இஸ்லாம் எல்லா மண்ணுக்கும் ஏற்ற மார்க்கம் என்பது எவ்வளவு உண்மையோ அதுபோன்று எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற மார்க்கமாகும் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் மனிதனுடைய வாழ்வியல் முறைகளை மிகத் தெளிவாக இஸ்லாம் முன்வைக்கும்
மனித வாழ்வியலின் பல்வேறு கட்டங்களில் பலதரப்பட்ட இயல்களிலும் சூழல்களிலும் அவற்றின் ஆரம்ப நிலையிலிருந்து உச்ச நிலை வரை வழி காட்டுவது என்பதே இஸ்லாமின் தனிச்சிறப்பு காரணம் இம்முறை இறைவன் அளித்த வழிபாடு அவனது தூதர்கள் செய்து காட்டிய மார்க்க வழிமுறை
மனிதனுடைய வாழ்வியலின் ஒரு பகுதியான உழைப்பு ,சம்பாத்தியம் , வணிகம் , தொழில் ,விவசாயம் ,போன்றவை மூலம் அடிப்படை ஜீவாதார நிலையை முறைப்படுத்தி வருகிறது இந்த நிலையில் இத்துறையனத்துக்கும் உழைத்தல் என்பது கருவாக முதலாக இருப்பதால் உழைப்பைப்பற்றி இஸ்லாம் ,ஒரு வித்தியாசமான நேர்க்கோட்டை மனித குலத்திற்கு காட்டுகிறது
உழைத்து வாழ வேண்டும் என்பதை வழியுறுத்துவதோடு மனித இனத்திற்குத்தீங்கிழைக்ககூடிய மாபாதகமான எந்தத்தொழிலையும் வணிகம் வாவசாயத்தையும் செய்யக்கூடாது எனவும் தடுக்கிறது பிறர் உழைப்பில் சுகம் கண்டு சோம்பேறிகளாக வாழ்வதைச் சாடுவதன் மூலம் உண்மையான உழைப்பின் முக்கியத்தும் உணர்த்தப்படுகிறது ,மனிதன் சுயமறியாதைக்கூறியவனாக கெளரவமாக வாழ வேண்டும் என்பதும் அறிவுறுத்தப்படுகிறது மனிதன் உழைப்பது சம்பாதிப்பது ஹலாலான ( ஆகுமான ) வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை மார்கம் மிகத்தெளிவாக கண்டிப்புடன் சொல்லும்
ஹலாலான உழைப்பை வழியுறுத்தும் திருக்குர்ஆன் வசனம் ஒன்று இப்படி பேசும்
(ஜும்மா )தொழுகை முடிந்தவுடன் பூமியில் பரவி சென்று இறையருளை தேடிச்செல்லுங்கள்
( அல்குர்ஆன் 63 :10)
இறையருளை தேடுவதற்கும் பெறுவதற்கும் தொழுகை எப்படி ஒரு முக்கியமான வழிமுறையோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல !
உழைத்த சம்பாதிப்பது என்பதை இந்த இறை வசனம் தெளிவுபடுத்துகிறது (பூமியில் பரவி சென்று இறையருளை தேடுங்கள்)
உழைப்பை வலியுறுத்தும் நபி மொழிகள்
உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
(திர்மிதீ )
தனது கையால் உழைத்து சாப்பிடுகின்ற உணவைவிட சிறந்த உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது அல்லாஹ்வின் தூதராகிய தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது கையால் உழைத்து அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள்
(புகாரி)
உழைப்பு என்பது மட்டுமல்ல அது ஆகுமான உழைப்பாக இருக்க வேண்டும் என்பதையும் அதன் சிறப்புகளையும் பின்வருமாறு நபி மொழிகள் தெளிவு தருகின்றன
அல்லாஹ்வின் தூதரே பரிசுத்தமான தொழில் எது? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும் (மோசடி இல்லாத )நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று நபி அவர்கள் கூறினார்கள்
( அஹ்மத்)
ஹலாலான உணவை தேடுவது (தொழுகை ,நோன்பு ,ஹஜ்) போன்ற ஃபர்லான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும் என்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் )கூறினார்கள்
(பைஹகி)
உண்மையான நம்பிக்கை கூறிய வியாபாரி மறுமையில் நபிமார்களுடன் உண்மையாளர்களுடன் உயிர் தியாகம் செய்த ஷஹீதுகளுடன் இருப்பார் என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
பிறரிடம் யாசகம் கேட்பதைவிட ஒருவர் தம் முதுகில் விறகு கட்டையை சுமந்து (விறக்க)செல்வது சிறந்ததாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள்
பகலெல்லாம் உழைத்து களைத்தவர் மாலைக்குள் மன்னிக்கப்பட்டவர் ஆவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள்
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை
உழைத்தே வாழ வேண்டும் (ஹலாலான) ஆகுமான வழியில், பிறர் உழைப்பில் வாழ்வதானது தவறான வழியாகும், உழைப்பில்லாமல் சோம்பேறிகளாக வாழ்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது
இறைவன் வழியில் அழைப்பு பணி செய்த அத்துணை நபிமார்கள் ரசூல்மார்கள் ,வலிமார்கள், சஹாபாக்கள், இமாம்கள், அனைவருமே தாங்கள் உழைத்தே தங்கள் வாழ்வை நடத்தியுள்ளனர்
ஒரு மனிதன் பிறரிடம் கை நீட்டாது சுயமரியாதையுடன் கௌரவத்துடனும் வாழ வேண்டும் என இஸ்லாம் பணிகிறது இதன் மூலம் உழைப்பை மிகவும் அதிகமாக வலியுறுத்துகிறது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உங்களில் ஒருவர் தனது கயிற்றை எடுத்துச் சென்று விறகு சேர்த்து தொழில் செய்து வருவதானது ஒரு மனிதன் கொடுத்தாலும் மறுத்தாலும் அவனிடம் சென்று கைநீட்டி ஆசகம் கேட்பதைவிட சிறந்ததாகும்
(புகாரி முஸ்லிம்)
உழைக்காமல் சோம்பேரிகளாக பிறரிடம் கைநீட்டி யாசகம் கேட்பவர்கள் நாளை மறுமையில் முகத்தில் கருப்பு புள்ளிகளுடன் வருவார்கள் என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
இலவசமாக ஒன்றை ஒருவருக்கு அளிப்பதை விட அவருடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஊறிய உயரிய ஒன்றை அழிப்பதே மிகச் சிறப்பாகும்
மீனை தின்ன கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது மேலானது என்பது பிரபல கூற்று

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் உழைப்பிற்கு (யாசகம் கேட்பதற்கு எதிராக ) தொழில் கற்றுக் கொடுப்பதற்கு காட்டிய முன்னுதாரனமான
சம்பவ்
நபிகளாரின் சமூகத்தில் அன்சாரி சஹாபி ஒருவர் தன் தேவையை கூறி உதவி கேட்டார்’
தங்களிடம் ஒன்றுமே இல்லையா ? என நபியவர்கள் வினவ முரட்டு கம்பளிப் போர்வை ஒன்றும் கோப்பை ஒன்றும் எனது வீட்டில் இருக்கிறது என சஹாபி கூறினார் பாதியை விரித்தும் பாதியை போர்த்தியும் கொள்வேன் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார்கள் அதை கொண்டு வருமாறு நபியவர்கள் கூற அதை அந்த சஹாபி எடுத்து வந்தார்
அந்த இரண்டு பொருட்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏலம் விட ஒரு திர்கத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு சஹாபி முன் வந்தார் அதைவிட அதிக விலைக்கு வாங்குபவர் உண்டா? என்ன நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று முறை கூற இரண்டு திர்கங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு சஹாபி அதை வாங்கிக் கொண்டார்.
பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அன்சாரி சஹாபியை அழைத்து இதில் ஒரு திருகத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருட்களையும் மற்றொரு திருகத்திற்கு ஒரு கோடாரியையும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் என கூறி அவ்விருகங்களையும் அந்த தோழருடன் நபி அவர்கள் ஒப்படைத்தார்கள்
அந்த சஹாபியும் நபியவர்கள் சொன்னபடி செய்தார் நபி அவர்கள் தங்களின் முபாரக்கான கரங்களால் அந்த கோடாரிக்கு கணக்கு போட்டு அதை அவரிடம் கொடுத்து இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பா தியுங்கள் 15 நாட்களுக்குப் பின் இங்கு வாருங்கள் அதற்கு முன்பு இங்கு வர வேண்டாம் எனவும் கூறி அனுப்பினார்கள்
அவரும் அவ்வாறே செய்தார் சில நாட்களில் அவர் 10 திர்கங்களை சம்பாதித்தார் அதில் அவருக்கு தேவைப்படும் துணிகளையும் வீட்டிற்கு தேவையான தானியங்களையும் மற்ற பொருட்களையும் வாங்கி இருந்தார் இந்த நிலையில் அவரைக் கண்ட நபி அவர்கள் நீர் பிறருடன் தேவையாகி அருவருப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதை விட தற்போது நீ இருக்கும் இந்த நிலை எவ்வளவு அழகானது என பாராட்டினார்கள்
உண்மையான உழைப்பால் சமூகத்தில் படித்தர உயர்வும் தனிமனித வாழ்வின் தன்மையான உணர்வும் மேலோங்கும் என்பதையும் யாசகம் கேட்பதால் இம்மை மறுமை இரண்டிலும் இழிவு ஏற்படும் என்பதையும் நபியவர்கள் மிகத் தெளிவாக சுட்டிக்ககாட்டினார்கள்
இதுபோன்ற பல்வேறு இடங்களில் குர்ஆன், ஹதீஸ் மூலம் வலியுறுத்தப்படுகிறது இஸ்லாமிய வரலாற்றில் நபிமார்கள் சஹாபாக்கள் இமாம்கள் இறையன்பர்கள் அனைவரும் உழைப்பை தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டதையும் திங்கள் கரங்களால் உழைத்து கொண்டுள்ளார்கள் என்பதையும் காண முடிகிறது