அஸ்ஸலாமு அலைக்கும்
கடன் சுமை உடனே நீங்க ஓதும் துஆக்கள்
“”கடன் இம்மூன்றெழுத்தில் பலரின் மூச்சே நின்றுபோயுள்ளது. அந்தளவு மிக கொடுமையானதாக தற்போதய காலத்தில் இனது னமாறிவிட்டது.
இன்னும் சொல்வதென்றால் எந்தளவு செல்வம் இருக்குமோ அந்தளவு கடனின் பால் அவன் தேவையுடையவனாக இருப்பதே உண்மை
மூச்சை நிறுத்துமளவு ஆனதற்கு காரணம் அதுவல்ல. மாறாக அதில் ஏற்படும் வட்டியாகும். ஆக கடன் பெறுவதையும், கடன் கொடுப்பதையும் இஸ்லாம் அங்கீ கரித்த்திருப்பதுடன் பல சந்தர்ப்பங்களில் அதனை சிலாகித்தும் கூறியுள்ளது.
கடன் பெறுவதைப் பற்றி
ஒரு ஹதீஸில் இவ்வாறு வந்துள்ளது. ஹள்ரத் ஆயிஷா நாயகி (ரலி) அவர்களிடம் தாங்கள் ஏன் கடன் பெறுகிறீர்கள் என்று கேட்கப்பட, அவர்கள் “எவர் கடனை நிறைவேற்றும் எண்ணத்துடன் இருப்பாரோ அவ ருக்கு அல்லாஹுதஆலாவின் உதவி இருக்கும்” என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
கடன் கொடுப்பதைப்பற்றி
“தர்மம் செய்தல் பத்து மடங்கு நன்மை கொடுக்கும் கடன் கொடுத்தல் பதினெட்டு மடங்கு நன்மை கொடுக்கும்” என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
கடன் பெற்றவர் கடனை நிறைவேற்றுவதில் தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும். தன் உடலுழைப்புகள், தொழில்கள், வியாபாரங்கள் போன்றவற்றை கையாள வேண்டும். இவ்விஷயங்களில் கடன் பெற்ற பலர் திருப்பி செலுத்த முயற்சிப்பதை கண்கூடாக நாம் காணலாம். ஆனால் இதையும் தாண்டி வேறொரு முயற்சி இருக்கிறது. அதில் பலர் கோட்டை விட்டுள்ளனர். அது தான் இறைவனிடம் மன்றாடிப் பெறும் முயற்சி.
எனவே தான் கடன் வாங்குவதை அங்கீகரித்த இஸ்லாம் அதற்கான தீர்வையும் பிரார்த்தனை என்ற வழிகளில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலமாக நமக்களித்துள்ளது
- அமீருல் முஃமினீன் ஹள்ரத் அலி (ரலி) அவர்களிடம் “இவ்வளவு தொகை செலுத்தினால் விடுதலை என விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமையொருவர் வந்து என்னால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை நிறைவேற்ற முடியாமல் ஆகிவிட்டது. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அச்சமயம் ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் நான் உமக்கு சில வாசகங்களை கற்றுக் கொடுக்கிறேன். அவ்வாசகங்களை எனக்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்து உம்மீது ஸபீர்” (ஒருமலையின் பெயர்) மலையின் அளவு கடன் இருப்பினும் அல்லாஹுதஆலா அக்கடனை நிறைவேற்றி வைப்பான் என்று கூறினார்கள். அதனை நீரும் ஓதுவீராக என்று
قُلِ اللَّهُمَّ اكْفِنِى بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِى بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யாஅல்லாஹ்! ஹராமை விட்டும் என்னைக் காப்பாற்றி ஹலாலான ரிஸ்கை அளித்து என்னை போதுமாக்கிவை. உன்னையன்றி பிறரிடம் தேவையாகுவதை விட்டும் என்னை உன் அருள் மூலம் ஈடேற்று!) என்ற துஆவை கற்றுக் கொடுத்தார்கள். (நூல் : திர்மிதீ)
ஒரு மனிதர் உண்மை உள்ளத்துடன் இப்பிரார்த்தனையை செய்தால் அவர் கடன் கண்டிப்பாக நிறைவேறும். காலை – மாலை 40 முறை ஓதுவது நல்லது.”

“2. அபூ சயீது குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்குள் நுழைந்த போது அபூ உமாமா (ரலி) என்ற தோழர் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்ததை கண்டு என்ன அபூ உமாமா இந்நேரத்தில் இங்கு? என்று வினவினார்கள். அதற்கவர் அல்லாஹுதஆலாவின் தூதரே! கடன் அதிகமாகி பெரும் சிரமத்திற்குள் பீடிக்கப்பட்டுள்ளேன் என்று கூறினார். உடனே அல்லாஹுதஆலாவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் உமக்கு ஒரு துஆவை கற்றுக் கொடுக்கட்டுமா? அதனை ஓதினால் உன் சிரமங்கள் நீங்கும், கடனும் நிறைவேறும் என்று கேட்க அவசியம் கற்றுக் கொடுங்கள் என்று அத்தோழர் கூறினார். உடனே அல்லாஹுதஆலாவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீர் காலையிலும் மாலையிலும்
اللَّهمَّ إني أعوذ بك من الهَمِّ والحَزَنِ ، وأعوذُ بك من العجْزِ والكَسَلِ، وأَعوذُ بك من البخْلِ والجُبْنِ ، وأعوذ بك من غَلَبَةِ الدَّيْنِ وقَهرِ الرجال
யாஅல்லாஹ் நான் உன்னிடம் கவலைகள், துக்கங்களை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன். மேலும் இயலாமை, சோம்பலை விட்டும் பாதுகாவல் கோருகிறேன். மேலும் கஞ்சத்தனம், கோழைத்தனத்தை விட்டும் பாதுகாவல் கோருகிறேன். மேலும் கடன் பளுவையும், மனிதர்களின் அடக்கு முறைகளையும் விட்டும் பாதுகாவல் கோருகிறேன் என்று கூறுவீராக! என்றார்கள்.
ஹள்ரத் அபூ உமாமா கூறுகிறார்கள். நான் இதனை ஓத ஆரம்பித்ததும் அல்லாஹ் என் சிரமங்கள் கடன் அனைத்தையும் நீக்கிவிட்டான்.
இதனை காலை மாலை 33 தடவைகள் ஓதுவது இறையருளை கிட்டச்செய்யும்.
- ஹள்ரத் முஆத் இப்னு ஷபல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை ஜும்ஆ தினத்தன்று என்னை தேடினார்கள். ஜும்ஆ தொழுகைக்குப் பின் என் வீட்டிற்கே வந்து முஆதே உம்மை இன்று நான் காணவில்லையே என்றார்கள். நான், அல்லாஹுதஆலாவின் தூதரே! நான் ஒரு யூதனுக்கு கடன் கொடுக்க வேண்டும். நான் தங்கள் சமூகத்திற்கு வர நினைத்த போது அவன் என்னை தடுத்துவிட்டான் என்றேன். உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான் உமக்கு துஆ கற்றுக் கொடுக்கிறேன். அதனை ஓதிவந்தால் உம்மீது ஸபீர் (எனும்) மலையின் அளவு கடன் இருப்பினும் அதனை அல்லாஹ் நிறைவேற்றுவான் என்று கூறியவர் களாக முஆதே
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ، وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ، وَتُعِزُّ مَنْ تَشَاءُ، وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكِ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ، وتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ، وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ، وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ، وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ رَحْمَنَ الدُّنْيَا وَالآخِرَةِ وَرَحِيمَهُمَا، تُعْطِي مَنْ تَشَاءُ مِنْهُمَا، وتَمْنَعُ مَنْ تَشَاءُ، ارْحَمْنِي رَحْمَةً تُغْنِيني بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ
“யாஅல்லாஹ்! நீயே அரசர்க்கரசன்! நீ நாடியோருக்கு ஆட்சியை கொடுக்கிறாய்! நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை எடுக்கிறாய்! நீ நாடியவருக்கு கண்ணிய மளிக்கிறாய்! நீ நாடியோரை இழிவடையச் செய்கிறாய்! நலவெல்லாம் உன் கைவசமே உள்ளது. நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன். நீ பகலில் இரவை புகுத்துகிறாய்! இரவை பகலில் புகுத்துகிறாய்! உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளியாக்கு கிறாய்! உயிருள்ளவற்றிலிருந்து உயிரற்றதை வெளியாக்குகிறாய்! நீ நாடியோருக்கு கணக்கின்றி கொடுக்கிறாய்! ஈருலக நாயனே! இரு உலகிலும் நீ நாடியோருக்கு வழங்குகிறாய்! இரு உலகிலும் நீ நாடியோருக்கு தடுக்கின்றாய்! நீயின்றி பிறர் என் மீது இரக்கம் கொள்வதை விட்டும் தேவையுறச் செய்யக்கூடிய அளவு உன் கிருபையை எனக்களிப்பாயாக! (நீ அருள்புரிவாயாக!) யா அல்லாஹ் ஏழ்மையை நீக்கி எனக்கு செழிப்பைக் கொடு, என் கடனை நிறைவேற்று! உன் வணக்கத்தில், உன் பாதையில் போராடும் நிலையில் என்னை மரணிக்கச் செய்!” என்று கூறுவீராக என்றார்கள். (நூல் : தப்ரானீ)
இந்த துஆ மிகவும் சக்தி வாய்ந்த துஆவாகும். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் இதை ஒரு முறை ஓதிவாருங்கள்.”
4″ஒரு மனிதன் தனக்கு நிகழக்கூடிய இக்கட்டான ஓர் நிலையில் பிற மனிதர்களிடம் கடன் வாங்குவதை இஸ்லாம் அங்கீகரித்துள்ளது. இருந்தாலும் இந்தக் கடன் சுமைகள் அதிகரிக்கின்ற பொழுது மனிதர்களுக்கு அதுவும் ஓர் பெரும் சுமையாக மாறிவிடுகின்றது.
ஆகவே கடன் சுமைகளிலிருந்து நீங்குவதற்கு அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அருமையான, அழகான ஓர் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள். அது என்னவென்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலப்பதித் தைன்,
பொருள்:-
இறைவா! கடன் சுமை அதிகரித்தல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
இந்த ஹதீசை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம்:- நஸயீ – 5,380)”
5″. ஹள்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒருமுறை என் தந்தை யார் ஹள்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து எனக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு துஆ கற்றுத் தந்துள்ளார்கள் என்றார்கள். நான் என்ன துஆ என்று கேட்க அது ஹள்ரத் ஈஸா (அலை) அவர்கள் தம் தோழர்களுக்கு கற்றுக் கொடுத்த துஆவாகும். ஒருவருக்கு மலையளவு தங்கம் கடனாக இருந்தாலும் அவர் இந்த வார்த்தைகள் மூலம் துஆ கேட்டால் அல்லாஹுதஆலா அதனை நிறைவேற்றுவான் என்றார்கள். அந்த துஆவாவது :

اللَّهُمَّ فَارِجَ الْهَمِّ وَكَاشِفَ الْكَرْبِ ، مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ ، رَحْمَنَ الدُّنْيَا وَالآخِرَةِ ، أَنْتَ رَحْمَانِي فَارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ مَنْ سِوَاكَ
யாஅல்லாஹ்! கவலைகளை நீக்குபவனே! துக்கங்களை அகற்றுபவனே! திக்கற் றவர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவனே! இம்மை மறுமையின் அளவற்ற அருளாளனே! ஈருலகின் நிகரற்ற அன்புடையோனே! நீயே எனக்கு கிருபை செய்பவன். உன்னையல்லாது பிறர் என் மீது இரக்கப்படுவதை விட்டும் தேவையுறச் செய்யும் அளவு என்மீது நீ அருள்புரிவாயாக!
இன்னும் பல துஆக்கள் இருக்கிறது. அதற்கு முன்; என்ன இப்படியெல்லாம் துஆ செய்துவிட்டால் வாங்கிய கடன் தானாக அடைந்துவிடுமா? நாம் முயற்சி செய்து சம்பாதித்தால்தானே அடைக்க முடியும்? என்றெல்லாம் மனதில் ஊசலாடலாம்! ஆனால் உண்மை என்னவெனில் மனிதன் எவ்வளவு பெரிய முயற்சி செய்தாலும் அவனின் முயற்சியை மிகைக்கும் பல விஷயங்கள் அவனை கடனாளியாகவே வைத்துவிடும். வல்ல அல்லாஹுதஆலாவின் உதவியின்றி எம்முயற்சியும் பயனளிக்காது. எனவே நாம் இந்த துஆக்களை கேட்டுப் பெற வேண்டும்.
அதுபோல் பலர் இந்த துஆக்களை ஓதியும் தங்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லையே என்றெண்ணலாம். ஆனால் இந்த துஆக்களை ஓதுவது என்பது வெறும் உதட்டை அசைத்து நாவால் மொழிவதல்ல. மாறாக ஓதுவதுதன் நோக்கம் “கேட்டுப் பெறுவது” அதாவது வல்ல அல்லாஹ்விடம் தம் இயலாமையை வெளிப் படுத்தி அவனின் வல்லமையை ஏற்றுக் கொண்டு அவனையன்றி எனக்கு யாரும் இல்லையென்பதை மனதில் கொண்டு இந்த இரைஞ்சுதலை அவன் ஏற்பான் என்று உறுதி கொண்டு கண்டிப்பாக இதன் மூலம் என் கடன்கள் கஷ்டங்கள் இன்ன பிற விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று முழுமையான முறையில் நம்பி கேட்டுப் பெறுவதாகும். இத்தகைய முறையில் நாம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்கும். அதற்குச் சான்றாக பல சம்பவங்கள் உள்ளன.
முன்னால் குறிப்பிடப்பட்ட துஆவை அறிவித்த பின்னர் ஹள்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “எனக்கு சில கடன்கள் இருந்தன. கடன் எனக்கு கஷ்டமானதாக இருந்தது. எனவே நான் அல்லாஹ்விடம் இந்த துஆ மூலம் இறைஞ்சினேன். அல்லாஹுதஆலா என் கடன்கள் முழுவதும் அடையும் அளவிற்கு எனக்கு அருள்புரிந்தான்.”
அந்த துஆவினால் உடனே நிறைவேறிய கடன்
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நாள் ஹள்ரத் அஸ்மா பின்த் உமைஸ் அவர்களுக்கு ஒரு தீனாரும் மூன்று திர்ஹம்களும் கடன் பட்டிருந்தேன். அவர்கள் எப்போதாவது என்னிடம் வந்தால் அவர்களின் முகத்தில் விழிக்க எனக்கு அசிங்கமாக இருக்கும். ஏனெனில் அதை நிறைவேற்றும் வழியற்று இருந்தேன். பின்னர் இந்த துஆவைக் கொண்டு நான் துஆ செய்தேன். கொஞ்ச நேரம் தான் கழிந்தது. அதற்குள் அல்லாஹுதஆலாவின் கிருபை வந்துவிட்டது. வந்த பணம் தர்மமும் அல்ல, வாரிசுரிமையும் அல்ல. ஆக அல்லாஹுதஆலா என் கடனை நிறைவேற்றிவிட்டான். நான் என் குடும்பத்தாருக்கு நிறைய பங்கிட்டு கொடுத்தேன். என் சகோதரர் அப்துர் ரஹ்மானின் மகளுக்கு நகைகளும் செய்தேன். அப்படியும் நிறைய மீதம் இருந்தது. (நூல் : பஜ்ஜார், ஹாகிம்)
இந்த துஆவை மனனமிடுவது அதன் கருத்துக்களை நினைவில் கொள்வது கடினமா என்ன? இது இலகுவிற்கான சாவியாகும். அல்லாஹ்வின் கிருபையின் மீது உறுதி ஏற்பட்டுவிட்டால் அதன் பலனை கண்கூடாக காணலாம்
இன்ஷாஅல்லாஹ்
கடன் இல்லாத வாழ்க்கையை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக ஆமீன்….