இஸ்லாமிய குழந்தை பெயர்கள்

இஸ்லாமிய பெயர்கள்

பெயர்களின் உடைய முக்கியத்துவம் இன்றைக்கு யாருக்கும் தெறிவதில்லை நாம் பெயர்கள் தவறாக வைத்தே பிள்ளைகளின் வாழ்கையை அழித்து விடுகிறோம்

நாம் என்ன பெயர் நம் குழந்தைக்கு பெயர் சூட்டக்கூடிய விஷயத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும் ஏனென்றால் நாம் என்ன பெயர் சூட்டுகிறோமோ அதே போன்று தான் குழந்தை வாழ்வார்கள்
உதாரணத்திற்கு சைய்யத்( தலைவர்) என்று பெயர் சூட்டினால் அந்த சையத் என்பவர் வாழ்நாளில் எதாவது பொறுப்பில் தலைவராக இருந்து தான் மரணிப்பார்
ஆகையால் நல்ல அர்த்தமுள்ள பெயர்களை சூட்டுங்கள்

நபியவர்கள் கூறினார்கள் குழந்தைகளுக்கு அழகான முறையில் அர்த்த முள்ள பெயர்களை சூட்டுங்கள்

y1 2 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y2 1 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y3 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y4 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y5 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y6 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y7 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y8 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y9 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y10 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
y11 இஸ்லாமிய குழந்தை பெயர்கள்

லாக் டவுன் காலங்கள் நிறைய குழந்தைகளின் வாழ்க்கையை அடியோடு மாற்றி விட்டது. ஸ்கூல் திறக்கப்பட்டு விட்டாலும் லாக் டவுன் காலங்களில் ஆன்லைன் பாடங்களுக்காகவும் மற்ற நேரங்களில் விளையாட்டுகளுக்காகவும் செல்ஃபோனும் கையுமாக இருந்த பிள்ளைகளுக்கு அதை விட்டும் மீள முடியவில்லை. அத்தகைய பிள்ளைகளுக்கு ஸ்கூல் மற்றும் மதரஸா பாடங்கள் பெரும் சுமையாகவே உள்ளன. நம் பிள்ளைகளை செல்ஃபோன் என்ற மாயையில் இருந்து மீட்டெடுப்பது பெற்றோர் மீது முக்கியக் கடமையாகும். இக்காலத்தில் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்துவது பெரும் சிரமமான காரியம் தான். காரணம் எங்கு திரும்பினாலும் ஆபாசம், சினிமா, இணைய தளம் என ஷைத்தானின் மாயவலைகள் நிரம்பியுள்ள இக்காலத்தில் நம் பிள்ளைகளை அவைகளை விட்டும் பாதுகாப்பது முட்கள் நிறைந்த பாதையில் அவர்களை அழைத்துச் செல்வது போல் தான். எனினும் நம் பிள்ளைகளை நரக நெருப்புக்கு இரையாகி விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவதைத் தவிர வேறு வழியில்லை.عَلَيْهِ وَكَذَلِكَ هَؤُلَاءِ فِي حَمْلِهِمُ الْكِتَابِ الَّذِي أُوتُوهُ حَفِظُوهُ لَفْظًا وَلَمْ يَتَفَهَّمُوهُ (تفسير ابن كثير)

ஒழுக்கம் கற்பிக்காமல் மகனை வளர்த்த தந்தைக்கு ஏற்பட்ட கதி..

يُروى أن أحد العلماء جاءه رجل فقال له ابني ،ضربني قال تعال بابنك فأتى به فإذا هذا الابن كبير سمين بدين كأكبر ما يكون من الرجال، فقال له: أضربت أباك؟ قال: نعم. ضربتُه ، قال : لِمَ ضربته ؟ قال : وهل يحرم أن يضرب الابن أباه؟ أي: هل في الشريعة أنه لا يجوز ضرب الابن لأبيه؟ قال العالم للأب : أعلمتَ ابنك شيئاً من القرآن؟ قال: لا والله. قال: أعلمته شيئاً من السنة؟ قال: لا والله. قال: أعلمته شيئاً من آداب السلف ؟ قال: لا. قال: فماذا صنعت معه في حياته؟ قال: أطعمته وسقيته وآويتُه حتى كَبُر، قال: تستحق أن يضربك ؛ لأنه ظن أنك بقرة؛ فضربك فاحمد الله حيث لم يكسر رأسك (دروس للشيخ عائض القرني)

.

ஒருவரிடம் ஒன்பது நல்ல குணங்கள் இருந்து ஒரே ஒரு தீய குணம் இருந்தால் அந்த ஒரு தீய குணம் மற்ற ஒன்பது நல்ல குணங்களையும் கெடுத்து விடும்

وقال عمر بن الخطاب إذا كان في الانسان عشر خصال تسعة منها صالحة وواحدة هي سوء الخلق أفسدت هذه الخصلة تلك التسعة (غرر الخصائص الواضحة

ஒரு தந்தை தன் பிள்ளைக்கு பல லட்சம் செலவில் கார் வாங்கிக் கொடுத்தால், அல்லது விமானம் வாங்கிக் கொடுத்தால் அவர் உயிரோடு இருக்கும் வரை தான் அவரை இவன் புகழுவான். (MY DADY,S GIFT தன் காரில் எழுதி வைப்பது போல.) ஆனால் ஒழுக்கத்தைக் கற்றுத்தந்தால் தந்தை இறந்த பிறகும் அவருக்காக துஆ செய்வான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ صَدَقَةٌ جَارِيَةٌ وَعِلْمٌ يُنْتَفَعُ بِهِ وَوَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ (ترمذي) عن سعيد بن المسيب يقول : إن الرجل ليرفع بدعاء ولده من بعده . وقال بيده فرفعها إلى السماء (مؤطا مالك باب الدعاء – أبواب السير إن الرجل ليرفع أي في درجاته ومنزله – أي أشار ابن المسيب بيده فرفعها إلى السماء تفهيما لعلو درجات الرجل

ஒழுக்கம் கற்பிக்கப்படாததால் பொழுது போக்கில் மூழ்கி வாழ்க்கையை பாழாக்கிய சிறுவனைப் பற்றிய உண்மைச் சம்பவம் பல வருடங்களுக்கு முன்பு சென்னை மண்ணடியில் ஒரு பள்ளி மாணவன் (முஸ்லிம்) தனக்கு பாடம் போதித்த டீச்சரையே

கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பு அந்த மாணவனைப் பற்றி வந்த செய்திகள் சிந்திக்க வேண்டியவை. அவனுக்குஅவனுடைய பெற்றோர் மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்துள்ளனர். பாக்கெட் மணியாக தினமும் 100 ரூபாய் தருவார்களாம். அவன் ஆசைப் பட்டதையெல்லாம் அவனது தந்தை அவனுக்கு வாங்கித் தருவார். விலை உயர்ந்த செல்ஃபோன், கேமரா, போன்ற ஆடம்பரமான பொருட்களை பள்ளிக்குக் கொண்டு வந்து சக மாணவர்களிடம் பெருமையடித்துக் கொள்ளும் அவனுக்கு படிப்பு துளியும் ஏறவில்லை. சம்பந்தப் பட்ட அவனது டீச்சர் இவனுடைய ஆடம்பரமான போக்கைப் பற்றி இது தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்து ம் பலனில்லை. கடைசியில் அவனுடைய பெற்றோர்களிடம் பலமுறை அந்த இதை அந்த டீச்சர் சொல்ல அவர்கள் சற்று சுதாரித்து அவனை கண்டிக்க ஆரம்பித்துள்ளனர். அவனுடைய ஆடம்பரப்பொருட்களையும் பிடுங்கி வைத்துக் கொண்டபோது அவனுடையை கோபம் அனைத்தும் டீச்சர் மீது திரும்பியுள்ளது. இது மட்டுமன்றி இவனுடைய கதை போன்றே டீச்சரை கொலை செய்யும் கதையம்சம் கொண்ட இந்தி சினிமா படத்தை 15 தடவை பார்த்துள்ளான். அது இவனுடைய உள்ளத்தில் மேலும் கொலைவெறியை தூண்டியுள்ளது. அதனால் கொலை செய்துள்ளான்.

செல்ஃபோனில் ஆன்லைன் விளையாட்டுகள் மாணவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் ஆன்லைன் விளையாட்டுகள் பல மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளன. சென்னை அமைந்த கரையைச் சேர்ந்த மாணவர் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி அதில் நிறைய பணத்தை இழந்து வேறு வழியின்றி தான் வேலை பார்த்த கடையிலேயே 20 ஆயிரத்தை திருடியுள்ளார். இறுதியில் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் பெரம்பலூர் அருகே 5-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஆன்லைன் பாடங்களுக்காக பெற்றோர் செல்ஃபோன் வாங்கித் தந்துள்ளனர். பாட நேரம் போக மற்ற நேரங்களில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இது எட்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். இதுபோல் நிறைய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆகுமான விஷயமாக இருந்தாலும் அதற்கு அடிமையாகி விடக்கூடாது என்று எச்சரிக்கும் இஸ்லாம்

عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ إِيَّاكُمْ وَاللَّحْمَ فَإِنَّ لَهُ صَرَاوَةً كَصَرَاوَةِ الْخَمْرِ (مَوْطا

உமர் ரழி அவர்கள் கூறினார்கள். தொடர்ந்து இறைச்சி உண்ணுவதை விஷயத்தில் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் மதுவுக்கு இருப்பது போன்று மனிதனை அடிமைப் படுத்தும் தன்மை இறைச்சிக்கும் உண்டு. படிப்பினை- தொடர்ந்து இறைச்சி சாப்பிட்டு பழகியவர்களுக்கு ஒருநாள் கூட அது இல்லாமல் உணவு உள்ளே இறங்காது. இந்த நிலை முஃமினுக்கு இருக்க க்கூடாது என உமர் ரழி அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நம்முடைய வாழ்வின் நேரங்கள் வீணாக கழியும் போது அது ஷைத்தானின் செயல்களின் பால் இட்டுச் செல்லும்

والنفس البشرية جبلت على أن الإنسان إن لم يشغلها بالخير شغلته بالشر. وروي عن الإمام الشافعي في هذا المعني (الكتاب: الوقت وأهميته في حياة المسلم)

கழிவறையை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் ஆம் என்று துஆ ஓத வேண்டும். இதன் பொருள் இறைவா ! என்னை மன்னிப்பாயாக ! என்பதாகும். கழிவறைக்குள் நாம் என்ன தவறு செய்தோம். எதற்காக கழிவறையில் இருந்து வெளியே வந்த பின் மன்னிப்புக் கேட்கிறோம் என்பதற்கு விளக்கமளிக்கும் மார்க்க அறிஞர்கள் கூறுவது

 என்று மன்னிப்பை

.பட்டத்தை வானில் பறக்கவிட்டு பார்த்திருப்போம் பட்டம் பறப்பதற்கு நூல் தான் ஆதாரம் இல்லையேல், பட்டம் வானில் உயரபறப்பதற்கு முடியாது. ஆனால், நூல் உங்கள் கைப்பிடியில் இருக்கிறது . பட்டம் தான் விரும்பியவாறு சுதந்திரமாக விண்ணில் பறப்பதற்கு தனக்கு நூல் ஒரு தடையாக இருக்கின்றது என்று எண்ணி 2 விண்ணில் உயர பறந்த பட்டம் நூல் கட்டுப்பாட்டை விரும்பாமல் நூலை அறுத்துக் கொண்டால் என்ன நேரும் அதுபோல் தான், மாணவர்கள் ஒழுக்கக் அறுந்த போது மண்ணில் முட்புதரில் வீழ்ந்து தாறுமாறாக கிழிந்து அழியும் கட்டுப்பாட்டில் இருக்கும் காலமெல்லாம் வெற்றியைநோக்கி பயணித்துக் கொண்டிருப்பார்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர்களின் கையில் தான் இருக்கிறது

நூல்

!

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدُعَاءَ (بخاري) باب ما قِيلَ فِي أَوْلادِ الْمُشْرِكِينَ – كتاب الجنائز – دَل الحديث على أن المولود لو ترك مع فطرته الأصلية لما كان على شيء من الأديان الباطلة وأنه إنما يقدم على الدين الباطل لأسباب خارجية ، وهي سعي الأبوين في ذلك

பிள்ளைகளின் மனதில் சிறிதளவும் கெட்ட எண்ணம் வந்து விடக் கூடாது என்பதற்காக தொலை நோக்கு சிந்தனையுடன்

நபி(ஸல்) சொல்லித் தந்த அறிவுரை

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرٍ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ بَاب مَتَى يُؤْمَرُ الْغُلَامُ بِالصَّلَاةِ- كتاب الصلاة

يعني أنهم لا يضطجع بعضهم مع بعض؛ حتى لا يحصل شيء من دواعي الشر أو شيء من الشيطان بحيث يحرك بعضهم على بعض فلا يكون هناك اضطجاع من بعضهم مع بعضهم، وإنما يكون هناك تفريق، سواء أكانوا ذكوراً وإناثاً أم ذكرواً فقط أم إناثاً فقط؛ لأنه عندما يحصل التقارب يحصل بسببه شيء من تحريك الشهوة أو الفتنة أو ما إلى ذلك، فجاءت السنة بأن يمرنوا على ذلك، وأن يعودوا على ذلك

وهم صغار، بحيث يبتعد بعضهم عن بعض، ولا يكون هناك تلاصق وتقارب بحيث يحصل معه شيء لا تحمد عقباه. (شرح ابي داود)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *