இல்லறம் நல்லறமாக அமைய

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


உங்கள் மனைவி மார்களை நீங்கள் அவர்களிடம் மன அமைதி (சுகம்) பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் ஜோடியை (மனைவியை) படைத்தது உங்களுக்கிடையில் அன்பையும் பாசத்தையும் உண்டாக்கியிருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

(அல்குர்ஆன் 30:21)


இல்லறம் உருவாக ஆண் பெண் இருவர் தேவை. அந்த இல்லறம் இனிய முறையில் நல்லறமாக அமைய வேண்டுமானால் ஒழுக்கமுள்ள மணமக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். எப்படியென்றால்
பெண்களை நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறார்கள்.
1.
அவர்களின் பொருளுக்காக

  1. அவர்களின் குலத்திற்காக
    3.
    அவர்களின் அழகிற்காக
  2. அவர்களின் தீனிற்காக.
    மார்க்க விளக்கமறிந்து அதன்படி நடப்பதற்காக என்றார்கள் நபியவர்கள். ஆனால் இன்று பொருளுக்காக மட்டும் திருமணம் செய்யப்படுகிறது. அப்படிச் செய்யாதீர்கள். ஏனென்றால் அந்தப் பொருளே அவர்களை வழிகெடுத்து விடலாம் அல்லது அந்தப் பொருள் அழிந்து விடலாம். வேறு (நபரிடம்) சென்று விடலாம்.
    அதுபோல் குலப் பெருமைக்காக மட்டும் திருமணம் செய்யப்படுகிறது. ஆனால் அப்படிச் செய்யாதீர்கள். சில தருணங்களில் குல மதிப்பும் குன்றி (இல்லாமல்) போய் விடலாம்.
    அடுத்து அழக்கிற்காக மட்டும் திருமணம் செய்யப்படுகிறது. அப்படிச் செய்யாதீர்கள். அந்த அழகே அவர்கள் வேறு வழியில் திருப்பி விடலாம்.
    எனவே தீனுக்காக மட்டும், மார்க்கக் கல்வி ஒழுக்கம் கருதி மட்டும் திருமணம் செய்யுங்கள்; அது என்றும் நிலைத்திருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஏனென்றால் மார்க்கத்தின் தெளிவான அறிவும், அழகிய குணமும் என்றும் அழியாத மாபெரும் செல்வமாகும். இவர்களின் இல்லறம் நல்லறமாகும். இல்லற வாழ்க்கை இனிக்க வேண்டுமானால் கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்து மதித்து விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.
    கணவன் எப்படி மனைவியைப் புரிந்து மதித்து நடக்க வேண்டும். முதலில் மனைவிமார் கள் கணவனிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் ஆவார்கள் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். அமானிதத்தைப் பேணி நடக்க வேண்டும்.
    கணவனுக்கு மனைவி மீது பல கடமைகள் இருக்கின்றன. உண்ண உணவு, உடுத்த உடை. வசிக்க (வீடு) இருப்பிடம் ஆகியவற்றை செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் தீய வழியில் செல்லாமலிருக்க குடும்ப கௌரவத்தை காக்க அவர்களுக்கு நல் உபதேசம், (ஆலோசனைகள்) அறிவுரைகள் சொல்லப்பட வேண்டும்.
    ஒரு ஈமான் கொண்ட கணவர். ஈமான் கொண்ட தன் மனைவியரை வெறுக்க வேண்டாம்



இல்லறம்

திருமணத்தின் சிறப்பு

“ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அவர் மார்க்கத்தின் ஒரு பகுதியைப் பேணிக் கொண்டவராவார்; மறு பகுதியை அவர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வாராக!’ என்பதாக நபிகள் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஓர் இளைஞன் திருமணம் செய்து கொள் வானாயின் ஷைத்தான் “என் கைசேதமே! இவன் என்னை விட்டும் அவனுடைய மார்க் கத்தைப் பேணிக்கொண்டு விட்டாளே! என்று அலறுவானாம்.

மேலும்,

‘உலகமனைத்தும் மனிதனுடைய இன்பப் பொருள்களாகும்; அவற்றுள் சிறந்த ஒன்று நற்குணமுள்ள மனைவியாவாள்”

என்று மா நபி (ஸல்) கூறியுள்ளனர்.

ஒரு நிகழ்ச்சி

ஒரு நல்லடியார் நீண்ட காலமாகத் திருமணம் செய்து கொள்வதில்லை என்று கூறிக்கொண்டிருந்தார்.

ஒரு நாள் இரவு தூங்கி

எழுந்ததும்,’எனக்குத் திருமணம் செய்து வையுங்கள்” என்று கட்டாயப்படுத் தினார். அவருக்குத் திருமணம் செய்து

பட்டது. அதன்பின் அவரிடம் வினவினார்கள்:

வைக்கப்

“நாங்கள் உங்களைத் திருமணம் செய்து கொள்ளு மாறு பல முறைக் கட்டாயப்படுத்திய போதெல்லாம்முடியா என்று மறுத்து வந்தீர்களே இப்பொழுது திடீரென மணமுடித்து வைக்கச்சொன்னதன் கார ம் யாது”? என்று.

அவர் கூறினார். “இன்றிரவு நான் ஒரு களவு கண் டன். அதில் கியாம நாள் வந்து விட்டதாகவும். நானும் மற்றும் படைப்புகள் அனைத்தும் மஹ்ஷர்பெரு வெளியில் அணி அணியாய் நின்றிடும் நிலையிலும் இருந் திடக் கண்டேன். அது சமயம் எனக்குக் கடுமையான நீர்வேட்கை ஏற்பட்டது. எனக்கு ஏற்பட்டது போன்றே மற்றவர்களும் தாகத்துடன் தவித்து நின்றனர். அதுபொழுது சிறுவர்கள் தங்கத்தாலும். வெள்ளியாலும் ஆன கிண்ணங்களில் தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு நடுவே புகுந்து ஒவ்வொரு வராகக் கொடுத்துக்கொண்டே சென்றனர். நான் அவர்களிடம், ‘எனக்குத் தாகமாக இருக்கிறது எனக் ரும் தண்ணீர் கொடுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கு அச்சிறுவர்கள், “நாங்கள் முஸ்லிம்களின் பருவம் எய்தாத குழந்தைகள். நாங்கள் பருவம் எய்துவதற்கு முன்பே இறந்து விட்டவர்கள். நாங்கள் தண்ணீரை எங்கள் தாய் தந்தையர்களுக்கு மட்டுமே கொடுப்போம்; எங்கள் கூட்டத்தில் உம்முடைய பிள்ளைகள் இல்லை. எனவே, நாங்கள் உமக்குக் கொடுக்க இயலாது” என்று கூறிவிட்டனர்.

எனவேதான், திருமணத்தின் மூலம் அல்லாஹ் குழந்தையைக் கொடுப்பான் என்று நான் ஆதரவு வைக்கிறேன்” என்பதாக அந்நல்லடியார் கூறினார்கள். -இர்ஷாதுல் இபாத்

‘நீர் திருமணம் செய்து கொண்டீரா?” என்று நபி (ஸல்) அவர்கள் ஒருவரை வினவினார்கள். அவர், ”இல்லை” என்று கூறினார்.

உடனே, “நீர் வசதி படைத்தவரா” என்று வினார்கள்.


அவர், “ஆம்” என விடைபகர்ந்தார்.

அவரின் மறுமொழியைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், ‘ஒ மனிதரே! நீர் ஷைத்தானின் நண்பர் களில் உள்ளவராவீர். கிறித்துவப் பாதிரிகள் திரு மணம் செய்யாதிருப்பதைப் போன்று நீரும் மண முடித்திடாமல் இருக்கின்றீரோ?” என்று சினத்துடன் கூறினார்கள்.

-தன்பீஹ்

“ஒரு பெண் முதலில் ஒருவனை மணந்து அவளின் மறைவிற்குப் பின், மற்றொருவனை மணந்து வாழ் வாளாயின் அவள் இறந்தபின், ஒரு கூற்றின்படி மறுமையில் அவள் முதல் கணவனுடன் இருப்பாள் என்றும், மற்றொரு கூற்றின்படி இரண்டாம் கணவ

டன் இருப்பாள் என்றும், உறுதியான கூற்றின்படி, அவள் இவ்வுலகில் எந்தக் கணவனுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாளோ அவனுடன் மறுமை யிலும் சேர்ந்து வாழ்வாள்” எனக் கூறப்பட்டுள்ளது.

-ஃபுஸ்தானுல் ஆரிபீன் – ரூஹுல்பயான்

ஒரு மனிதர் நபி தாவூத் (அலை) அவர்களிடம், “எத்தகைய பெண்ணை மணம் செய்து கொள்வது நல் என வினவினார்.

நபி அவர்கள். ‘மனிதரே! இதுபற்றி என் மகனார் சுலைமானிடம் கருத்துக் கேளும்” எனக் கூறினார்கள்.

அம்மனிதர் வெளியில் வந்தார். சிறுவர் சுலைமான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இச்சிறுவரிடம் அதுபற்றி எவ்வாறு வினவுவது எனச் சிந்தித்தவராக. சரி, நபி கூறினார்களே கேட்டுத்தான் பார்ப்போமே என்றெண்ணியவராக சிறுவர் சுலைமானிடம் அதுபற்றி வினவினார்.

அதற்கு, சிறுவர் சுலைமான் அவர்கள், “சிவந்த பசும்பொன்னையும் தூய்மையான வெள்ளியையும் நீர் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; குதிரையை அஞ்சிக் கொள்ளும் அஃது உமக்கு இடர் விளைவிக்கும்” என்றார் கள். இதனைக்கேட்ட அம்மனிதர் இதன் பொருள் யாதென விளங்காதவராக மீண்டும் நபி தாவூத் (அலை) அவர்களிடம் வந்து விளக்கங் கேட்டார்.

நபி அவர்கள் பசும்பொன் என்பது கன்னிப்பெண் எனவும் வெள்ளி என்பது கன்னி யழிந்தவள் எனவும், குதிரை என்பது வயதானவள், அல்லது பிள்ளைகள் பெற்றவன் எனவும் விளக்கம் அளித்தார்கள்.

பிஷ்ருவ் ஹாபி (ரலி) அவர்கள் இறந்தபின் அவர் களை ஒருவர் களவில் கண்டு, “உங்கள் நிலை யாதாயிற்று? என்று வினவப்பட்டபோது, அவர்கள் கூறினார்கள். “என்னுடைய சுவர்க்கத்து மாளிகை, திருமணம் புரிந்து இறந்தவர்களின் மாளிகையை விட்டும் தனித் திருந்தது” எனக் கூறினார்கள்.

فال كحُوا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَاءِ مَثْنَى وَكُن

ور باغ

அல்லாஹ் தன் அருள் மறையில் கூறுகின்றான்:-

“பெண்களில் உங்களுக்கு விருப்பமான வர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றா

கவோ,

நான்கு

நான்காகவோ மணந்து

கொள்ளுங்கள்:-

திருமணத்தின் மாண்பிளைக்குறித்து மா நபி (ஸல்) அவர்கள் கூறிடும்போது.

النَّكَاحُ مِنْ سُنَّتِي فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِني

“திருமணம் புரிவது என் வழி முறையாகும். (சுன் னத்தாகும்) எவர் என் சுன்னத்தைப் புறக்கணிக் கின்றாரோ, அவர் என்னைச் சார்ந்தவரல்லர்; என்று,

மேலும், கூறினார்கள்:-

التمسوا الرزاق بالنكاح

“திருமணம் செய்வதன் மூலம் உங்கள் உணவைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று

அவளுடைய ஒரு குணம் (பழக்கம்) பிடிக்கவில்லை யென்றாலும் அவளுடைய மற்றொரு குணம் பிடித்திருக்கும். அவளிடம் ஒரு குறை காணப்பட்டால் அவள் உங்களுக்கு பத்து (நன்மையை) நல்லதை செய்திருப்பாள். ஏனெனில் நீங்கள் உங்கள் கோபத்தால் அவள் மீது வெறுப்படையும் போது அவள் செய்த நல்லவற்றையும் சற்று சிந்தியுங்கள். மேலும் நீங்கள் மனைவிமார்களிடத்தில் பாகுபாடின்றி பாசத்துடன் நடந்து கொள்வீராக என்றார்கள் நபியவர்கள்.
மனைவிமார்கள் மாபெரும் தியாகிகள் ஆவார்கள். கணவனை கரம் பிடித்து விட்டதற்கு பின்னால் உடல் சுகம் தரும் பெண்ணாய், வீட்டைக் காக்கும் காவல்காரியாய், துணிகளை சலவை செய்யும் வண்ணாத்தியாய், குழந்தைகளுக்கு நல்ல தாதியாய், கணவன் நோயில் அவதிப்படும் போது கனிவான பேச்சால், உதவி செய்யும் மருத்துவ பெண்ணாய், உபசரிக்கிறாள் மனைவி. இத்தகைய மனைவிமார்களை வாழ்க்கைத் துணையாக பெற்ற கணவன்மார்கள் அனைவரும், பெரும் பாக்கியசாலிகள், இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

நபியவர்கள் சொன்னார்கள் : உங்களில் சிறந்தவர் யாரென்றால் தன் மனைவியிடத்தில் எவர் நன்மதிப்பை பெற்றாரோ அவரே சிறந்தவராவார்.


மனைவி எப்படி கணவனைப் புரிந்து மதித்து நடக்க வேண்டும்
ஒரு கணவன். தன் மனைவியைப் பார்த்தால் சந்தோஷமூட்டுவாள். கணவனின் கட்டளைக்கு உடனே வழிபட்டு நடப்பாள். தனது உடலிலோ பொருளிலோ அவனுக்கு வெறுப் பூட்டும்படி நடக்க மாட்டாள். எந்தப் பெண், கணவனின் திருப்தி பெற்ற நிலையில் மரணமடைகி றாளோ அவள் சுவனத்தில் நுழைவாள் என்றார்கள் நபியவர்கள்.


பெண்ணே உன் கணவனிடம் எப்படி நடந்து கொள்கிறாய் என உன்னை நீயே பரிசீலித்துக் கொள். ஏனென்றால் அந்த நடைமுறைதான் உன்னை சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அழைத்துச் செல்லும் என்றார்கள்.
எந்த மனைவி தன் கணவனின் மன நிம்மதியை கெடுத்துக் கொண்டிருப்பாளோ அந்தக் கணவனுக்குரிய சொர்க்கத்து ஹூர் என்னும் கண்ணழகிகள் அவளை நோக்கி அடிப்பாவியே அவரை நிந்திக்காதே; உன்னிடம் கொஞ்ச நாட்களுக்குத்தான் இறைவன் தங்க வைத்துள்ளான். விரைவில் உன்னைப் பிரிந்து எங்களிடம் வந்து விடுவான் என்று கூறுவார்கள்.
இல்லறத்தில் இணைந்து விட்ட கணவனும் மனைவியும் ஒருவர் இன்னொருவருக்கு மாத்திரம் கொடுத்து சங்கடங்களை தவிர்த்து வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்கிக் கொள்வோமாக! இறைவன் அருள்வானாக! ஆமீன்!
சந்தோஷசத்தை நான் என் மனைவிமார்களி டத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கிறேன். கணவன் மார்கள். மனைவிமார் களின் அன்பையும் துஆவையும் பெற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *