எப்படி தொழுக வேண்டும் ? முழு விளக்கம்

WhatsApp படம் 2024 11 28 18.37.29 39492815 1 எப்படி தொழுக வேண்டும் ? முழு விளக்கம்


பஜ்ரு: {முன் சுன்னத் -2} பர்ளு – 2

அஸர் {முன்சுன்னத்-4} பர்ளு 4

மக்ரிப் பர்ளு – 3 {பின்சுன்னத் -2 நபில்-2

இஷா {முன்சுன்னத்-4 பர்ளு 4 {பின்சுன்னத் -2 }

வாஜிபுல்வித்ரு-3


பர்ளு, வாஜிபு, சுன்னத் போன்ற தொழுகை
களை இமாமுக்குப்பின் தொழுவதானால் இன்ன நேரத்து இன்ன தொழுகையை இந்த இமாமைப்பின்பற்றி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்ய வேண்டும். தனியாக தொழுவதா யிருந்தால் இன்ன நேரத்து இன்ன தொழுகையை இத்தனை ரக்அத் அல்லாஹ்வுக்காக தொழுகிறேன் என்று நிய்யத் செய்து கொள்ள வேண்டும்.

தொழுகை


தொழுவதற்கு முன் ஒளு செய்து சுத்தமான ஆடை அணிந்து சுத்தமான இடத்தில் கிப்லாவை முன்னோக்கி நிற்க வேண்டும்.

நிற்கும்போது இரண்டு கால்களுக்கு இடையில் 4 விரல் அளவு இடைவெளி விட வேண்டும். கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி வைத்து நேராக நிற்க வேண்டும். ஒரேயடியாக தலையைக் குனியாமலும் மேலே அண்ணாந்து பார்க்காமலும் சம அளவில் நிற்க வேண்டும்.


பின்னர் நிய்யத்தை மனதால் நினைப்பதுடன் நாவினாலும் சொல்லிக் கொண்டு இரு கைகளையும் உயர்த்தி உள்ளங்கை கிப்லாவை முன்னோக்குமாறு வைத்து விரல்களை நெருக்காமலும் விரிக்காமலும் சாதாரணமாகவைத்து இரண்டு பெருவிரல்களின் நுனியைக் கொண்டு காதுகளின் இரு சோணைகளையும் தொட்டவாறு அல்லாஹு அக்பர் என்று தக்பீர் தஹ்ரீமா சொல்லி பின் இரண்டு கைகளையும் தொப்புளுக்குக் கீழே கொண்டுவந்து வலது கையின் பெருவிரலையும் சுண்டுவிரலையும் வளையமிட்டு இடது கையின் மணிக்கட்டைப் பிடித்து மற்ற விரல்களை நீட்டியவாறு வைத்திட வேண்டும். தனது பார்வையை ஸஜ்தா செய்யும் இடத்தை நோக்கி வைக்க வேண்டும். உடனே தனா ஓதி அவூது பிஸ்மி ஒதி அல்ஹம்து சூரா ஓதி ஆமீன் சொல்லிக் கொள்ள வேண்டும். பின் தனக்கு தெரிந்த சூராவை ஓத வேண்டும்.
அதன் விபரம் வருமாறு: தக்பீர் கட்டியதும்

ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலா ஜத்துக வலா
இலாஹ ஙைருக.


اعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ *
அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم *
الحمدُ للهِ رَبِّ الْعَلَمِينَ * الرَّحْمَنِ الرَّحِيمِ
مُلِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِين اهدنا الصراط الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيْهِمْ وَلا
المالين


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அர்ரஹ்மானிர்ரஹீம் மாலிகி யவ்மித்தீன் இய்யாக்க நஃBபுது வ இய்யாக்க நஸ்தஈன்இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம் ஙைரில் மஃங்ளூபி அலைஹிம் வலள்ளால்லீன்.
(ஆமீன்)


بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ
اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحُبِ الْفِيلِ أَلَمُ يَجْعَلُ كَيْدَهُمْ في تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا آبَابِيْلَ * تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِنْ سِحِيْلٍ * فَجَعَلَهُمْ

كَعَصْفٍ مَّأْكُولٍ *


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அலம் தர கைஃப ஃபஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல், அலம் யஜ்அல் கைதஹும் ஃபீ தள்லீல், வ அர்ஸல அலைஹிம் தய்ரன் அபாபீல். தர்மீஹிம் பி ஹிஜாரத்திம் மின் ஸிஜ்ஜீல், ஃப ஜஅலஹும் க அஸ்ஃபிம் மஃகூல்
.

இவைகளை ஓதி முடிந்ததும் கைகளை தொங்கவிட்டு ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லிக் கொண்டே குனிய வேண்டும். குனிந்து இரண்டு கைகளையும் சற்று விரித்து இரண்டு முழங்கால்களையும் பிடித்துக் கொள்ள வேண்டும். குடங்கைகள் விலாவில் ஒட்டாதவாறு அகற்றி முழங்கால்களை நேராக நிறுத்தி முதுகை சமமாக வைத்து தலையும் பித்தட்டும் நேராக இருக்குமாறு வைத்துக் கொண்டு பார்வையை கால் பாதத்தின் மீது செலுத்தியவாறு குனிந்து நிற்க வேண்டும்.

இதற்கு ருகூஉ என்று கூறப்படும்.

ருகூஉவின் போது
سُبْحَانَ رَبِي الْعَظِيمِ
‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்
என்ற
தஸ்பீஹை குறைந்த பட்சம் மூன்று தடவை ஓத
வேண்டும். பின்னர்


سَمِعَ اللهُ لِمَنْ حَمدَة

‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொல்லிக் கொண்டே நிமிர்ந்து நேராக நிற்க வேண்டும்.

இதற்கு சிறுநிலை எனப்படும். அப்போது
اللهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ என்று சொல்லிவிட்டு

அல்லாஹு அக்பர் என்ற தக்பீரை சொல்லிக் கொண்டே ஸஜ்தாவுக்குச் செல்ல வேண்டும்.
ஸஜ்தாவுக்கு செல்லும்போது முதலில் இரண்டு முழங்கால்களையும் பூமியில் வைத்து தொடை களை நேராக நிறுத்தி வயிறு தொடைகளுடன் ஒட்டாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பூமியின் பக்கம் கவிழ்ந்து முதலில் விரல்களை கிப்லாவை நோக்கியவாறு கைகளை வைத்து இரு கைகளுக்குமிடையில்
அதாவது முதலில் மூக்கையும் பின்பு நெற்றியையும் வைத்துவிட வேண்டும். அப்போது ஸஜ்தாவில்
தலையை வைக்க வேண்டும்.

سُبْحَانَ رَبِّي الأعلى
ஸுப்ஹானரப்பியல்அஃலா என்ற
தஸ்பீஸை குறைந்த பட்சம் மூன்று தடவை ஓதியபின் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறிய வண்ணம் எழுந்து உட்கார வேண்டும். உட்காரும்போது இடது காலைப் படுக்க வைத்து அதன் மீது பித்தட்டை வைத்து வலது காலை நட்டு அதன் விரல்கள் கிப்லாவை நோக்கி இருக்குமாறு செய்ய வேண்டும். இரண்டு கைகளையும் இரு தொடைகளின் மீது வைத்து சில வினாடிகள் கழித்து மீண்டும் ஸஜ்தா செய்ய வேண்டும். அதிலும் மூன்று தடவை தஸ்பீஹ் ஓதிய பின் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லிக் கொண்டே முதலாவது நெற்றியையும் அடுத்து மூக்கையும் அடுத்து கைகளையும் அடுத்து முட்டுக் காலையும் இவ்வாறாக வரிசைக்கிரமமாக பூமியிலிருந்து உயர்த்தி எழுந்து நிற்க வேண்டும். இப்போது இரண்டாவது ரக்அத் ஆரம்ப மாகிறது. இண்டாவது ரக்அத்தில


ஆண்களைப் போன்றே பெண்களும் தொழ வேண்டும். எனினும் சில காரியங்களில் மட்டும் சிற்சில மாற்றங்கள் உண்டு.


அதாவது, தக்பீர் தஹ்ரீமா சொல்லும்போது கைகளை தோள் வரை மட்டும் உயர்த்த வேண்டும். முகம், இரண்டு முன்கை, இரு பாதம் ஆகியவற்றைத் தவிர உடலின் எல்லாப் பகுதியையும் மறைத்திருக்க வேண்டும்.


நிலை நிற்கும்போது இரு பாதங்களையும் சேர்த்து வைத்து இரு குடங்கைகளையும் விலாவுடன் சேர்த்து இடது முன்கையின் மேல் வலது முன் போர்த்தியது போல் மார்பின் மீது வைக்கவேண்டும்.ருகூக்கு வில் சிறிதளவு குனிந்தால் போதும் இரு கைகளையும் முழங்காலின் மீது வைக்க வேண்டும் அழுத்து பிடிக்கக்கூடாது விரல்களை விரிக்கவும் கூடாது நிறுக்கவும் கூடாது, முழங்கால்களை நேராக நட்டு வைக்காமல் சற்று சாய்த்துக்கொள்ள வேண்டும் ஸஜ்தாவின் போது எல்லா உறுப்புகளையும் விளக்காமல் சேர்த்து வைக்க வேண்டும் அதாவது குடங்கையை விழா உடனும் வயிற்றை தொடையுடனும் சேர்த்து வைத்து முழங்கையை தரையில் படுக்க வைத்திருக்க வேண்டும்


( ஜனாஸா தொழுகை பர்ளு கிஃபாயாவாகும்.
ஜனாஸா தொழுகையின் நிய்யத்: இந்த மய்யித்துக்கு துஆ செய்தவனாக இந்த இமாமைப் பின் துயர்ந்து அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன்.
இமாம் அல்லாஹு அக்பர் என்று கூறி தக்பீர் கட்டியதும்

தனாவை சிறு வித்தியாசத்துடன் ஓத வேண்டும். அதாவது


ஸுப்ஹானக்கல்லாஹும்ம வ பிஹம்திக வ தபாரகஸ்முக வ தஆலா ஜத்துக வ ஜல்ல தனாஉக்க வலா இலாஹ ஙைருக்க.

இமாம் இரண்டாவது தக்பீர் சொன்னதும் தக்பீர் சொல்லி அத்தஹிய்யாத்துக்கு பின்னர் உள்ள ஸலவாத்தை ஓத வேண்டும்.
இமாம் மூன்றாவது தக்பீர் சொன்னதும் தக்பீர் சொல்லி


அல்லாஹும்மங்ஃபிர்
லிஹய்யினாவமய்யிதினா வ ஷாஹிதினா வ ஙாயிபினா வஸகீரினா வ கபீரினா வ தகரினா வ உன்தானா அல்லாஹும்ம மன் அஹ்யய்த்தஹு மின்னா ஃப அஹ்யிஹீ அலல் இஸ்லாம் வமன் தவஃப்பைத்தஹு மின்னா ஃப தவஃப்பஹு அலல் ஈமான்

என்று ஒத வேண்டும்.

இமாம் நான்காவது தக்பீர் சொன்னதும் தக்பீர் சொல்லி


“ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்’
என்று ஓதி இமாமுடன் ஸலாம் கொடுக்க வேண்டும்.\


மய்யித்து ஆண் குழந்தையாக இருப்பின் மூன்றாவது தக்பீருக்கு பின்


அல்லாஹும்மஜ்அல்ஹு லனா ஃபரதன் வஜ்அல்ஹு லனா அஜ்ரன் வதுக்ரன் வஜ்அல்ஹு லனா ஷாபிஅன் வ முஷப்பஆ’ என்ற துஆவை ஓத வேண்டும்.


மய்யித் பெண் குழந்தையாக இருந்தால்


அல்லாஹும்மஜ்அல்ஹா லனா ஃபரதன் வஜ்அல்ஹா லனா அஜ்ரன் வதுக்ரன் வஜ்அல்ஹா லனா ஷாபிஅத்தன் முஷப்பஅத்தன்”


என்ற துஆவை ஓத வேண்டும்.


எந்த துஆவும் தெரியாதவர்கள் தக்பீர்கள் சொல்லும்போது அல்லாஹும் மங்ஃபிர் லனா வலில் முஃமினீன் என்று ஒதிக்கொள்ளவும்.

உடல் சுத்தமாக இருத்தல்

, 2. உடை சுத்தம்,

3. தொழும் இடம் சுத்தம்

, 4. உடலில் மறைக்க வேண்டிய இடங்களை மறைத்தல்,

5. தொழுகை நேரம் அறிதல்,

6. கிப்லாவை முன்னோக்குதல், 7. தொழ நிய்யத் செய்தல்.


தொழுகையின் உள் பர்ளுகள்

1 அல்லாஹு அக்பர் என்று தக்பீர் தஹ்ரீமா சொல்லுதல்

, 2. நிலை (நிற்குதல்)

, 3 குர்ஆன் ஆயத்துகளில் குறைந்த பட்சம் சிறிய மூன்று ஆயத்துகள் அல்லது பெரிய ஒரு ஆயத்தை ஓதுதல்

, 4. ருகூஉ செய்தல்,

5. ஸுஜூது செய்தல்,

6. அத்தஹிய்யாத் கடைசி இருப்பு இருத்தல்.


தொழுகையின் வாஜிபுகள் 16

1 முதல் தக்பீர் அல்லாஹு அக்பர் என்றவார்த்தையாக இருப்பது

2 அல்ஹம்து சூரா முழுவதையும் ஓதுதல்

3 ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து சூராவை முதலில் ஓதுதல்.

4 அல்ஹம்துக்குப் பின் வேறு ஒரு சூராவை அல்லது மூன்று சிறிய ஆயத்துகளை அல்லது ஒரு பெரிய ஆயத்தை சேர்த்து ஒதுவது.

5. பர்ளு தொழுகைகளில் முதல் இரண்டு ரக்அத்துகளில் மட்டும் அல்ஹம்துக்குப் பின் ஏதேனும் சூரா அல்லது மூன்று சிறிய ஆயத் அல்லது ஒரு பெரிய ஆயத் ஒதுவது.

6. இமாமைப் பின் தொடர்ந்து தொழும்போது கிராஅத் ஓதாமல் வாய் மூடி இருத்தல்.

7. இரண்டாவது ரக்அத்தில் இருப்பு இருப்பது.

8. இருப்பில் அமர்ந்திருக்கும்போது அத்தஹிய் யாத்தை அப்துஹு வரசூலுஹு வரை ஓதுவது.

9. முதலாவது இருப்பில் அப்துஹு வரசூலுஹு வரை ஓதி முடிந்ததும் தாமதமின்றி உடனே 3வது ரக்அத்திற்கு எழுந்துவிட வேண்டும்.

10.ஒவ்வொரு பர்ளான காரியத்தையும் அதன் அதன் இடங்களில் செய்வது.

11 ருகூஉ, ஸுஜூது, சிறு நிலை, சிறு இருப்பு ஆகியவற்றைச் செய்யும்போது ஒரு தஸ்பீஹ் நேரம் அமைதியாக இருப்பது.

12 வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவது.

13. அஸ்ஸலாம் என்ற வார்த்தையைக் கொண்டு தொழுகையை முடிப்பது.

14 வாஜிபான செயல்களில் எதையேனும் மறந்து விட்டு விட்டால் அதற்காக தொழுகையின் கடைசியில் ‘ஸஜ்தா ஸஹ்வு’ செய்வது.

15.மக்ரிப், இஷா தொழுகைகளின் முதல் இரண்டு ரக்அத்துகளிலும் பஜ்ரு, ஜும்ஆ, பெருநாள் தொழுகைகள், தராவீஹ் தொழுகை, ரமலான் மாதத்தில் வித்ரு தொழுகை ஆகியவற்றின் எல்லா ரக்அத்துகளிலும் இமாம் கிராஅத்தை சப்தமிட்டு ஓதுவது.

16.லுஹர், அஸர் தொழுகைகளின் எல்லா ரக்அத் களிலும் மக்ரிபு, இஷா ஆகிய தொழுகைகளின் 3வது 4வது ரக்அத்துகளிலும் இமாம் சப்தமின்றி கிராஅத் ஓதுவது.

1.தொழ ஆரம்பிக்கும்போது தக்பீர் தஹ்ரீமா சொல்லும்பொழுது இரண்டு கைகளையும் காது உயர்த்தி கைவிரல்களை சிறிதுவரைவிரித்தவாறுஉள்ளங்கைப்கிப்லாவுக்கு.பகுதியைநேராக ஆக்குவது

2 ‘நிலை’ நிற்கும்போது தொப்புளுக்குக் கீழ் இடதுகைக்கு மேல் வலதுகையை வைத்து
கட்டிக்கொள்வது.

3.தனா ஓதுதல்.

4 அவூது பில்லாஹி ஓதுவது.

5 ஒவ்வொருரக்அத்தின்ஆரம்பத்திலும்
பிஸ்மில்லாஹ் ஓதுதல்.

6 ருகூவிலும்
ஸுஜூதிலும் மூன்று மூன்று தடவை

7 பர்ளான
தொழுகைகளில் முதல் இரண்டுதஸ்பீஹ் ஓதுதல்.ரக்அத்தைத் தவிர மற்றரக்அத்துகளில்
அல்ஹம்து மட்டும் ஓதுவது.

8 அல்ஹம்து முடிவில் ஆமீன் கூறுவது.

9 தக்பீர் தஹ்ரீமாவைத் தவிரவுள்ள இதர தக்பீர்கள் மற்றும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் ரப்பனா ஹம்து ஆகியவற்றைக்
கூறுவது.

10 கடைசி இருப்பின் போது அத்தஹிய்யாத் துக்குப் பின் ஸலவாத்தும் துஆயே மஃதூராவும் ஓதுவது.


(பின் கூறப்படும் செயல்கள் வெறுக்கத் தக்கவையாகும். தொழும்போது இவைகளைச் செய்வதால் தொழுகை முறியாது. எனினும் சிறிய குற்றமும் நன்மையில் குறைவும் ஏற்பட்டுவிடும்.)

1,தொழும்போது உடல் உறுப்புகளுடன் உடையுடனும் விளையாடுவது.

2.வலது பக்கம், இடது பக்கம் பார்த்தல், அண்ணாந்து பார்த்தல்.

3,நெற்றியில்படுகிற தூசி, மண் போன்றவைகளைத் துடைத்தல்.

.4. இரு தோள்களிலும் துண்டைத் தொங்கவிடுதல்.

5. ருகூஉ செய்யும்போது தலையையும் பித்தட்டையும் சமமில்லாதவாறு வைத்தல்.

6. இப்பக்கம் அப்பக்கம் அசையுதல்.

7. சோம்பல் காரணமாக உடலை முறுக்குதல்.

8. கண்களை மூடிக் கொள்ளுதல்.

9. விரல்களை சொடக்கு விடுதல்.

10. தொழும்போது ஆண்கள் பட்டுத்துணி, தங்கமோதிரம், தங்கச் செயின் ஆகியவற்றை அணிந்திருத்தல்.

11 சோம்பல் அல்லது அலட்சியத்தினால் தலையை திறந்தவாறு தொழுதல்.

12 பர்ளான தொழுகையில் முதல் ரக்அத்தில் ஓதிய சூராவையே இரண்டாவது ரக்அத்திலும் ஓதுதல்.

13 ஸஜ்தாவில் முழங்கையை தரையில் சமமாக படுக்க வைத்தல்.

14 இரண்டு சிறிய சூராக்களுக்கு இடையில் ஒரு சூராவை விட்டு விட்

  1. நிலையிலிருந்து ஸுஜூதுக்குப் போகும்போது முதலில் பூமியில் முழங்காலை வைப்பதற்கு முன் கைகளை வைத்தல்.
  2. ஸஜ்தா செய்யும்போது வயிற்றுடன் தொடையை ஒட்டி சேர்த்திருத்தல்.
  3. மல ஜலத்தை அடக்கிக் கொண்டு தொழுவது.
  4. 18. வேலைக்காக உடுத்தும் (அழுக்கு, கிழிந்த) ஆடையுடன் தொழுதல்.
  5. நடைபாதைகளிலும் மைதானத்திலும் (சுத்ரு) திரையின்றி தொழுதல்.
  6. சட்டைக் கையை முழங்கைவரை சுருட்டி விட்டுக் கொள்ளுதல்.
  7. முந்தின வரிசையில் இடமிருக்கும்போது பின் வரிசையில் நின்று தொழுதல்.

தெரிந்தோ அல்லது மறந்தோ ஏதேனும் பேசிவிடுதல்.

பிறருக்கு ஸலாம் கூறுதல்.

பிறர் ஸலாமுக்கு பதில் கூறுதல்.

மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கேட்டு அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லுதல்.

துக்ககரமான செய்தியைக் கேட்டு இன்னா லில்லாஹ் ஓதுதல்.

தும்மியவருக்கு யர்ஹமுகல்லாஹ் என பதில் கூறுதல்.

சாப்பிடுதல்.

குடித்தல்.

குர்ஆனைப் பார்த்து ஓதுதல்.

குர்ஆனை அர்த்தம் பிசகும்படி தவறாக ஓதுதல்.

உலக வேதனைகளை நினைத்து அல்லது உடல் வேதனைக்காக அழுதல், புலம்புதல்.

காரணமின்றி இருமுதல், கனைத்தல்.

இமாமுக்கு முந்தி நிற்குதல்.

காரணமின்றி நெஞ்சை கிப்லாவை விட்டும் திருப்புதல், ஸஜ்தாவின்போது இரண்டு கால்களையும் பூமியை விட்டும் உயர்த்துதல்.

ஸஜ்தா செய்யும்போது நெற்றியை பூமியில் வைக்காமல் மூக்கை மட்டும் வைப்பது. 16. தனக்குக் கேட்கும்படி சிரித்தல்.

இமாமை விட முந்தி எழுந்துவிடல்.

பர்ளான செயல்களில் ஒன்றை விட்டுவிடல். மேற்கண்டவைகளில் எதையேனும் செய்து விட்டால் தொழுகை முறிந்துவிடும். திரும்பவும் தொழ வேண்டும்.


தொழக் கூடாத நேரங்கள்


சூரியன் உதயமானதிலிருந்து சுமார் 20 நிமிடம் வரையும், சூரியன் உச்சிக்கு வரும் பொழுதும், சூரியன் மாலையில் மறையும்போதும் தொழக் கூடாது. அஸர் தொழுதபின் மக்ரிபு வரையிலும் தொழக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *