியாபாரங்களும் அன்னாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததுபோல் ஆயிற்று. அரேபியாவில் அன்னாருடைய செல்வாக்கு நெடுந்தூரம் வரை பரவியது.

ஒருமுறை விற்பனைப் பொருள்களை அனுப்பி வைக்க வேண்டிய நேரம் வந்தபொழுது ஹஸ்ரத் அபூதாலிப் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம், ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களைச் சென்று சந்திக்கும் படியும், சிரியா செல்லும் அன்னாருடைய விற்பனைப் பொருட்களுடன் தாங்கள் செல்வது நல்லது எனவும் கூறினார்கள்.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடைய நேர்மை,

தூய்மை மற்றும் நாணயம் ஆகியவற்றைப் பற்றிய பொதுவான பேச்சு மக்களிடையே இருந்து வந்தது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அமீன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள். ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களுக்கு இது பற்றிய செய்தி கிடைத்த உடனேயே, தாங்கள் எனது வியாபாரப் பொருட்களை எடுத்துக் கொண்டு சிரியா செல்லுங்கள்; நான் மற்றவர்களை விட தங்களுக்கு இரு மடங்கு ஈட்டுத்தொகை தருகிறேன் என தகவல் அனுப்பினார்கள். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இந்த உடன்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள்.

கதீஜாஅவர்கள் தனது அடிமையான மைஸராவை அவர்களுடன் அனுப்பி வைத்தார்கள். இந்தப் பயணத்தில் ஆச்சரியமான, மறைவான பரக்கத்துக்கள் வெளிப்பட்டன. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடைய துஆக்கள், யோசனைகள் மற்றும் நேர்மையின் விளைவாக விசித்திரமான முறையில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து பெரும் பலன்கள் ஏற்பட்டன. இந்த நிகழ்வு ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் உள்ளத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பையும். நேசத்தையும் பெருக்கெடுத்து ஓடச் செய்தன.

இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறை மைஸராவுடன் வியாபாரப் பொருட்களை எடுத்துக் கொண்டு சிரியாவிற்குச் சென்றபோது, பயணத்தில் பஸ்ரா என்னுமிடத்தில் நஸ்தூரா என்ற துறவி ஒருவர் மைஸராவிற்கு தனது தொலைநோக்குப் பார்வையின் மூலமாக நபி (ஸல்) அவர்களே (நாம்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நபியும், இறுதிக்காலத்தின் தூதரும் ஆவார்கள் என்ற செய்தியைக் கூறினார்கள்.

மைஸரா அவர்கள் தாமும், இரண்டு மலக்குகள் சிறகுகளால் நபி (ஸல்) அவர்கள் மீது நிழலிட்டுக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்தார்கள். மேலும் ஒரு வியக்கத்தக்க வி-யம் என்னவென்றால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு திரும்பியபோது ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் வருவதையும் இரண்டு மலக்குகள் நபி (ஸல்) அவர்கள் மீது நிழலிட்டிருப்பதையும் கண்டார்கள். ஹஸ்ரத்

கதீஜா (ரலி) அவர்கள் மற்ற பெண்களுக்கு இந்தக் காட்சியைக் காண்பித்த போது அவர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

இதற்குப் பிறகு மைஸராவும் தனது பயண நிகழ்வுகளை கூறியவுடன் ஒரு நம்பகமான தோழியின் வாயிலாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம், ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் திருமணத்திற்கு விண்ணப்பித்தார்கள். அதனை நபி (ஸல்) அவர்கள் சிறிது தயக்கத்திற்குப் பிறகு ஏற்றுக் கொண்டார்கள். ஹஸ்ரத் அபூதாலிப் அவர்கள் 500 திர்ஹம் மஹரில் இருவருக்கும் மணம் முடித்து வைத்தார்கள். அது வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு 25 வயதாகவும். ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களுக்கு 40 வயதாகவும் இருந்தது. ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் அனாதைகளின் மாணிக்கமாக விளங்கிய ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் காலடியில் தமது எல்லாச் சொத்துகளையும், செல்வத்தையும் எவருடைய தூண்டுதலும் இல்லாமலேயே ஒப்படைத்துவிட்டார்கள். இதன் பக்கமே வ வஜதக ஆயிலன் ஃபஅக்னா என்ற வசனமும் சுட்டிக் காட்டுகின்றது. (பொருள்: அவன் உம்மைப் பெரும் குடும்பத்தை உடையவராகக் கண்டு, செல்வம் நிறைந்தவராக ஆக்கினான் (93:9)) ஹஸ்ரத் முஸ்லிஹ் மவ்வூது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் சூழ்நிலைகளை கவனமாக பார்க்கும் போது தெரிய வருவது என்னவென்றால்,

பெண்களின் தலைவி லூஸ்ரத் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா)

அவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை மட்டும் வைத்திருந்த பெண்மணி அல்ல, மாறாக. லட்சாதிபதி ஆவார்கள். தொடர்ச்சியாக அவர்கள் தரப்பிலிருந்து பல்வேறு வியாபாரக் குழுக்கள் வியாபாரத்திற்காக சிரியா நாட்டிற்கு வந்து போயிருந்தார்கள். இவ்வளவு பெரிய வியாபாரத்தை ஒரு லட்சாதிபதியால் மட்டுமே செய்ய முடியம். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் அந்த ஈடிணையற்ற தியாகத்தின் விளைவாக செல்வத்தின் குவியல்கள் கிடைத்ததும் அண்ணலார் (ஸல்) அவர்கள் அந்த எல்லா செல்வத்தையும் சமுதாயத்தின் ஏழைகள், அனாதைகள், வறியவர்கள் என்று எல்லாருக்கும் தனது மனங்குளிர விநியோகம் செய்து விட்டார்கள். (தஃப்ஸீர் கபீர், பக்கம் 106)

நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தனவோ அவையனைத்தும் (ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்களைத் தவிர) ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் அருளுக்குரிய வயிற்றிலிருந்து தான் பிறந்தன. அல்லாஹ், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்களின் மூலமாக மூன்று ஆண் குழந்தைகளையும், நான்கு பெண் குழந்தைகளையும் வழங்கினான். அவர்களின் பெயர், ஹஸ்ரத் காஸிம் (ரலி), ஹஸ்ரத் தாஹிர் (ரலி), ஹஸ்ரத் தய்யிப் (ரலி), ஹஸ்ரத் ஸைனப் (ரலி), ஹஸ்ரத் ருகைய்யா (ரலி), ஹஸ்ரத் உம்மு குல்சும் (ரலி) மற்றும் (உம்மே ஹஸ்னைன்) ஹஸ்ரத் ஃபாத்திமத்துஸ் ஸுஹ்ரா (ரலி) என்பதாகும்.

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் அடையாளமாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்து வந்த கால் நூற்றாண்டு கால அளவு, ஆன்மீகத்திற்கே ஒரு புதிய மகத்துவத்தைச் சேர்த்தது. மேலும் திருமண வாழ்க்கை என்ற உலகில் முதன்முறையாக ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள்.

ஒரு ஐரோப்பிய வரலாற்றாசிரியரான எட்வர்ட் ஜே. ஜுர்ஜி எழுதுகிறார்:

“நபி (ஸல்) அவர்களின் வயது 25-க்கு அருகில் ஆனபோது செல்வம் படைத்த, தூய இயல்புடைய, குடும்ப விவகாரங்களை அணுகுவதில் சிறந்த திறமை பெற்றிருந்த ஒரு விதவைப் பெண்ணாகிய ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களோடு திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு உண்மையான நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைத்தது. மேலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மனிதனின் இயல்பையும், அவனது வாழ்வின் நோக்கத்தையும் பற்றிய சிக்கலான பிரச்சனைகள் சம்பந்தமாக தொடர்ச்சியாக சிந்தனை செய்யும் தகுதி பெற்றவர்களாகத் திகழ்ந்தர்கள்”.

நபிமார்களின் நடைமுறைக்கேற்ப நபி (ஸல்) அவர்களுக்கு, பிரபலமான சபைகள் அல்லாமல் தனிமையான இடங்களே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து பல மைல்கள் தூரத்திலிருந்த ஹிரா என்றகுகைக்குச் சென்று வந்ததுடன் பல பகல்களையும் இரவுகளையும் இறை தியானத்திலும், இறை வணக்கத்திலும் கழித்து வந்தார்கள். ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் சரியான ஏற்பாடுகளோடு, சீதோ-ன நிலைகளின் விளைவுகளினால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கக் கூடிய உணவை நபி (ஸல்) அவர்கள் தங்கும் காலகட்டத்தில் அவர்கள் உண்பதற்காக தயார் செய்து கொடுப்பார்கள். உணவு தீர்ந்துபோகும் பட்சத்தில் நபி (ஸல்) அவர்கள் வீடு திரும்பிவிடுவார்கள்.

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் மீண்டும் பயண உணவு தயார் செய்து கொடுப்பார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹிராவிற்கு செல்லும் எண்ணங்கொண்டவர்களாகி விடுவார்கள். ஒருமுறை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களும் ஹிராக் குகையில் இஃதிகாஃப் செய்ய நாடினார்கள். (அல்கஸாயிஸுல் குப்ரா லிஸ்ஸயூத்தி பாகம் 1, பக்கம் 226 – மொழியாக்கப் பிரதி) ரமலான் மாதத்தின் 24 -ம் நாள் திங்கள்கிழமை வாழ்க்கைக்கு மட்டுமல்ல; உலகம் முழுவதிற்கும் ஒரு மாபெரும் புரட்சிக்கான துவக்கம் வெளிப்பட்டது.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழக்கம் போல் மிகுந்த கவனத்துடன் விண்ணைப் படைத்தவனான தனது இறைவனின் நினைவில் மூழ்கியிருந்தபோது, ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) இறங்கினார்கள். அப்போது திருக்குர்ஆன் இறை

அறிவிப்பான 35&பிக் என்ற வசனத்துடன்

இறங்கத் துவங்கியது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மிகுந்த பதட்டத்துடன் ஹிரா குகையிலிருந்து வெளியேறி வீடு திரும்பினார்கள். என் மீது போர்வையைப் போர்த்துங்கள் என்று கூறினார்கள்.

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் தனது தூய கணவரின் மீது உடனே ஆடையைப் போர்த்தினார்கள். சிறிது அமைதி கிடைத்தப் பிறகு நபி (ஸல்) அவர்கள் நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார்கள். என்னைப் பற்றிய பயம் எனக்கு ஏற்பட்டு விட்டது என்று கூறினார்கள். ஆனால், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் முழுமையான பிரகாசத்தையும் மற்றும் இறைவனை காட்டும் மனிதரின் ஆன்மீக விளைவுகளையும் தமது கண்களால் கண்டிருந்த ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் தாமாகவே இவ்வாறு உரக்கக் கூறலானார்கள்.

” كَلَّا وَ اللَّهِ مَا يُخْزِيكَ اللهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الكل وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقَى الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبَ الْحَقِّ له

பொருள்: இல்லை; இல்லை. இறைவன் மீது ஆணையாக! அவ்வாறு ஒருபோதும் நடக்காது. அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவடையச் செய்யமாட்டான். தாங்கள் உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கின்றீர்கள். மக்களின் சுமையைத் தாங்கள் சுமக்கின்றீர்கள். வீழ்ந்துவிட்ட நல்லொழுக்கங்களைதாங்கள்தங்களுக்குள்ஒன்று

சேர்த்துள்ளீர்கள். தாங்கள் விருந்தாளிகளை உபசரிப்பவர் ஆவீர்கள். மேலும் உண்மையான விவகாரங்களில் மக்களின் உதவியாளராக இருக்கின்றீர்கள்.

கதீஜா

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் இந்த சாட்சியம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உண்மைத்துவத்திற்கு நிரந்தரமான அடையாளம் மட்டுமல்ல. மாறாக, இதன் மூலம் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களுக்கு இருந்த கருத்துச் செறிவு இறைவனின் மீது அவர்கள் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை, அன்பு, நுட்பமான பார்வை மற்றும் மார்க்க ஞானம் ஆகியவை தெளிவாகத் தெரிய வருகிறது. இதைப் பார்த்து நமது உள்ளம் துடித்தெழுகிறது. ஏனென்றால், ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூற்றில் எல்லா இறை வேதங்களின் குறிப்பாக திருக்குர்ஆனின் போதனைகளின் மாபெரும் அழகிய பிரதபலிப்பும் இருக்கிது. ஏனென்றால், ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூத் (அலை) அவர்களின் வார்த்தைகளில் கூறுவதாக இருந்தால், திருக்குர்ஆனின் பெரிய கட்டளைகள் இரண்டே ஆகும். கண்ணியமிக்க இறைவனின் ஏகத்துவத்தைப் பறைசாற்றுவதுடன் அவன் மீது அன்பு செலுத்துதலும், கீழ்படிதலும் ஆகும். மற்றொன்று, தனது சகோதரர்கள் மீதும் மக்கள் மீதும் நேசம் கொண்டிருத்தல் ஆகும். (இஸாலாயே அவ்ஹாம் பக்கம் 550)

நுபுவ்வத் வாதம் புரிந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள்

நீரூற்று வெளிப்பட்ட பகுதியான மக்காவின் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள். ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் உளூ செய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே உளூ செய்தார்கள். இதன் பிறகு ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள், அவர்களுடன் ஒன்றாகத் தொழுதார்கள். பிறகு மறைந்து விட்டார்கள். இந்த கஷ்ஃப் காட்சியைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்களுக்கு முன்னால் உளூ செய்தார்கள். பிறகு உடன் இணைத்துக் கொண்டு ஹஸ்ரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதது போன்று தொழுதார்கள். (இப்னு ஹிஷ்-ாம்)

சுருக்கமாக, ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களே இஸ்லாமிய வரலாற்றில் நபி (ஸல்) அவர்கள் மீது முதலில் நம்பிக்கை கொள்ளும் பாக்கியம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்கள். இது மட்டுமல்ல, இறைவனின் மாபெரும் தூதரின் குரலை (தூதை) மற்றவர்கள்வரை சென்றடையச் செய்யும் கடமையையும் (இந்த) உம்மத்தில் முதன் முதலாக கதீஜா (ரலி) அவர்களே செய்தார்கள். நபி (ஸல்) அவர்களை தனது சிறிய தந்தையின் மகன் வரகா பின் நௌஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அவர்கள் ஹிராக் குகையில் நடந்த சம்பவத்தை கேட்டதுமே இது தமது குறிக்கோளில் உறுதியாக நிலைத்து நின்ற ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களிடம் தோன்றிய அதே வானவர் ஆவார் என்று கூறினார்கள். இதன் பிறகு அவர்கள், பஸ்ராவைச் சார்ந்தபஹீரா என்ற துறவி அவர்களுக்கும் நுபுவ்வத்தின் சூரியனின் வெளிப்பாடு பற்றி செய்தியை எடுத்துரைத்தார்கள். (ஸீரத்தே ஹலபியா பாகம் 1, பக்கம் 394)

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத் பற்றிய செய்தி முழு அரபு நாட்டையும் ஆவேசப்படச் செய்தது. நபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்கள் மீது மண் வீசப்பட்டது. கடைவீதிக்குச் சென்றால் ஒழுக்கங்கெட்டவர்கள் கூடி கூச்சலிட்டனர். நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டிற்கு சென்றால், அக்கம் பக்கத்து வீட்டார்கள் அவர்கள் வீட்டின் மீது கற்களை எறிந்தனர். சில வேளைகளில் ஆடுகள் அல்லது ஒட்டகங்களின் குடலையும், மற்ற நாற்றமெடுக்கும் அசுத்தமானவற்றையும் குவித்து வைத்தார்கள்.

இவ்வாறான வேதனையளிக்கும் சூழலிலும், முஃமின்களின் தாயாகிய ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் தமது குழந்தைகளை வளர்ப்பதிலும் தமது அன்பிற்குரிய கணவருக்கு சேவை செய்யும் கடமையையும் நிறைவேற்றினார்கள். இமாம் முஹம்மத் பின் இஸ்ஹாக் இமாமுல் மகாஸீ கூறுகிறார்கள்:

كَانَتْ لَهُ وَزِيرَ صِدْقٍ عَلَى الْإِسْلَامِ يَشْكُرُ إِلَيْهَا وَيُهْلِكُ هَمَهُ

பொருள்: ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாமிய விவகாரங்களில் நபி (ஸல்) அவர்களின் தூய்மையான அமைச்சராக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களின் முன்னிலையில் தமது கஷ்டங்களைக் கூறினால் கதீஜா (ரலி) அவர்கள் ஊக்கப்படுத்தி ஆறுதல் அளித்து வந்தார்கள்.

பெண்களின் தலைவி ஹஸ்ரத் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா)

ஹஸ்ரத் இப்னு அப்துல் பிர்ரில் குர்துபீ கூறுகிறார்கள்:

فَكَانَ لَا يَسْمَعُ مِنَ الْمُشْرِكِينَ شَيْئًا يَكْرَهُ مِنْ رَةٍ عَلَيْهِ وَ تَكْذِيْنَ لَهُ الا فرج اللهُ عَنْهُ بِمَا تَشَيْتُهُ وَ تُصَدقُهُ وَ تُخَفَفُ عَنْهُ وَتَهَوَنُ عَلَيْهِ مَا يُلْقَى مِن

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு இணை வைப்பவர்களின் பொய்ப்படுத்துதல் அல்லது மறுத்தலினால் ஏற்படும் வேதனை அனைத்தும் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களிடம் சென்றவுடன் அகன்றுவிடும். ஏனென்றால் கதீஜா (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தி வந்தார்கள். மேலும் இணை வைப்பவர்களின் விவகாரங்களை நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஒன்றுமற்றவையாக எடுத்துரைப்பார்கள்.

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் வாழ்வின் கடைசி சோதனை நபித்துவத்தின் ஏழாவது ஆண்டில் – முஹர்ரம் மாதத்தில் துவங்கியது. அப்போது மக்காவில் உள்ள குறைஷிகள் முஸ்லிம்களுக்கு எதிராக முறையான ஒப்பந்தம் செய்து ஒருங்கிணைந்த முறையில் சமூகப் புறக்கணிப்பு செய்ய முடிவு செய்தார்கள். மேலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் கதீஜா (ரலி) மற்றும் பிற அநீதி இழைக்கப்பட்ட சஹாபாக்களும் “ஷீஃப் அபீதாலிப்” என்னும் இடத்தில் (ஒரு மலைப் பகுதியான இடத்தில்) முற்றுகை இடப்பட்டார்கள். முற்றுகையிடப்பட்ட அக்காலத்தின் கஷ்டங்கள் இறுதிநாளை விட குறைவானதாக

இருந்ததில்லை. அப்போது நிகழ்ந்த சம்பவங்களையும், காட்சிகளையும் இன்று நினைத்துப் பார்த்தாலும் உள்ளம் நடுங்கி, மனம் உடைந்துபோகும் அளவுக்கு அந்தக் காலம் மிகவும் வேதனை மிகுந்ததாக இருந்தது.

ஹக்கீம் இப்னு ஹிஸ்ஸாம், ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் சகோதரரின் மகன் ஆவார்கள். அவர்கள் அவ்வப்போது தனது மாமிக்காக மறைவாக (யாருக்கும்) தெரியாமல் உணவு கொண்டு செல்வார்கள். ஆனால் ஒருமுறை அபூஜஹிலிற்கு எப்படியோ இது பற்றி தெரிய வந்தபோது துர்பாக்கியசாலியான அவன் பாதையிலேயே அவரை மிக வன்மையாக தடுத்து விட்டான். (இப்னு ஹிஸ்ஸாம் – ஸீரத் காத்தமுன் நபிய்யீன்). இந்த மாபெரும் சோதனை சராசியாக இரண்டறை அல்லது மூன்று வருடங்கள் வரை நீடித்தது. இறுதியாக மக்காவின் சில பெரியோர்களின் தலையீட்டினால் இந்த அநீதி மிகுந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

ஆனால் பசி அதன் விளைவை காட்ட ஆரம்பித்தது, சில நாட்களுக்குப் பிறகு, முதலில் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையார் அபூதாலிப் அவர்களும், பிறகு நபி (ஸல்) அவர்களின் விசுவாசம் மிகுந்த மனைவி ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களும் இந்த வேதனையளிக்கும் துன்பங்களுக்காளாகி காலமானார்கள்.

åே இந்த துயரச் சம்பவம் நபித்துவ

வருடத்தின் பத்தாவது ஆண்டில் ரமலான் மாதம் பத்தாம் தேதி

அன்று நிகழ்ந்தபோது அன்னை கதீஜா (ரலி) அவர்களின் வயது 64 வருடமும், 6 மாதமுமாக இருந்தது. ஜனாஸாத் தொழுகை அப்போது மார்க்கச் சட்டமாக ஆக்கப்படவில்லை. எனவே, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்ணீர் வழியும் கண்களோடும், துக்கம் நிறைந்த மனதோடும் கபரில் இறங்கி தமது அன்புள்ள மனைவியின் உடலை மண்ணிற்கு ஒப்படைத்தார்கள்.

ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் அடக்கஸ்தலம் மக்காவின் வடக்கில் அமைந்திருக்கும் ஹஜ்ஜுன் மலையில் உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கிற்கு இடைப்பட்ட பாதை வழியாகவே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் சமயத்தில் (இறுதி ஹஜ்ஜின் போது) மதீனாவிலிருந்து மக்காவிற்கு வந்தார்கள். ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் கபரின் மீது பல காலமாக ஒரு மரத்தாலான பெட்டி (தாபூதி வைக்கப்பட்டிருந்தது. ஹிஜ்ரி 950 ஆம் ஆண்டு அதன் பாதுகாப்பிற்காக ஒரு பிரமாண்டமான கலசம் (Dome) வைக்கப்பட்டது. அது ஹிஜ்ரி 1298 -ல் பழுதுபார்க்கப்பட்டது. (மிர்அத்துல் ஹர்மைன் பாகம் 1, பக்கம் 30,31 – இந்நூலில் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் கபரின் மேல் கலசத்தின் படம் உள்ளது.)

சில அறிவிப்புகளுக்கு ஏற்ப அதன் அருகிலேயே ஹஸ்ரத் அப்துல் முத்தலிப் மற்றும் அபூதாலிப் அவர்களின் கபர்களும் உள்ளன. மகத்துவமிக்க மக்காவின் இந்த மிகப் பழைமையான அடக்கஸ்தலம் “ஜன்னத்தே முஅல்லா” என்றழைக்கப்படுகிறது.

“ஸூகாவுல் முல்க் அல்லாமா டாக்டர் ஃபரீதூன் ஸமா(ன்) முஹம்மத் ஷிஜ்ஜாஃ” – யின் ஸஃபர் நாமா ஹஜ் வ ஹர் மைன் பக்கம் 322 -லிருந்து தெரிய வருவது என்னவென்றால் “இந்தக் கபரின் கலசம் எழுத்துப்பலகை மற்றும் கட்டடங்கள் யாவும் காலமாற்றத்தின் காரணத்தால் அழிந்து விட்டன, மேலும் இது யாருடைய கபர் என்று தெரியாமல் ஆகி விட்டது” .

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், முஃமின்களின் தாய் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் பிரிவின் துக்கத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கவேயில்லை. வரலாற்றில் பிரபலமான சம்பவம் ஒன்று இவ்வாறு வருகிறது. பதர் போரின் கைதிகளில் நபி (ஸல்) அவர்களின் மருமகன் அபுல் ஆஸ் அவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கான ஈட்டுத் தொகையாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் மகள் ஹஸ்ரத் ஸைனப் (ரலி) அவர்கள் மக்காவில் இருந்தபோது சில பொருட்களை அனுப்பினார்கள். அதில் தன் மகளின் திருமணத்தின் போது நபி (ஸல்) அவர்களின் தூய மனைவி ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் அன்பளிப்பாக கொடுத்திருந்த அந்த மாலையும் இருந்தது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் பார்வை அந்த மாலையில் பட்டவுடன், நபி (ஸல்) அவர்களுக்கு ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களின் நினைவு வந்துவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரால் குளமாயின. (ஸஹீஹ் முஸ்லிம்)

ஹஸரத் ஆயிசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களைப் பார்த்ததில்லை என்றாலும், எனக்கு அவர்கள் மீது எந்த அளவுக்கு பொறாமை ஏற்படுமோ அதுபோன்று வேறு யார் மீதும் பொறாமை ஏற்பட்டதில்லை. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் எப்போதும் அவர்களை நினைவு கூர்ந்து பேசி வந்தார்கள். ஒருமுறை ஹஸ்ரத் ஆயிசா (ரலி) அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் மிகப் பணிவாகக் கூறினார்கள்: அல்லாஹ்வின் ரஸூலே, தாங்கள் இறந்துவிட்ட ஒரு மூதாட்டியை ஏன் நினைவு கூறுகிறீர்கள்? அல்லாஹ் உங்களுக்கு அவர்களினும் நல்ல மனைவிகளை வழங்கியிருக்கின்றானே!

இதைக் கேட்டுவிட்டு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான, மிருதுவான உள்ளத்தில் எப்படிப்பட்ட காயம் ஏற்பட்டதென்றால், அன்னாரின் உணர்வுகள், சகிப்புத் தன்மையை மிஞ்சி வெளியேறிவிட்டது. அப்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வேதனைமிக்க வார்த்தைகளில் இவ்வாறு கூறினார்கள்:

لا واللهِ مَا ابْدَلَنِي اللهُ خَيْرًا مِنْهَا أَمَنَتْ فِي إِذْ كَفَرَ النَّاسُ وَصَدَّ تَتْنِي إِذْكَةٌ بَنِي النَّاسُ وَوَاسَتْني في مَا لَهَا إِذْ حَرَمَنِيَ النَّاسُ وَرَزَقَنِيَ اللهُ مِنْهَا أَولا دا إِذْ حَرَمَنِى أَوْلَادَ النِّسَاءِ له

பொருள்: இறைவன் மீது ஆணையாக! அல்லாஹ் எனக்கு ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்களுக்கு பகரமாக அவர்களை விட சிறந்த எந்தவொரு மனைவியையும் வழங்கவில்லை. மற்றவரெல்லாம் என்னை நிராகரித்தபோது அவர்கள் என் மீது

பெண்களின் தலைவி ஹஸ்ரத் கதீஜா (ரலியல்லாஹு அன்ஹா)

நம்பிக்கை

கொண்டார்கள். மற்றவரெல்லாம் பொய்ப்படுத்திய போது அவர்கள் என்னை

என்னை உண்மைப்

படுத்தினார்கள். மற்றவரெல்லாம் என்னை ஆதரவற்றராக ஆக்கியபோது அவர்கள் தனது செல்வத்தைக் கொண்டு எனக்கு பேருதவி செய்தார்கள். மற்ற மனைவிகளுக்கு குழந்தைச் செல்லத்தை இறைவன் வழங்காதபோது எனக்கு அவர்கள் வயிற்றிலிருந்து குழந்தைகளை வழங்கினான்.

முஃமின்களின் தாயாகிய ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் இன்று இவ்வுலகில் உயிருடன் இல்லை. மேலும் அவர்களுடைய கபரின் அடையாளங்களும் மறைந்து போய்விட்டன. ஆனால் அன்னாரின் செயல் மற்றும் பெயர் ஆகிய இரண்டும் நிரந்தரமாக உயிருடன் உள்ளன. இதைப்போன்றே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாழ்த்துக்குரிய நாவிலிருந்து ஹஸ்ரத் கதீஜா (ரலி) அவர்கள் தொடர்பாக வெளிப்பட்டிருக்கும் புகழுரைகளும் பரந்த வளிமண்டலத்திலிருந்து அழிந்து போகாது. அது நிச்சயமாக, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை நேசிப்பவர்களின் உள்ளத்திலும், மூளையிலும் பாதுகாப்பாக இருக்கின்றது. அது நாம் எழுப்பப்படும் நாள் வரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

ஹஸரத் கதீஜா (ரலி) அவர்கள், கம்பீரமான தூய்மையான நிரந்தர சிம்மாசனத்தில் அமருபவரான உயிருள்ள ரஸூல் மற்றும் அரசருக்கெல்லாம் அரசரான முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களின் முதல் வாழ்க்கைத் துணை என்கிற முறையில் நிச்சயமாக அன்னார் ஈருலக அரசி ஆவார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களைப் படைத்தவன் மேல் ஆணையாக, உலகின் எந்தவொரு மாபெரும் ஆற்றலாலும் அன்னாரின் இந்த ஆன்மீக மகுடத்தை பறிக்கவும் முடியாது. அவர்களின் மறுவுலக அதிகாரத்தைக் குறைக்கவும் முடியாது.

“அழிந்து போகக் கூடியவர்களின் மகத்துவத்திலும், ஆற்றலிலும், ஆயிரம் வீழ்ச்சிகள் வந்தாலும், உம்முடைய ஆட்சியே என்றென்றும் நிலைத்திருக்கும்!”

اللهُمَّ صَلِّ عَلَى سَيّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى أَزْوَاجِ مُحَمَّدٍ وَ عَلَى الِ مُحَمَّدٍ وَبَارِك وَسَلَّمَ إِنَّكَ حَمِيدٌ تَجَيده

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *