சூரா பலத் Surah Balad in English

பலத்

ஸூரத்துல் பலத்

மக்கீ, வசனங்கள்: 20

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ

லா உக்சிமு பிஹாதல் பலத்

‏. இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்

!وَاَنْتَ حِلٌّ ۢ بِهٰذَا الْبَلَدِۙ‏

வஅன்த ஹில்லும் பிஹாதல் பலத்

நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ‏

வவாலிதிவ் வமா வலத்

தந்தையின் மீதும், பிறந்தோர் (ஆகிய சந்ததியினர்) மீதும் சத்தியமாக

لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْ كَبَدٍؕ‏

லகத் ஹலக்னல் இன்ஸான ஃபீ கபத்

திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ ۘ‏.

ஒருவரும் தன்மீது சக்தி பெறவே மாட்டார் என்று அவன் எண்ணிக்கொள்கிறானோ?

يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ؕ:. “

ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.

اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗۤ اَحَدٌ ؕ

அய்யஹ்சபு அல்லையக்திர அலைஹி அஹத்

தன்னை ஒருவரும் பார்க்கவில்லை என்று அவன் எண்ணுகிறானா?

اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ.

அலம் நஜ்அல்லஹூ அய்னைன்

அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?

وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ‏.

வலிசானன் வசஃபத்தைய்ன்

மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌ۚ‏

வஹதைய்னாஹூ ன் னஜ்தைன்

அன்றியும், (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۖ

ஃபலக்த்தகமல் அகபா

ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْعَقَبَةُ ؕ‏

வமா அத்ராக மல் அகபா

நபியே!) ‘கணவாய்’ என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்?

فَكُّ رَقَبَةٍ

ஃபக்கு ருக்கபா

ۙ‏. (அது) ஓர் அடிமையை விடுவித்தல்

. اَوْ اِطْعٰمٌ فِىْ يَوْمٍ ذِىْ مَسْغَبَةٍ

அவ் இத் ஆமுன் ஃபீ யவ்மின் தீ மஸ்ஹபா

ۙ‏. அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ

யதீமன் தா மக்ரபா

ۙ‏உறவினரான ஓர் அநாதைக்கோ

, اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ ؕ‏

அவ் மிஸ்கீனன் தா மத்ரபா

அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ‏.

சும்ம கான மினல்லலதின ஆமனு வதவா சவ் பிச்சப்ரி வதவா சவ்பில் மர்ஹமஹ்

பின்னர், நம்பிக்கை கொண்டும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசித்தும், இரக்கம் காட்டுமாறு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதும் (கணவாய் கடத்தல்) ஆகும்.

اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏

உலாயிக்க அஸ்ஹாபுல் மைமனாஹ்

த்தகையோர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்

. وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْــٴَــمَةِ ؕ

வல்லதின கஃபரு பிஆயாதின் ஹூம் அஸ்ஹாபுல் மஸ்அமாஹிம்

‏ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தாம் இடப்பக்கத்தையுடையோர்

. عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ

நாருன் மஹ்சதா

அவர்கள் மீது (எல்லாப் பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

4 thoughts on “சூரா பலத் Surah Balad in English

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *