ஆரோக்கியம் ஓர் அருட்கொடை

ஆர

ஆரோக்கியம் என்பது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையும் அமானிதமும் ஆகும். இறைவன் நமக்கு எண்ணற்ற அருட்கொடைகளைத் தந்துள்ளான். ஓய்வு, நேரம், பொன், பொருள், உயிர் போன்ற அருட்கொடைகளில் முக்கியமாக நம்முடைய ஆரோக்கியம் இருக்கிறது. அந்த ஆரோக்கியம் உடலுக்கு இதயத்தைப் போன்றும், கண்ணுக்கு இமையைப் போன்றும் இருக்கிறது.

ஆரோக்கியம் என்பது பணத்தைச் சம்பாதிப்பதற்கும் அதனைச் செலவு செய்வதற்கும் நம் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வதற்கும் மூலமாக இருக்கிறது. நாம் இவ்வுலகத்தில் எதை இழந்தாலும் மீண்டும் மீட்டு விடலாம். ஆனால் மீட்க முடியாத ஒன்று நம் ஆரோக்கியம்.

ثُمَّ لَتُسْلُنَّ يَوْمَبِذٍ عَنِ النَّعِيمِ

பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட்கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.

{அல்குர்ஆன்102:8}

இறைவன் நமக்கு ஆரோக்கியம் என்னும் அருட்கொடையைத் தந்திருக்கிறான். அதைப் பற்றி மறுமையில் நம்மிடம் கேள்வி கேட்கப்படும். ஆனால் அவற்றிலும் நாம் அலட்சியமாக இருக்கின்றோம். இவ்வாறு நம் ஆரோக்கியத்தை இழப்பதற்கு இந்த உலகம் நவீனமயமாக்கப்பட்டதே ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அல்லாஹ் இந்த மனித சமுதாயத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வாரி வழங்கியிருக்கின்றான்.

அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் மகத்துவம் வாய்ந்த அருட்கொடை ஆரோக்கியம் ஆகும்.

“உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களை விடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது”

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். நோய்நொடியில்லாத சுகமான வாழ்க்கை தான் நாம் பெற்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம்.

செல்வங்கள்

ஆர

ஆரோக்கியம்

என்ற ஒரு செல்வம் மட்டும் இல்லையென்றால் மற்ற எத்தனை இருந்தாலும் இல்லாததைப் போலத்தான்.எனவே செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் ஆரோக்கியம் என்பதை நாம் விளங்க முடிகிறது.

செல்வங்களிலே மிகப்பெரும் செல்வமாக மக்களால் கருதப்படுவது நோயற்ற ஆரோக்கியமான வாழ்வாகும்..

النعمة اذا دامت جهلت واذا فقدت عرفت

நோய் வராமல் ஆரோக்கியமான நிலை நீடித்துக் கொண்டிருந்தால் ஆரோக்கி யத்தை நாம் மறந்து விடுவோம். ஆரோக்கியம் இல்லாமல் போகிற போது தான் ஆரோக்கியத்தின் சிந்தனை வரும் என்று சொல்வார்கள். இன்று நிறைய பேருக்கு ஆரோக்கியத்தின் அகமியம் புரிவதில்லை.ஆனால் அதை மார்க்கம் அளப்பெரும் நிஃமத் என்று சொல்கிறது.

وما بكم من نعمة فمن الله

எந்த நிஃமத் உங்களிடம் உள்ளதாகும்.

இருந்தாலும் அது

அல்லாஹ்விடமிருந்து (அல்குர்ஆன் : 16; 53)

உங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிற நிஃமத்துகள் என்று வருகின்ற இந்த வசனத்திற்கு பெரும்பாலான குர்ஆன் விரிவுரையாளர்கள் உடல் ஆரோக்கியம் என்று தான் எழுதுகிறார்கள். இப்படி குர்ஆனும் சரி ஹதீஸ்களும் சரி மிகப்பெரும் செல்வம் என்றும் மிகப்பெரும் நிஃமத் என்றும் உடல் ஆரோக்கியத்தைத் தான் அடையாளம் காட்டுகிறது.

