தாடியின் நன்மைகள்

தாடி

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றக்கூடிய சமூக உளவியல் துறையைச் சார்ந்தவர் டாக்டர் டேனியல்.

இவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும்,

‘இனப் பெருக்க மதிப்பு” பற்றி ஓர் ஆய்வு மேற் கொண்டார்.

இதை நிரூபிக்க ஒரு காரியத்தை மேற்கொண்டார். அதாவது அவரும், அவரிடம் கல்வி பயிலும் மாணவர்களும் ஒரு சில இளங்கலை பயின்று கொண்டிருக்கும் மாணவர்களிடம் நேர்காணல் கண்டனர். அதாவது, தாடி வளர்ப்பதால் தங்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகிறது? இதுவே அவர்களிடம் நேர்காணலில் கொடுக்கப்பட்ட
கேள்வி.”
ஆய்வில் கலந்து கொண்ட மாணவர் ஒருவர் பல மாணவிகளிடம், “தாடி வைத்த ஆண்களைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்? என்று கேட்க அம்மாணவிகள் கூறும் பதில் என்னவென்று தெரியுமா?
தாடியுள்ள ஆண்களின் முகம், முழுவதுமாக சவரம் செய்த ஆண்களின் மூகத்தைவிட
அதிக ஆண்மைத்தனம் கொண்டதாகவும் முதிர்ச்சித் தன்மை கொண்டதாகவும் வீரமான தோற்றமுள்ளதாகவும் கம்பீரமானதாகவும்
சுதந்திர உணர்வு நிறைந்ததாகவும் வசீகரமானதாகவும் காணப்படுகிறது.”
மேலும் தாடி ஒரு காந்தவிசையாகவும், அதிகம் கவர்ச்சியாகவும், ஆண்களை பெண்களுக்கு ஓர் ஈர்க்கின்ற விதமாகவும் அமைந்துள்ளது.
ஆண்களுக்கு
பெண்களிடம்
சில


எதிர்பார்ப்புகள் உண்டு. அதில் ஒன்று, “நீளமான கூந்தல்” உள்ள பெண்களை ஆண்கள் விரும்புவர்.(ஆனால் என்னவோ, ஆண்களுக்கு பெரும்பாலும் வாய் நீளமான பெண்களே அமைந்து விடுகின்றனர்.) கூந்தல் நீளமாக இருப்பதற்கும் பாலியலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அது ஒரு கவர்ச்சியே! ஆண்களை ஈர்ப்பதற்கு அது ஓர் காரணம். அவ்வாறே தாடியும் பெண்களை ஈர்ப்பதற்கு அது ஓர் காரணம்.
அமெரிக்காவின் பிரபல மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சார்லஸ் என்பவர். ஆண்கள் ஏன் தாடி வளர்க்க கஷ்டப்படுகிறார்கள்? அவர்கள் தலையிைல் முடி வளர்க்கவில்லையா? அதே முடியைத்தானே தாடியில் வளர்க்கப் போகிறார்கள்? இதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது? என்றார்.


தலைமுடி கொட்டி வழுக்கை விழுந்து விட்டால் அதற்காக கவலைப்பட்டு வழுக்கையில் முடி வளர்ந்துவிடாதா? என்று பல மருத்துவம் செய்கிறார்கள். இறுதியில் ஏமாற்றமே மிச்சம். ஆனால் தானாக வளரக்கூடிய தாடியை சவரம் செய்து வழுக்கையாக்கி விடுகிறார்களே? தலையில் வழுக்கை விழுந்தால் வெட்கப்படக்கூடிய, கவலைப்படக்கூடிய இவர்கள் வெட்கம், மானம் இன்றி முகத்தில் வழுக்கையை தானாக ஏற்படுத்துகிறார்களே! இது எவ்வகையில் நியாயம்?

நீண்ட தாடி வளர்ப்பதால் தடுமல், சளி போன்றவை மனிதனை நெருங்குவதில்லை. சுமார் நூறு ஆண்களுக்கு முன்னால் வாழ்ந்தோர் தாடி வளர்த்து அதனைப் பேணி காத்து வந்தனர். அதனால் அவர்கள் மரணத்தை சந்திக்கும் வரை அவர்களின் முக அழகு கெடாமல் பார்ப்பதற்கு பக்தி பரவசமூட்டும் வண்ணம் காட்சி தந்தது.
அவர்கள் கல்லைக் கடித்தாலும் “கல்” சுக்கு நூறாக நொறுங்கியது. அந்த அளவிற்கு அவர்களின் பற்கள் மிகவும் வலுவானதாக, கெட்டியானதாக இருந்தது. (இன்று சாதாரண கரும்பைக்கூட கடித்து சாப்பிட முடியவில்லை. பல் சுக்கு நூறாகி விடுமளவிற்கு பற்கள் பலவீனமாக இருக்கிறது.)
மேலும், முன்னோர்களின் கண்கள் மரணம் வரை கெடாமல் துல்லியமான பார்வையுடையதாக இருந்தது. பார்வையும் மங்கவில்லை. கண்ணில் வியாதியும் வரவில்லை. ஆனால் இன்று நாற்பது வயதை அடைவதற்கு முன்பே இயற்கை பற்கள் விழுந்து செயற்கை பற்கள் கட்டுமளவிற்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. காரணம் என்ன தெரியுமா?

இரவில் படுக்கும் போதே தலைமாட்டில் ஷேவிங் செட்டை வைத்து காலையில் எழுந்தவுடன் முதல் வேலை தாடியை மழிப்பதுதான். இதில் வாலிபம் வயோதிகம் வித்தியாசமில்லை. இதனால், இவர்களின் முகங்கள் சொரசொரப்பான தாகவும், ஒளி மங்கியதாகவும், கலையிழந்தும் வயோதிகத் தோற்றத்துடன் காணப்படுகிறது.

முக அழகு கெடுதல், பல் விழுதல், கண் பார்வை மங்குதல், முகத்தில் சுருக்கம் விழுதல், வாலிபத்தில் வயோதிகத் தோற்றம் ஏற்படுதல் ஆகியவற்றிற்கு தாடியை சிரைப்பதே மூல காரணமாகும்.


காரணம், தாடியின் உரோமக் கால்களுக்கும் பற்களின் வேர் நரம்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முகத்தின் உரோமத்தை சிரைக்க சிரைக்க பற்களின் நரம்புகளின் தொடர்பு, சக்தி, ஆற்றல் குன்றி விடுகிறது. இதனால், பற்களுடைய
நரம்புகளுக்கும் முகத்தின் கால்களுக்கும் உள்ள தொடர்பு பலவீனமடைந்து விடுகிறது. பற்களின் வேர்கள், நரம்புகள் எப்போது பலவீனமாகிவிடுகிறதோ, அப்போது கண்களின் நரம்புகளும் பலம் குன்றி விடுகிறது.


நாளடைவில் மூன்றின் தொடர்புகளும் அறுந்து தனித்தனியாக இயங்க ஆரம்பிக்கின்றன. இறுதியில் தாடியின் உரோமங்கள் உதிர ஆரம்பிக்கின்றன. இதனால் பற்கள் ஆட்டம் போடத் தொடங்குகின்றன. கண்கள் ஒளி மங்க ஆரம்பிக்கின்றது. இதனால் முகம் வசீகரத்தை இழந்து விடுகிறது.
“மூன்று தலைமுறையினர் தொடர்ந்து தாடியை சிரைத்தால் நான்காவது தலைமுறையி னருக்கு முகத்தில் முடியே முளைக்காது” என்று அறிவியல் விஞ்ஞானம் கூறுகிறது.
மேலை நாடுகளில் பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் ஆண்களுடன் (அந்நியர்) சர்வசாதாரணமாக அமர்ந்து கொள்கின்றனர். ஆனால், தாடி வைத்த ஆண்களுடன் அமர்வதில்லை. தாடியை மழிக்கும் ஒருவர் தாடி வைத்துள்ள தன் நண்பரிடம், “தாடி வளர்க்காத எங்களைப் போன்ற ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர். உங்களைப் போன்று தாடி வைத்துள்ள ஆண்களை பெண்கள் விரும்புவ தில்லை” எனவேதான், பேருந்துகளின் உங்களு டன் அப்பெண்கள் அமருவதில்லை என்று பெருமையாகக் கூறினார்.


அதற்கு தாடி வைத்தவர் கூறிய பதில் என்ன தெரியுமா?
தாடி வைத்த எங்களையே அப்பெண்கள் ஆண்களாக கருதுகிறார்கள். எனவேதான் எங்களருகில் அமர்வதில்லை.
ஆனால் தாடி இல்லாத உங்களை அவர்கள் ஆண்களாகக் கருதாமல் தங்களைப் போன்று பெண்களாகவே கருதுகிறார்கள். எனவேதான் உங்களுடன் அப்பெண்கள் ஒன்றாக அமர்ந்து கொள்கிறார்கள் என்று சூடான பதிலைக் கூறினார்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறையினை பின்பற்றி வாழ்ந்தால் ஆன்மிக நன்மை மட்டுமின்றி உலகியல் நன்மைகளும் கிடைக்கும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வழிமுறைகள் ஏராளம் உண்டு. தொழுகைக்காக உளு (அங்க சுத்தி) செய்யும் போது பற்களைத் தேய்ப்பதும், நாசிக்கு தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்வது நபியின் வழிமுறைகளாகும். ஒரு நாளைக்கு ஐங்காலத் தொழுகையின் போது ஐந்து முறைகள் பல் தேய்ப்பதினால் ஏராளமான நன்மைகள் உண்டு. அவற்றைப் பட்டியிலிட இப்புத்தகம் இடம் தராது. அதுபோன்று இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான “பன்றிக்காய்ச்சல்” முஸ்லிம்களிடம் பெரும்பாலும் காணப்படுவதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கிய காரணம் உளு செய்யும் போது நாசியை தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதாகும். இஸ்லாமியர்கள் சுன்னத் (ஆணுறுப்பின் நுனித்தோலை அப்புறப்படுத்துதல்) செய்து கொள்கின்றனர்.


இதனாலும் அநேக நன்மைகள் உண்டு என்பதை உலகமே அறிந்துள்ளது. எனவே, முஸ்லிமல்லாதோரும் அதனை தங்களது ஆண் பிள்ளைகளுக்கு கத்னா செய்ய முன் வருகின்றனர். குறிப்பாக, சுன்னத் செய்து கொள்வதினால் பாலியல் தொடர்பான நோய்கள் ஆண்களுக்கு ஏற்படுவதில்லை.அதிலும்
குறிப்பாக சுன்னத் செய்யப்பட்ட ஆணின் மனைவிக்கு கர்ப்பப்வை புற்றுநோய் நூறு சதவீதம் ஏற்படுவதே இல்லை என்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே அக்குள் பகுதியில் வளரும் முடிகளை மறைவான இடங்களில் வளரும் முடிகளை அகற்றுவதும் சுன்னத் ஆகும். இவற்றின் மூலம் ஏராளமான நன்மைகள் உண்டு.

இன்று ஒவ்வொன்றாக விடப்பட்டு வருகிறது. அதனை நடைமுறைப்படுத்துவதே அதனைப் வழிமுறையாகும். “நபியின் வழிமுறை” கடைசி வரை பின்பற்றப்படுவதற்கு ஏற்றமானதாகும். அதில் குறை கண்டால் அது காண்பவரின் புத்தியில் ஏற்பட்ட குறையே தவிர சுன்னத்தில் எவ்வித குறையும் இல்லை. சுன்னத்தை பின்பற்றி வாழ அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *