ஜும்மாவுடைய நாளைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَ ذَرُوا الْبَیْعَؕ-ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
ஈமான் கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை ஆகிய ஜும்மா தினத்தன்று தொழுகைக்காக( பாங்கு சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால் அப்போது அல்லாஹ்வை நினைவு கூறுவதன் பால் நீங்கள் சென்று விடுங்கள் வியாபாரத்தை விட்டு விடுங்கள் நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும் ( இதனை அறிந்து கொள்வீர்களாக )
இன்னும் நபியவர்கள் கூறினார்கள்
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللهُ بِنَا فَهَدَانَا اللهُ لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ، وَالسَّبْتَ، وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ، نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا، وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ» صحيح مسلم
நபி (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்தவர்களை ஜும்ஆ தினத்தை விட்டும் பாக்கியமிழக்கச் செய்துவிட்டான், யூதர்களுக்கு சனிக்கிழமையும், நஸாராக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இருந்தன. அல்லாஹ் எங்களை அனுப்பி வெள்ளிக்கிழமையைத் தந்தான்.எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிவிட்டது. இதுபோன்றே மறுமையிலும் அவர்கள் எங்களைத் துயர்பவர்களே, உலகில் நாம் கடைசியில் வந்தவர்கள், மறுமையில் முதன்மையானவர்கள், ஏனைய படைப்புகளுக்கு முன்னால் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும். (முஸ்லிம்)
நாட்களில் சிறந்த நாள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்தவர்களை ஜும்ஆ தினத்தை விட்டும் பாக்கியமிழக்கச் செய்துவிட்டான், யூதர்களுக்கு சனிக்கிழமையும், நஸாராக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இருந்தன. அல்லாஹ் எங்களை அனுப்பி வெள்ளிக்கிழமையைத் தந்தான்.எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிவிட்டது. இதுபோன்றே மறுமையிலும் அவர்கள் எங்களைத் துயர்பவர்களே, உலகில் நாம் கடைசியில் வந்தவர்கள், மறுமையில் முதன்மையானவர்கள், ஏனைய படைப்புகளுக்கு முன்னால் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும். (முஸ்லிம்)
நாட்களில் சிறந்த நாள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1548.
அத்தியாயம் : 7. ஜும்ஆ
ஜும்ஆத் தினத்தில் நபிகளார் சுபஹுத் தொழுகையில் ஓதியவை
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் ‘அலிஃப் லாம் மீம் ஸஜ்தா’வையும் ‘ஹல்அதா அலல் இன்ஸான்’ என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர்.
ஸஹீஹ் புகாரி : 891.
அத்தியாயம் :

இன்னும் இந்த ஜும்மாவுடைய நாளில் நாம் செய்ய வேண்டிய 7 முக்கியமான அமல்
1 நகம் வெட்டுதல்
2 நன்றாக குளிப்பது
ஜும்ஆ நாளில் குளித்தல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 897.
அத்தியாயம் : 11.
ஜும்ஆவுடைய தொழுகை தொழுகை எம்மீது கடமையில்லை என்ற போலும் சுத்தத்தை பேணிக்கொள்ள நாம் குளிக்க வேண்டும்.
ஜும்ஆவும் சுத்தமும்…
ஜும்ஆ தினத்தன்று ஒரு முஸ்லீம் தம்மை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம் என்பது பற்றி நமது நாயகம் (ஸல்)அவர்கள் வெகுவாக மொழிந்துள்ளார்கள்.இயல்பாகவே ஒரு முஸ்லீம் சுத்தமாகத்தான் இருப்பான் காரணம் சுத்தம் ஈமானில் பாதி என்பது அனைத்து முஸ்லிம்களும் அறிந்த ஒன்று என்றாலும் ஜும்ஆ தொழுகையில் மஹல்லாவில் உள்ள அனைத்து மக்களும் ஒன்ருகூடுவாகள் பெரும் சனத்திரள் ஒன்றுகூடும் ஓர் இடத்தில் உடலால் சுத்தமாக இருப்பது அவசியத்திலும் அவசியம் என்பதை அனைவரும் ஏற்பர்..
ரஸுல்(ஸல்)அவர்கள் மொழிந்தார்கள்.
أن رسول الله صلى الله عليه و سلم قال ” الغسل يوم الجمعة على كل محتلم والسواك ويمس من الطيب ما قدرله
ஜும்ஆ தினத்தன்று பருவம் எய்திய ஒவ்வொருவர் மீதும் குளிப்பதும்,மிஸ்வாக் செய்(பல் துலக்கு)வதும்,இயன்ற அளவு நறுமணம் பூசிக்கொள்வதும்,கடமையாகும். (அபூ தாவூத்)மேலும் இதைவிட விளக்கமாகவும் விரிவாகவும் சொல்கிறார்கள்
قال النبي صلى الله عليه و سلم
: ( لا يغتسل رجل يوم الجمعة ويتطهر ما استطاع منن طهر ويدهن من دهنه أو يمس من طيب بيته ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ثم ينصت إذا تكلم الإمام إلاغفر له ما بينه وبين الجمعة الأخرى )
ஒரவர் வெள்ளிக்கிழமையன்று குளித்து,தன்னை பூரணமாக சுத்தம் செய்து,எண்ணெய் தேய்த்து,நறுமணம் பூசி,பின்னர் நேரன்காலத்தோடு பள்ளிவாசலுக்கு வந்து,மற்றவர்களை தள்ளாமலும் தொல்லைபடுத்தாமலும் (இருத்தல் வேண்டும்). பின்னர் அவர் (சுன்னத்தான தொழுகைகளை)தொழுது,அமைதியாக உக்கார்ந்து குதுபாவை செவிதாழ்த்தி கேட்பாராயின்,அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி).
3 நன்றாக ஆடை அணிவது
நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய ஆடைகளில் சிறந்த ஆடையை நாம் அணிவது
4 சூரத்துல் கஹ்ஃப் ஓதுவது
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி),நூல் :ஹாகிம்
இன்னும் மற்றொரு அறிவிப்பில் வெள்ளிக்கிழமை அன்று யார் சூரத்துல் கஹுப் ஓதுகிறாரோ தஜ்ஜாலினுடைய தீங்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வார்
5 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் கூறுதல்
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்.
(அல்குர்ஆன் : 33:56)
ஹஜ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களின் விலா எலும்பைக் கொண்டு ஹவ்வா அலைஹிஸ்ஸலாமவர்களை உருவாக்கினான். ஆதம் நபியவர்கள் ஹவ்வாவைக் கண்டபோது, ஹவ்வாவின் மீது ஆசை மேலோங்கவே, ஆதம் நபியவர்கள் அல்லாஹ்விடம், இறைவா! ஹவ்வாவை எனக்கு நிகாஹ் செய்து கொடு எனக் கேட்க, ஆதமே!ஹவ்வாக்குரிய மஹ்ரை முதலில் கொடுத்து விடும் என்று சொன்னான்.
அதற்கு ஆதம் நபி ஹவ்வாக்குரிய மஹர் என்ன? எனக் கேட்க, அதற்கு இறைவன், ஆதமே! அர்ஷின் தலைவாயிலில் எனது பெயரோடு சேர்த்து எழுதப்பட்டுள்ள எனது ஹபீபான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பத்து முறை ஸலவாத்துச் சொல்வீராக. அதுதான் நீர் ஹவ்வாவுக்குச் செலுத்தும் மஹ்ர் என்று கூறிட அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்தை ஓதி ஹவ்வாவுக்கு மஹ்ராகத் தந்தனர்.
அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- “ஜூம்ஆ நாளில் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஸலவாத்து எனக்கு எடுத்து காண்பிக்கப்படுகிறது.”
(ஆதாரம்:- அபுதாவூத்-883)
‘‘உங்களுடைய நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். எனவே நீங்கள் வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனென்றால் உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும்’’ என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன நிலையில் நாங்கள் சொல்கின்ற ஸலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக்காட்டப்படும்?’’ என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், ‘‘இறைவன் நபிமார்களுடைய உடல்களை (சாப்பிடுவதை விட்டும்) பூமிக்குத் தடை செய்து விட்டான்’’என்றார்கள்.
(நூல்:- அபுதாவூத்-1049)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:- “என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்.
(ஆதாரம்:- ஸஹீஹ் முஸ்லிம்-687)
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
(அல்குர்ஆன்:- 33:56)
6 அதிகமாக துஆ செய்யுதல்
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு’ என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். ‘அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுது அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 935.
அத்தியாயம் : 11.
عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ؓ قَالَ: بَيْنَا رَسُولُ اللهِ ﷺ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّي فَقَالَ: اَللّهُمَّ اغْفِرْلِي وَارْحَمْنِي فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ، قَالَ: ثُمَّ صَلَّي رَجُلٌ آخَرُ بَعْدَ ذلِكَ فَحَمِدَ اللهَ وَصَلَّي عَلَي النَّبِيِّ ﷺ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ: أَيُّهَا الْمُصَلِّي اُدْعُ تُجَبْ.
رواه الترمذي وقال:هذاحديث حسن باب في ايجاب الدعاء …،رقم:٣٤٧٦
ஹஜ்ரத் ஃபழாலத்திப்னு உபைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு நாள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பள்ளியில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் பள்ளிக்கு வந்து தொழுதார். தொழுத பிறகு, யாஅல்லாஹ், என்னை மன்னிப்பாயாக! என் மீது அருள் புரிவாயாக!” என்று துஆச் செய்தார். இதைக் கேட்ட ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள், தொழுகையாளியே, நீர் துஆக் கேட்பதில் அவசரப்பட்டுவிட்டீர், நீர் தொழுது முடித்ததும், முதலில் அல்லாஹ்வை அவனது அந்தஸ்துக்குத் தக்கவாறு புகழ்வீராக! அடுத்து என் மீது ஸலவாத் சொல்லியபின் துஆச் செய்வீராக!” என்று சொன்னார்கள். ஹஜ்ரத் ஃபழாலத்துப்னு உபைத் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள், மற்றொருவர் தொழுதார், அவர் தொழுது முடித்துவிட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்னார்’. நபி (ஸல்) அவர்கள் அவரிடம், இப்பொழுது துஆக் கேளும், ஏற்றுக் கொள்ளப்படும்’, என்று கூறினார்கள்.
(திர்மிதீ)
கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறியதாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: கண்மணி நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படும் வரை எல்லா துஆக்களுக்கும் வானத்திற்கும் இடையில் திரை இருக்கும். ஸலவாத் ஓதப்பட்டால் அந்த திரை கிழிந்துவிடும். அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படும். ஸலவாத் ஓதப்படாவிட்டால் அந்த துஆவிற்கு பதில் (பலன்) வழங்கப்படமாட்டாது.
(நூல்: பைஹகி – 1576)
உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: (யாதொரு) துஆவும் வானுக்கும், பூமிக்கும் இடையில் தடுத்து வைக்கப்படும். உங்களது நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது நீங்கள் ஸலவாத் ஓதும் வரை அங்கிருந்து அது (இறைசமூகம்) சென்றடையாது.
(நூல்: திர்மிதி – 486)
7 பள்ளிக்கு மிக விரைவாக வருவது
ஜும்ஆவுக்கு நேரங்காலத்துடன் செல்லுதல்:
மேற்கண்ட முறைப்படி குளித்து,எண்ணெய்தேய்த்து,
நறுமணம் பூசி,
தம்மை சுத்தப்படுத்திக் கொண்ட ஒருவர் நேரங்காலத்துடன் ஜும்ஆவுக்குச் செல்வதை இறைவனும் கட்டளையிடுகிறான்,நபிகளார் (ஸல்)அவர்களும் நற்போதனை யிடுகிறார்கள்,அல்லாஹ் தனது திரு மறையில் கூறுகிறான்
{يَأَيّهَا الّذِينَ آمَنُوَاْإِذَا نُودِيَ لِلصّلاَةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْاْ إِلَىَ ذِكْرِ اللّهِ وَذَرُواْ الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ فَإِذَا قُضِيَتِ الصّلاَةُ فَانتَشِرُواْ فِي الأرْضِ وَابْتَغُواْ مِن فَضْلِ اللّهِ وَاذْكُرُواْ اللّهَ كَثِيراًلّعَلّكُمْ تُفْلِحُونَ} (62; 9-10) ஈமான் கொண்டவகளே!
ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,வியாபாரத்தை விட்டுவிட்டு,அல்லாஹ்வை தியானிக்க (பள்ளிவாசல்களுக்கு)விரைந்து செல்லுங்கள்,இது உங்களுக்கு மிகச்சிறந்ததாகும் –நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிசெல்லுங்கள்;அல்லாஹ்வின் அருளை தேடுங்கள்!மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்தவண்ணம் இருங்கள் உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்(62; 9-10).
எனவே வெள்ளிக் கிழமையன்று முஸ்லிம்கள் முடிந்த அளவு இருப்பதிலேயே சிறந்த ஆடை அணிந்து எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி நேரங்காலத்துடன் பள்ளிவாசலுக்குச் செல்லவேண்டும். தம்மால் முடிந்த அளவு நபிலான தொழுகைகள் தொழுதபின் குர்ஆன் ஓதலாம்,அல்லாஹ்வை (திக்ரு)நினைவு கூறலாம்,இருகரமேந்தி பிரார்த்திக்கலாம்,ரஸூல் (ஸல்)அவர்கள்மீது சலவாத்து ஓதலாம் இன்னும் இது போன்ற நல்ல அமல்களில் ஈடுபடலாம்,எதுவரைஎன்றால் இமாம் குதுபா உரை நிகழ்த்த வரும்வரை இமாம் குதுபா ஓத ஆரம்பித்தவுடன் பள்ளிவாசலினுள் அமர்திருப்போர் அனைவரும் அமைதியாக,காது தாழ்த்தி குதுபாவை செவிமடுக்கவேண்டும்.குதுபா உரையில் சொல்லப்படுகின்ற இறைக்கட்டளை, நபி வழிமுறைகளை நமதுவாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வுடனும்,மிகுந்த ஆர்வத்துடனும் அதை கேட்கவேண்டும் பக்கத்தில் மற்றவர்கள் பெசிக்கொடிருந்தாலும் அவர்களையும் பேசாதீர்கள் என்றும் சொல்லக்கூடாது இப்படிப்பட்ட ஒழுக்கங்களைஎல்லாம் கடைபிட்த்தால்தான் ஜும்ஆவுடைய பலனும் நண்மையும் கிடைக்கும்.. ஜும்ஆ தொழுகை சார்ந்த அனைத்து அமல்களு முக்கியத்துவம் வாய்ந்தவையாகும் எனவே அனைத்தையும் அறிந்து கடைபிடிப்பது அவசியத்திலும் அவசியம்.அல்லாஹுத்தாஆலா
நம் அனைவர்களுக்கும் நிரந்தரமாக ஜும்ஆ தொழுகும் பாக்கியத்தையும்,இறை திருப்தியையும்,ஈருலக ஈடேற்றத்தையும்,தந்தருள்வானாக
..ஆமீன்.