ஐந்திற்கு முன் ஐந்தை பயன்படுத்திக் கொள்”

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحْتَكَ قَبْلَ سَقَمِكَ, وَغِنَاكَ قَبْلَ فَقُرِكَ وَفَرَاغَكَ قَبْلَ شُغُلُكَ, وَحَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ ” شعب الإيمان

‘உனக்கு, “ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்”” என நபி (ஸல்) அவர்கள் ஒருவருக்கு உபதேசமாக கூறினார்கள். அவை:

* முதுமை வருமுன் இளமைப் பருவத்தையும்.

நோய் வருமுன் உடலாரோக்கியத்தையும்.

வறுமை வருமுன் செல்வநிலையையும்’

அதிக வேலை பழுக்கள் வருமுன் ஓய்வு நேரத்தையும்.

* மரணம் வருமுன் வாழ்க்கையையும் இப்னு அப்ஷையா 34319

شعب الإيمان للبيهقي رقم الحديث: 9573

மனிதர்கள் நஷ்டமடையும் இரண்டு அருட்கொடைகள்

عَنِ ابْنِ عَبَّاس – رضى الله عنهما – قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ،

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

> ஆரோக்கியம்.

ஓய்வு

ஆரோக்கியம் எனும் அருட்கொடை!..

{புகாரி 6412)

அல்லாஹ் இந்த மனித சமுதாயத்திற்கு எண்ணற்ற அருட்கொடைகளை வாரி வழங்கியிருக்கின்றான்.

அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் மகத்துவம் வாய்ந்த அருட்கொடை ஆரோக்கியம் ஆகும்.

وما بكم من نعمة فمن الله

جسم، وسعة رزق، وولد فمن الله يقول الإمام القرطبي رحمه الله- :من نعمة : أي صحة

ll

“மேலும், உங்களுக்கு கிடைத்துள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்து வந்தவைதாம்”, ( அல்குர்ஆன்: 16: 53 ) எனும் இறை வசனத்திற்கு விளக்கம் தருகிற இமாம் குர்துபீ(ரஹ்) அவர்கள் “உடல் ஆரோக்கியம், விசாலமான வாழ்வாதாரம், குழந்தைபேறு ஆகியவைகளைத் தாம் இங்கே நிஃமத் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்” என கூறுவார்கள். (நூல்: தஃப்ஸீர் குர்துபீ)

மனித வாழ்வு அழகு பெற

يقول وهب بن منبه رحمه الله – : ” رؤوس النّعم ثلاثة؛ فأولها نعمة الإسلام التي لا تتم نعمه إلا بها، والثانية: “نعمة العافية التي لا تطيبُ الحياة إلا بها ، والثالثة: نعمة الغنى التي لا يتمُّ العيش إلا به

عدة الصابرين لابن القيم (ص117

வஹப் இப்னு முநப்பஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மிக உன்னதமானது மூன்று அருட்கொடைகளாகும். 1. இஸ்லாம் எனும் அருட்கொடை அது இல்லை எனில் வெறெந்த அருட்கொடைகளும் ஓர் அடியானுக்கு பூர்த்தியாக இருக்காது. 2. ஆரோக்கியம் எனும் அருட்கொடை அது இல்லை என்றால் மனித வாழ்வு அழகு பெறாது. 3. பொருளாதாரம் எனும் அருட்கொடை அது இல்லை என்றால் மனித வாழ்க்கை பூரணம் அடையாது”. (நூல்: இத்ததுஸ் ஸாபிரீன் லிஇமாமி இப்னுல் கைய்யிமி (ரஹ்)….)

ஈமானிற்கு அடுத்து சிறந்த அருட்கொடை – ஆரோக்கியம்

عن أبي هريرة – رضي الله عنه- قال

سمعت أبا بكر الصديق رضي الله عنه على هذا المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلّم في هذا اليوم من عام الأول، ثم استعبر أبو بكر وبكي، ثم قال

«سمعت رسول الله صلى الله عليه وسلّم يقول: «لم تؤتوا شيئا بعد كلمة الإخلاص مثل العافية، فاسألوا الله العافية

மஸ்ஜித்துன் நபவீயின் மிம்பரில் நின்று பிரசங்கம் செய்து கொண்டிருந்த ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் “நீங்கள் லாயிலாஹா இல்லல்லாஹீ என்ற வார்த்தைக்குப்பிறகு ஆரோக்கியத்தைத்தவிர வேறு எதனையும் உங்களுக்குச் சிறந்த ஒன்றாக வழங்கப்பட வில்லை. எனவே, நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள்! என்று இதே போன்றதொரு நாளில், இதே மின்பரில் நின்று நபி {ஸல்} அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்று கூறிய அபூபக்கர் சித்தீக் (ரலி)- அவர்கள் மாநபி {ஸல்} அவர்களின் நினைவு சூழ்ந்து கொள்ளவே அழுதார்கள். (நூல்: முஸ்னத் அபூ யஃலா, நஸாயீ )

அல்லாஹ்விடம் ஆரோக்கிய வாழ்வை கேட்போம்…

عَنْ أَوْسَطٌ قَالَ: خَطَبَنَا أَبُو بَكْرٍ فَقَالَ: قَامَ رَسُولُ الله مَقَامِي هَذَا عَامَ الْأَوَّلِ وَبَكَي أَبُو بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ: سَلُوا . اللَّهَ الْمُعَافَاةَ أَوْقَالَ الْعَافِيَةَ فَلَمْ يُؤْتَ أَحَدٌ قَطُّ بَعْدَ الْيَقِينِ أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ أَوِ الْمُعَافَاةِ. رواه احمد

“ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு முறை பிரசங்கம் நிகழ்த்தும் போது, “கடந்த வருடம் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் நிற்கும் இதே இடத்தில் (பிரசங்கம் செய்ய) நின்றிருந்தார்கள்” என்று கூறி அழ ஆரம்பித்தார்கள். பிறகு “அல்லாஹ்விடம் சுகத்தைக் கேளுங்கள். ஏனேனில், இறை நம்பிக்கைக்குப் பிறகு சுகத்தைவிட சிறந்த பாக்கியம் யாருக்கும் கொடுக்கப்படவில்லை” (முஸ்னத் அஹ்மத்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : الدُّعَاءُ لا يُرَدُّ بَيْنَ الآذَانِ والإقَامَةِ، قَالُوا: فَمَاذَا نَقُولُ يَارَسُولُ اللَّهِ؟ قَالَ: سَلُوا اللهَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ. رواه الترمذي

இகாமதுக்குமிடையே

துஆ

பாங்குக்கும், கேட்கப்படும் மறுக்கப்படுவதில்லை, (ஒப்புக் கொள்ளப்படுகிறது)” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னபோது, யாரஸூலல்லாஹ்! நாங்கள் எதைக் கேட்க வேண்டும்?” என ஸஹாபாக்கள் கேட்டனர். அல்லாஹ்விடம் இம்மை, மறுமையின் சுகத்தைக் கேளுங்கள்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (திர்மிதீ)


அனுதினமும் (காலை, மாலை) அண்ணல் நபி [ஸல்] அவர்கள் செய்த பிரார்த்தனை.

قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبي بَكْرَةَ، أَنَّهُ قَالَ لأَبِيهِ يَا أَبَةِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةِ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لاَ إِلَهَ إِلا أَنْتَ تُعِيدُهَا ثَلاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِينَ تُمْسِي . فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ .

யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை அளிப்பாயாக..! எனது செவியில் ஆரோக்கியத்தை வழங்குவாயாக..! எனது பார்வையில் சுகத்தைத் தருவாயாக..! இந்த துஆவை மூன்று முறை ஓதுவார்கள்.

நூல்:

அபூதாவூது 5090

முதலில்

அல்லாஹ்விடம் ஆரோக்கியதிற்காக தன்னுடைய ஒருவர் பிரார்ததனையும் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவினால், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு “அல்லஹும்மஃக்பிர் லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ” எனும் இந்த வாக்கியங்களைச் சொல்லிப் இறைவா! (பொருள்: கட்டளையிடுவார்கள். பிரார்த்திக்கும்படி என்னை புரிவாயாக! கருணை மன்னிப்பாயாக! எனக்குக் வழங்குவாயாக! ஆரோக்கியத்தை எனக்கு செலுத்துவாயாக!

வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!)

இறைவனின்

விசாரணை

அருட்கொடைகளில்

என்னை நல்வழியில்

எனக்கு

முஸ்லிம் (5228)

அடியானிடம்

மறுமையில்

முதல்

عَنْ أَبِي هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ أَوَّلَ مَا يُسْأَلُ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ – يَعْنِي الْعَبْدَ مِنَ النَّعِيمِ – أَنْ يُقَالَ لَهُ: أَلَمْ نُصِحَ لَكَ جِسْمَكَ، وَنُرُوِيَكَ مِنَ المَاءِ البَارِدِ “- سنن الترمذي

[இறைவனின் அருட்கொடைகளில் அடியானிடம்] மறுமையில் முதல் விசாரணை, “உன் உடலை நான் ஆரோக்கியமாக வைக்கவில்லயா? குளிர்ந்த நீரால் உன் தாகத்தை தீர்க்கவில்லையா?” என்று கேட்பதேயாகும். என நபி [ஸல்] ஸுனன் திர்மிதீ அவர்கள் கூறினார்கள்.

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَادَ رَجُلًا مِنَ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ؟» قَالَ: نَعَمْ، كُنْتُ أَقُولُ: اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ في الْآخِرَةِ، فَعَجَلُهُ لِي فِي الدُّنْيَا، فَقَالَ رَسُولُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سُبْحَانَ اللهِ لَا تُطِيقُهُ – أَوْ لَا تَسْتَطِيعُهُ . أَفَلَا قُلت: اللهمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ ” قَالَ: فَدَعَا اللَّهَ لَهُ، فَشَفَاهُ. صحيح مسلم

5216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் உடல்நலம் விசாரிப்பதற்காகச் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் “ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்” என்று கூறினார்.

அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) “அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) “உன்னால் அதைத் தாங்க முடியாது”. அல்லது “உன்னால் அதற்கு இயலாது” என்று கூறிவிட்டு, நீ “இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!” என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.

பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான். ஸஹீஹ் முஸ்லிம்

உலகம் முழுவதும் கிடைத்ததற்குச் சமம்

فعن عبيد الله بن مِحْصَن الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ” من أَصْبَحَ مِنْكُمْ (2346 ) آمِنًا في سِرْبِهِ، مُعَافًى فِي جَسَدِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ، فَكَأَنَّمَا حِيزَتْ له الدُّنْيَا “. رواه الترمذي

அப்துல்லாஹ் இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எவர் படுக்கையில் இருந்து நிம்மதியோடு எழுகின்றாரோ, எழுந்த அன்றைய நாளில் உடலில் ஆரோக்கியத்தை உணர்கின்றாரோ, எழுந்த அன்றைய நாளில் உணவை உண்கின்றாரோ அவருக்கு இந்த உலகம் முழுவதும் கிடைத்ததற்குச் சமமாகும்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

جاء رجل إلى يونس بن عبيد -رحمه الله – يشكو ضيق حاله، فقال له

أيسرك ببصرك هذا الذي تبصر به مائة ألف درهم؟” ، قال الرجل: لا، قال: فبيديك” مائة ألف؟”، قال الرجل: لا ” ، قال:” فبرجليك ؟ قال الرجل: لا ، فذكره يونس بن عبيد

رحمه الله

بنعم الله عليه، ثم قال له

أرى عندك منين ألوف، وأنت تشكو الحاجة!”. الشكر لابن أبي الدنيا (101″

ஒரு மனிதர் யூனுஸ் இப்னு உபைத் (ரஹ்) அவர்களிடம் வருகை தந்து, தான் மிகவும் கஷ்டப்படுவதாக, வறுமையில் வாடுவதாக முறையிட்டார்.

அது கேட்ட யூனுஸ் (ரஹ்) அவர்கள் அவரிடம் “உம்முடைய கண்ணை எனக்கு ஒரு லட்சம் திர்ஹமுக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை நான் தரமாட்டேன்” என்றார்.

சரி, அப்படியானால் உன் இரு கைகளையும் ஒரு லட்சம் திர்ஹமுக்கு எனக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை, நான் தரமாட்டேன்” என்றார். சரி, அப்படியானால் உன் இரு கால்களையும் ஒரு லட்சம் திர்ஹமுக்கு எனக்கு விலைக்கு தந்து விடுகின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கவர், இல்லை, நான் தரமாட்டேன்” என்றார்.

அப்படியானால், அல்லாஹ் உனக்கு பேருபகாரம் செய்திருக்கின்றான். உன்னிடம் நான் பல லட்சம் திர்ஹம் மதிப்புடைய இறைவனின் உபகாரங்களைக் காண்கின்றேன். ஆனால், நீரோ! வாழ்க்கையில் கஷ்டப்படுவதாக என்னிடம் வந்து முறையிடுகின்றீர்?!” என்று கூறினார்கள்.

(நூல்:அஷ்ஷுக்ரு லிஇப்னி அபித்துன்யா)

அல்லாஹ்விற்கு அதிகம் பிரியமாவர்?

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلى اللَّهِ مِنَ الْمُؤْمِنِ الصَّعِيفِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உடல் பலகீனமான இறை நம்பிக்கையாளரை விட ஆரோக்கியமான, பலம் நிறைந்தமிகச் சிறிய, அதிகம்பொருளுள்ள துஆ

நபி (ஸல்) அவர்களிடம் அவருடைய சிறிய தந்தையான அல் அப்பாஸ் (ரழி) அவர்கள் கேட்டார்கள்:

யா ரஸுலுல்லாஹ் (ஸல்) எனக்கு ஒரு துஆவை கற்று கொடுங்கள் என்றார்கள்! அதற்கு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் என்னுடைய சிறிய தந்தையே, கூறுங்கள்:

اللهم اني اسالك العافية

‘அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா ‘

(யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்)

ஆஃபியா என்றால் என்ன?

ஆஃபியா என்ற வார்த்தைக்கு அர்த்தம் எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று என்பதாகும்!

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்

வாழ்வதற்கு போதிய பணம்

இருக்கின்றீர்கள் என்பதாகும்.

இருக்கிறீர்கள்

என்றால்

ஆஃபியாவில்

இருக்குமானால் நீங்கள் ஆஃபியாவில்”

உங்களது குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதாக

இருந்தால்

நீங்கள்

ஆஃபியாவில் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிகப்பட்டவரானால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள்! ஆஃபியாவின் பொருள் :

ஆஃபியாவின் என்றால் : யா அல்லாஹ்! என்னை வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாப்பாயாக. இது துன்யாவையும் ஆகிராவையும் சேர்த்தே குறிக்கும்.

அப்பாஸ் (ரழி) அவர்கள் இதைப்பற்றி சிந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து கூறினார்கள்:

யா ரஸூலுல்லாஹ் (ஸல்) ! இந்த துஆ பார்ப்பதற்கு கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரியதாக வேண்டும் என்றார்கள்!

தந்தையே,

இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள் : என்னுடைய நேசத்திற்குரிய சிறிய அல்லாஹ்விடம் ஆஃபியாவை கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஆஃபியாவைவிட சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்.,

இது மிகவும் எளிமையான துஆ. நீங்கள் கூறும் இந்த துஆவின் உண்மையான பொருளானது :

யா அல்லாஹ் நான் உன்னிடம் சகல விதமான துன்பத்தை விட்டும், கேடுகளை விட்டும், ஆழந்த துக்கத்தை விட்டும், கஷ்டத்தை விட்டும், பாதுகாப்பு தேடுகிறேன். என்னை சோதிக்காதே!

இவையெல்லாம் ′ அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுக அல் – ஆஃபியா என்பதில் உள்ளடங்கிவிடும். என்று கூறினார்கள்! (நூல் : திர்மிதி : 3514)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் பரிபூரண உடல் ஆரோக்கியத்தையும் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *