சூரா இக்லாஸ் |

குல் ஹூவல்லாஹூ அஹத்அல்லாஹூ ஸ்ஸமத்லம் யலித் வலம் யூலத்வலம் யகுன் லஹூ குஃபூவன் அஹத்
நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
( 100 முறை ஓதவும்)
சூரா பீல் |

அலம் தர கைfப fப அல ரப்புக பி அஸ்ஹாபில் fபீல் அலம் எஜ்அல் கைதஹும் fபீ தழ்லீலிவ்வ அர்ஸல அலைஹிம் தைரன் அபாபீல்தர்மீஹிம் பிஹிஜாரதிம் மின் ஸிஜ்ஜீலின்Fபஜஅலஹும் கஅஸ்fபிம் மஅகூல்
(நபியே) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
மேலும் அவர்கள் மீது பறவைகளை கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன
அதனால் அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கிவிட்டான்
(11 முறை ஓதவும் )
திக்ர் |