بسم الله الرحمن الرحيم
الله لا إله إلا هو الحي القيوم لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نوراله ما في السمواتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا باذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ منْ عِلَيهِ الإِيمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمواتِ وَالْأَرْضَ وَ لا يؤوده حِفْظُهُمَا وَهُوَ العلى العظيمه
ஆயத்துல் குர்ஸீ தமிழில்
அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம் லா தஃகுதுஹு ஸினத்துன் வ வலா நவ்முன் லஹுமா Fபிஸ் ஸமாவாத்தி வமா Fபில் அர்ழி மன் தல்லதீ யஷ்பFஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபைன ஐதீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீ தூன பி ஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷா அ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல் அர்ழ வலா யூவூதுஹு ஹிப்F …ஹுமா வஹுவல் அலிய் யுல் அழீம்.
ஆயத்துல் குர்ஸியின் பொருள்
அல்லாஹ் (எவ்வித மகத்துவமுடையவனென்றால்) அவனைத் தவிர வேறு நாயன் (இல்லவே) இல்லை. அவன் நித்திய ஜீவன் (என்றும்) நிலையானவன். அவனை உறக்க மும் நித்திரையும் பீடிக்காது.வானங்கள் பூமியிலுள்ளவை யாவும் அவனுடை யவையே. அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார் தான் பரிந்து பேசக் கூடும்?
அவர்களுக்கு எதிரிலிருப்பவற்றையும் புறம்பாக இருப் பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய நாட்ட மின்றி அவனுக்கு தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்து கொள்ளவே முடியாது. அவனுடைய ஆட்சி வானங்களிலும், பூமியி லும் பரவியிருக்கின்றது.
அவ்விரண்டையும் கா(த்து இரட்சி)ப்பது அவனுக்கு சிரமமன்று. மேலும், அவன் மிகவும் உயர்ந்தவன், மகத் துவமிக்கவன். -சூரத்துல் பகரா
ஆயத்துல் குர்ஸியின் தெளிவு
திருமறையிலுள்ள திருவசனங்களில் தனிச் சிறப்பைப் பெறுகிறது இந்த ஆயத்துல் குர்ஸீ.
இதை ஆராய்ந்து பார்த்தால் இது முழுதும் தவ்ஹீதின் அடிப்படையையே நிரூபிக்கின்றது என்பது அறிய வருகிறது.
‘அல்லாஹு” என்று வரும் முதல் வாசகம் சாதாரண மானதல்ல. இது இறைவனின் திருநாமங்களில் மிக மேன்மையானதாகும். மற்ற திருநாமங்களெல்லாம் ஸிபாத்து-அவனுடைய கல்யாண குணங்களைத் தெளிவு படுத்துபவை. ஆனால் இது அவனுடைய தாத்துக்குச் சொந்தமான திருநாமம்.
‘லாயிலாஹ இல்லாஹுவ’ வணங்குவதற்கு தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை என்பது அவன் ஒருவன்தான் என்று அவனுடைய தாத்துவை ஓர்மைப் படுத்துகிறது.
‘அல் ஹையுல் கையூம் அவன் நித்திய ஜீவன், என்றும் நிலையானவன் என்பது அவனுடைய தாத்தின் கல்யாணத் தன்மையைக் கூறுகிறது.
‘லா தஃகுதுஹு ஸினதுன் வ் வலா நவ்முன்’ அவனை உறக்கமும் நித்திரையும் பீடிக்காது என்பது அவனின் தூய் மையையும் பரிசுத்தத் தன்மையையும் உறுதி செய்கின்றது.
‘லஹுமா பிஸ் ஸமாவாத்தி வமாபில் அர்ழி’ வான கள் பூமியிலுள்ளவை யாவும் அவனுடையவையே என்பது அவனுடைய செயல்கள் அனைத்திலுமுண்டு ‘என்பதையே புரிய வைக்கிறது.
‘மன் தல்லதீ யஷ்பவு இன் தஹு இல்லா பி இத்னிஹி’ அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகி லும்) யார் தான் பரிந்து பேசக் கூடும் !
இதில் அவனுடைய தனித்துவமிக்க ஆட்சி, அதிகாரங்களை சுட்டிக் காட்டப்படுவதுடன், அவனிடத்தில் சிபாரிசு
செய்ய அவன் யாருக்கு அனுமதியளிப்பானோ அது அவனால் கொடுக்கப்படும் சிறப்பைப் பற்றியும், அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் அவனுடன் வேறு யாரும் கூட்டு அறவே கிடையாது என்பதும் தெளிவாகின்றது.
யஃலமு மா பைன – பைன அய்திஹீம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பி ஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ’ அவர்களுக்கு எதிரிலிருப்பவற்றையும் புறம்பாக யிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய நாட்டமின்றி அவனுக்குத் தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் (மற்றெவரும் தங்கள் அறிவால்) அறிந்து கொள்ளவே முடியாது.
*இந்த வாசகத்தின் கருத்து, அவனுடைய ஞானம் தனிச் சிறப்புடையது. அவனே மற்றவர்களுக்கு அதைக் கொடுப்பவன். அவன் நாட்டமின்றி ஒரு அணு கூடஅசைய முடியாது என்றும் அவ்னுடைய ஞானம் ஒப்பு உவமையில்லாதது என்றும் வருகிறது.
‘வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல் அர்ழி”- அவனுடைய ஆட்சி வானங்களிலும் பூமியிலும் பரவி நிறைந்திருக்கின்றது.
இது அவனுடைய ஆட்சி அதிகாரம் உலகங்களனை த லுமுள்ளது என்று ஆட்சியின் வல்லமை பற்றி கருத்து வருகின்றது.
‘வலா யவூதுஹு ஹிப்லுஹுமா’ இவ்விரண்டையும் கா(த்து இரட்சி)ப்பது அவனுக்கு சிரம மன்று. இதில் அவனுடைய ஆட்சி அதிகாரம், இரட்சிப்புத் தன்மைகளில் எந்த பலகீனமும் குறையும் ஏற்பட முடியாது என்று எடுத்துரைக்கப்படுகின்றது.
‘வஹுவல் அலிய்யுல் அழீம்’ அவன் மிகவும் உயர்ந் தவன், மகத்துவ மிக்கவன் என்பதில் அவனுடைய சிறப்புத் தன்மைகளில் மூலமாக அமைந்த இரு தன்மை கள் காட்டப்படுகின்றன என இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நூல் ஆதாரம் : மிப்தாஹுஸ் ஸஆதத் II பாகம் 390-வது பக்கம் பாடம் : வஜ்ஹுத்;தப்ஸீர் ஆயத்துல் குர்ஸீ.
சிறந்த திருவசனம்
திருமறையில் சிறந்த திருவசனம் எது என்பது பற்றி கருத்து வேறுபாடு என்பதே கிடையாது. ஆனால் ஒரு திருவசனத்தைவிட, மற்றொரு திருவசனம் ஏதாவதொரு வகையில் சிறப்புப் பெற்றுவரும். ஆனால் ஆயத்துல் குர்ஸீ எல்லாத் திருவசனங்களைவிடவும் தனிச் சிறப்புடையது.
“அபா முன்திர்திருமறையில்
மிகச் சிறந்த திருவசனம் எது என்று உங்களுக்குத்தெரியுமா?”
என ஹலரத் உபை-இப்னு கஃபு (ரலி) அவர்கள் கேட்டார்கள்.
“அது ஆயத்துல் குர்ஸி” என்று ஹலரத் அபூ முன் திர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் ஷரீப்
இந்த திருவசனமே திருமறையில் மிகச் சிறந் தஆயத்து என்பது ஏகோபித்த கருத்தாகும்
,
திருமறையிலுள்ள ஒரு ஸூரத்து-அத்தியாயத்திற்கு பல சிறப்புப் பெயர்களுண்டு. அது போன்று ஆயத்துக் களுக்கு கிடையாது. இருப்பினும் சிறப்புப் பெயர் இந்த ஒரு திருவசனத்திற்கு மட்டுமே உண்டு என்று கூறப்படு கின்றது.
ஆனால், இந்த ஆயத்துல் குர்ஸிக்கு ‘குர்ஸீ’ என்ற பெயரைத் தவிர, மற்றும் பல திருநாமங்களுண்டு.
‘ஆயத்துல் குர்ஸி’க்கு சுமார் நாற்பது திருநாமங் களுண்டு. இந்த திருநாமங்களுக்கான காரணங்களையும், அதன் ஒவ்வொரு பலாபலன்கள் என்னவென்பதையும் ‘கஜீனத்துல் அஸ்ரார்’ எனும் நூல் எழுதுகின்றது.
(சுருக்கத்தைக் கருதி அவைகளை இங்கே எழுதுவதை விட்டுவிட்டேன்… ஆசிரியர்.)
இத்திருவசனத்திற்கு சிறப்புத் திருநாமங்களாகக் கூறப் படும் வரிசையில் மற்றொரு பெயர்-ஸையிதத்து ஆயில் குர்ஆன்-குர்ஆன் ஷரீபின் ஆயத்துக்களில் தலைமைத் தனம் கொண்டது என்று கூறப்படுகிறது.
இது தவிர, ஆயத்துல்பத்ஹ்-வெற்றித் திருவசனம், ஆயத்துல் பரக்கத்-அபிவிருத்தி ஏற்படுத்தும் திருவசனம்
ஆயத்துல் முகத்தஸ்-இறைவனின் தூய்மைத் தன்மையை நிருபிக்கும் திருவசனம், ஆயத்துல் ஹாபிழா பாதுகாக்கும் திருவசனம். ஆயத்துல் ஆமின-அச்சம்தீர வைக்கும் திருவசனம். ஆயத்துல் முஸ்தகீதீன் – உதவி தேடுபவர் களுக்கு உதவியளிக்கும் திருவசனம். ஆயத்துத் தவ்ஹீதுஏகத்துவத்தை எடுத்துரைக்கும் திருவசனம்,
இப்படிப் பல காரணப் பெயர்களுண்டு, இந்த ஆயத்துல் குர்ஸிக்கு. இந்தப் பெயர்களில் புகழ் பெற்ற பிரபல்யமான பெயர்தான் ஆயத்துல் குர்ஸி.
ஆயத்துக்களின் அணிவரிசையில் இந்த ஆயத்துல் குர்ஸியை விட வேறு ஒரு ஆயத்தை மிகச் சிறந்ததாக எந்த ஒரு கல்விமானும் கூறவேயில்லை.
‘ஆயத்துல் குர்ஸீ’ எனும் இத்திரு வசனம் அருளப் பட்டு, அது ஓதப்பட்டபோது, ஒவ்வொரு ஆயத்துடனும் எண்பதினாயிரம் அமரர்கள் அத்துடன் இறங்கினர்”
என தப்ஸீரில் நஜ்முத்தீன் நஸ்பீ (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்கள்.
‘ஆயத்துல் குர்ஸீ’ என்பது ஒரு ஆயத்துத்தான் இங்கே ஒவ்வொரு கலிமா – வாசகத்துடன் பொருளையே ஹதீது அறிவிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
{ ஆதாரம்: நுஜ்ஹத்துல் மஜாலிஸ்}
ஆயத்துல் குர்ஸியின் சிறப்பு
இந்த திருவசனம் பல சிறப்பு மிக்க நன்மைகளை தரக் கூடியதாகும். அவற்றில் இம்மைப் பலாபலன்களும் நன்மைகளுமுண்டு. மறுமை வாழ்விற்கான பலாபலனுமுண்டு.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த ஆயத்தின் சிறப்பான பலன்கள் பற்றி சில ஹதீதுகள் நவின்றுள் ளார்கள். அவைகளில் சிலவற்றை காணலாம்.
“யார் ஐவேளை (பர்லு) தொழுகைக்குப் பின் தினமும் ஆயத்துல் குர்ஸியை ஓதிக் கொண்டு வரும் பழக்கமுடைய வரோ; அவருக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் மரணத் தைத் தவிர, வேறு எந்த திரையுமில்லை.
-அவர் மரணித்து விட்டால், இறைவனைச் சந்திப் பார் கஷ்டமின்றி சொர்க்கத்தினுள் புகுவார் !!
இந்த ஹதீது பைஹகீ எனும் நூலில் ராஃபிஆன ஹதீதாக அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது என்பதை ஹலரத் இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் தங்களின் ‘துர்ருல் மன்தூர்’ எனும் கிதாபில் எழுதுகிறார்கள்.
இதுபோன்று மற்றொரு ஹதீது வருகிறது “ஆயத்துல் குர்ஸியை ஒவ்வொரு தொழுகைக்குப் பின் ஓதக் கூடியவர் சொர்க்கத்தினுள் நுழைய, அவருக்கு மரணம் தான் தடை யாக இருக்கின் றது.-
-அவர் மரணித்து விட்டால் சொர்க்கத்தினுள், நுழைந்து விடுவார்” என்று {நஸாயீ, தப்ரானீ }ஆகிய இரு ஹதீது கிரந்தங்களிலும் இந்த ஹதீது வருகின்றது.
இந்த ஹதீது பற்றி தெளிவு பல விரிவுரையாளர் களினால் அறிவிக்கப்படுகிறது. அவர்களில் இமாம் ராஜி (ரஹ்) அவர்களும், ஹலரத் கத்தீப் ஷர்பைனி (ரஹ்) அவர்களும் குறிப்பிடத் தக்கவர்.
மேலும் “மிஷ்காத்து’ எனும் நூலில் பாபு திக்ரு பஅதஸ் ஸலவாத்-தொழுகைக்குப் பின் செய்யும் தியானம் எனும் பாடத்தில் கூறப்படுகிறது.
ஆனால்; இந்த ஹதீது அறிவிப்பை அல்லாமா இப்னு
ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் மட்டுமே ‘மவ்லூஃ’என்கிறார்கள்,
எனினும்பழாயில்-சிறப்பு தியானம் என்பதில் பரவாயில்லை என்று கூறினாலும் இந்த ஹதீதுவை பல முஹத்திதீன்களும் உறுதி செய்துள்ளனர்.
அவர்களில் பிரபலமானவர்கள் ஹலரத் இமா தபரானீ (ரஹ்) அவர்கள் (2) இமாம் நஸயீ (ரஹ்) – கள் (3) இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் (4) இம.. தாரகுத்னீ (ரஹ்) அவர்கள் என ஸிப்ருஸ் ஸஆதா எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது.
இந்த ஹதீது அடிப்படையைக் கவனிக்கும்போது. இந்த ஆயத்தை ஓதி வருபவர் சொர்க்கவாதி என்பதும் அவர் ஈமானுடன் மரணிப்பார் என்பதும் புரிய முடிகிறது.
“சொர்க்கத்தில் ஒருவர் நுழைய வேண்டுமானால் அவர் ஈமானுடன் மரணிக்க வேண்டும். இது தவிர வேறு எந்த நிபந்தனையும் இந்த ஹதீதுகளில் கூறப்பட்ட கருத்துக்களிலில்லை” என்று அல்லாமா இமாம் ஸஃதுத்தீன் தப்தாஜானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்
.
எனவே, தினமும் ஒவ்வொரு பர்லு தொழுகைக்குப் பின்னும் ஆயத்துல் குர்ஸீ ஓதி வருவது தவ்ஹீதென்னும் இறை ஏகத்துவத்தை நிருபித்துக் காட்டுவதுடன் ஈமான் ஒளி பெறச் செய்கின்றது.
இது ஹதீது வழி ‘சுன்னத்’ என்பதும் பலன் மிக்கது என்பதும் உறுதி. அதில் அமைந்து இருக்கிறது,

இஸ்முல் அஃலம்
இத்திருவசனத்தில் அல்லாஹ்வுடைய திருநாமங் களில் மிக வலுப்பான சிறப்புக்குரி.ய திருநாமமுண்டு. அதற்கு இஸ்முல் அஃலம் என்று கூறப்படுகின்றது.
‘அல்லாஹ்’ என்பது இறைவனுடைய திருநாமங்கள் 99-ல் மிக உயர்வானது. எனவே இத்திருநாமம் நூறாவது என்று கூறப்படுகின்றது. இது இஸ்முத்தாத்து-அவனு டைய சொந்தத் திருநாமம். இது தவிர மற்றவை யாவும் ஸிபாத்து-நற்குண கல்யாணத் தன்மைப் பெயர்களாகும்.
சிலர் இந்த ‘அல்லாஹ்’ எனும் திருநாமம் இஸ்முல் அஃலம் என்று கூறுகின்றனர். அதற்கு பல ஆதாரங்களை யும் நிருபிக்கின்றனர்.
அந்த அடிப்படையில் ஹலரத் இமாமுல் அஃலம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அல்லாஹ்’ என்பது தான் “அவனுடைய வலுப்பமான திருநாமங்களில் மாபெரும் சிறப்புக்குரியது’ என்று. இந்த ரிவாயத்து ஹலரத் முஹம்மது இப்னு ஹஸன் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகிறது
இதே கருத்தையே ஹலரத் அபூ ஜஃபர் தஹான (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.
‘அல்லாஹ்’ எனும் திருநாமத்தை தினமும் ஆயிரம் தடவை ஓதி வந்தால் மன உறுதியுடைய ‘ஸாஹிபுல் எக்கீன்’ எனும் நற்பேறு கிட்டும்.
இந்த எண்ணிக்கையின்படி நாட்டங்களுக்கு ஓதினால் அவைகள் நிறைவேறும்.
தினமும் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் நூறு தடவையாக ஓதி வந்தால், அவர்களின் இருதயம் விசால மாகி இல்மு-ஞானம் நிரப்பப்படும்.
இதுபோன்று ஆயிரமாயிரம் பலன் மிக்க ஓதும் வழி முறைகளுண்டு.
அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ‘இஸ்முல் அஃலம் இருப்பது உண்மைதான். ஆனால் அது எது என்பதில் வேறுபாடுகள் உண்டு. அவற்றில்
கருத்து
‘அல்லாஹ்’ என்ற திருநாமம்.
ஒன்று
மற்றொன்று “யா ஹையு யா கையூம்” என்று கூறப் படுகின்றது.
‘அல் ஹையுல் கையூம்’-அவன் நித்திய ஜீவன். என்றும் நிலையானவன் என்பதே இதன் பொருள். இத் திருநாமம் வார்த்தையால் இரண்டாக இருந்தாலும் கருத்தில் ஒன்று என்றே சொல்லப் படுகின்றது.
இதன் தெளிவு பின்பு விவரிக்கப்படும். இத்திருநாமம் தான் ‘இஸ்முல் அஃலம்’ என்று பலரும் கூறுகின்றனர்.
ஏனெனில் இத்திருநாமத்திற்கு இருக்கும் சிறப்பு போன்று வேறு எந்த திருநாமத்திற்குமில்லை என்று குறிப் பிடப்படுகின்றது.
நபி ஈஸா (அலை) அவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். உயிரற்ற சவத்தை நோக்கி “யாஹையு யாகையூம்” என்று சொல்வார்கள்.
அந்த சடலம் உயிர் பெற்றெழுந்து விடும். உயிரற்ற உடலை உயிர் பெற்றெழச் செய்யும் வல்லமையுடையது தான் “யாஹையு யாகையூம்’-எனும் இஸ்முல் அஃலம் என்பது மிக பிரபல்யமானது.
இவ்வளவு மேன்மை மிக்க திருநாமத்திற்கு ‘துஆயே அஹ்லுல் பஹ்ர்’ என்றும் சொல்லப்படும். ஏனெனில் பயணிகளின் பயங்கரத்தை நீக்கும் வல்லமை
கடல்யுடையது இது.
அவர்களை எதிர் நோக்கி வரும் அபாயத்தை விட்டும் பாதுகாப்பு பெற இந்த திருநாமத்தையே அதிக ஓதிப் பலன் பெற்றுள்ளனர் மிகப் பலர்.
இதை ஓதிக் கொண்டு வருபவர்களை நோக்கி வரும் ஆபத்து நிலை தடுமாறி திசை திருப்பப்பட்டு விடும். இதற்கு சான்றாக ஹதீது சம்பவம் ஒன்றை நினைவுக்கு கொண்டு வரலாம்.
“பத்ரு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் என்ன செய்து கொண்டிருக் கின்றார்கள் என்று கண்டு செல்ல நாடி அவர்களின் கூடாரம் நோக்கி நான் வந்து பார்த்தபோது:-
-நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சஜ்தாவில் இருந்து கொண்டு ‘யாஹையு யாகையூம்’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததை அறிந்தேன்.
இந்த மகத்துவமிக்க திருநாமத்தை மட்டுமே உச் சரித்துக் கொண்டிருந்தார்கள். இத்துடன் வேறு எதையும் சேர்த்து ஓதவில்லை என்பதை உணர்ந்த நான், ‘யாஹையு யாகையூம்’ என்று தொடர்ந்து ஓதத் தொடங் கினேன்,
அல்லாஹ் இந்த திருநாமத்தின் பொருட்டால் தான்- பத்ரு யுத்தத்தை மாபெரும் வெற்றியாகத் தந்தான்” என்று ஹலரத் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். எனவேதான்:-
ஹலரத்இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள் “யாஹையு யாகையூம்’ என்பது தான் இஸ்முல் அஃலம்” என்று.
‘இஸ்முல் அஃலம்’ என்பது பற்றிய கருத்து வேறு பாடுகள் பல காணப்பட்டாலும் அதை உறுதி-ஊர்ஜிதம் செய்வது சஹீஹான-உறுதிமிக்க அறிவிப்பைக் கொண்டு தான்!
என அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜரு (ரஹ்) அவர் கள் கூறுகிறார்கள். இந்த அடிப்படையில் திருமறையில் வரும் திருவசனங்களில் ‘இஸ்முல் அஃலம்’ உண்டு.
ஹலரத் அபூஉமாமா (ரலி) அவர்களின் மாணவர் ஹலரத் அபுல் காசிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:-
இஸ்முல் அஃலம் என்பது அல்ஹையுல் கையூம் என் பதுதான்.
அல்லாமா ஜஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : “லாயிலாஹ இல்லாஹுவல் ஹையுல் கையூம் என்பதாகும்.”
இது தவிர:
ஹதீதுகளின் சான்றுடன் வருவதைக் கவனியுங்கள். “இஸ்முல் அஃலம் இவ்விரு திருவசனங்களில் இருக் கின்றன
(1)வஇலாஹுகும் இலாஹுன் வாஹிது லாயி லாஹ ல்லாஹுவர் ரஹ்மானுர் ரஹீம்.
(2) அலிப்-லாம்-மீம் அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹையுல் கையூம்’
அறிவிப்பவர்: அஸ்மா பின்து எஜீது நூல் ஆதா ரம்{:-திர்மதி-605 வது பக்கம் இரண்டாவது பாகம்.
(2) அபூதாவூது-211 வது பக்கம்.
(3) இப்னுமாஜா-282 வது பக்கம்.
(4) அஹ்மது – 461 வது பக்கம். நான்காவது பாகம்
(5) தாரமி 432 வது பக்கம்,
(6) அபூமுன்திர் 325 வது பக்கம்.
ஹையுன்-ஜீவனுள்ளவன் என்னும் இந்த தன்மை இருந்தால் தான், இது தவிர மற்ற தன்மைகளான காதிர் வல்லமையுள்ளவன், ஆலிம்-அறிந்தவன், ஸமீவு-கேட் பவன், பஸீர்-பார்ப்பவன் போன்ற ஏனைய தன்மைகள் ஏற்படும்.
ஜீவியமில்லாதவனிடம் மற்ற மேற்கூறிய தன்மைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை, இருக்கவே இருக்காது, எனவே இத் தன்மைகளுக்கு மூலமாக இருப்பது ஜீவியம். அதனால் அது எல்லாத் தன்மைகளையும் ஏற்றுக் கொள்ளும் தகுதி யுடையது மட்டுமல்ல;
இத் தன்மைகள் எல்லாவற்றையும் விட ஹையுன்- ஜீவியம் உள்ளவன் என்பதை மிக சிறப்புக்குரியது என்று கூறப்படுகின்றது.
கையூம்-என்றும் நிலையானவன். இந்த திருநாமம் அவனுடைய தஜல்லியாத்து-ஜோதி பிரகாசம் எல்லாப் படைப்பினங்களின் மீதும் நிலையாக உண்டு. அல்லாஹ் வுடைய இந்த தஜல்லிய்யாத்து படைப்பினங்களில் தரி படுத்தப்படும் போது:-
எல்லா படைப்புகளும் இல்லாமலாக்கப்பட்டு, அவனு டைய ஹக்கிய்யத் – உள்ளமை மட்டும் நிலைபடுத்தப்படு கிறது. இந்த நிலையை தரிபடுத்த ஹயாத்து எனும் ஜீவியம் அவசியம் இருந்தே தீரவேண்டும்.
இப்போது கையூம்-அதாவது என்றும் நிலையானவன் என்பது, ஹையுன்-ஜீவியமானவன் என்ற ஹயாத்தில் சங்கமமாகின்றது. இந் நேரம் –
‘ஜீவனுள்ளவன், என்றும் நிலையானவன்’ என்னும் இரண்டு திருநாமங்களும் ஒரே நிலையடைந்து விடுவதால், இதை ஒரேதிருநாமம் என்றே கூறப்படுகிறது.
அல்லாஹ்வுடைய தொண்ணூற்றி ஒன்பது திருநாமங் களில் ஒன்று தான் இஸ்முல் அஃலம்-வல்லமை மிக்க திருநாமம். அது “யாஹையு யா கையூம்’ என்பது தான்.
நபி பெருமானார் (ஸல்) அவர்களின் மனக்குறை-நிம் மதியில்லாத நேரத்திலும் நெருக்கடியான நிலை ஏற்பட்டா லும் தாங்கள் அதிகமாக தியானம் செய்வது இதைத்தான்: ‘யாஹையு யாகையூம் ரஹ்மதிக்க அஸ்தகீது-என்றும் நிலை யானவனே! நித்திய ஜீவனே! உன் பேரருளே எனக்கு உதவியாகட்டும்!” என்று.
அறிவிப்பவர்: ஹலரத் அனஸ் (ரலி) அவர்கள்
{நூல் ஆதாரம்: 1. திர்மதி 211 பக்கம், 2 ஆம் பாகம் 2. இப்னு ஸனீ பக்கம் 109. 3. ஹாக்கிம் (இது ஸq ஹான ஹதீது) கிதாபுல் அத்கார்
இந்த இஸ்முல் அஃலத்தைக்கொண்டு துஆ அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.
நாட்டங்கள் நிறை வேறும், கஷ்டங்கள் நீங்கும், கடன்கள் தீரும்.
ஆதாரம்: ரூஹுல் பயான் 3-வது பாகம் 400வது பக்கம்,
‘அல்லாஹ்’ என்பது அவனது தாத்துக்குச் சொல்லப் படும் திருநாமம். யாஹையு யாகையூம் என்பது அவ னுடைய அஸ்மாக்களிலேயே மிக வல்லமை மிக்க ‘இஸ்முல் அஃலம்’ என்று சொல்லப்படுகிறது.
எனவே; யா அல்லாஹு யாஹையு யா ‘கையூம் என்றும், அல்லது யா அல்லாஹுல் ஹையூல் கைழ என்றும் ஓதி வரலாம்.
இஸ்முல் அஃலம் என்பது எது என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அதிகமான கல்விமான்களின் கருத்து மேற்கூறப்பட்ட இந்த திருநாமம்தான்.
“இத்திரு நாமத்தை, தங்களுடைய பெயரின் அரபி எண் கணக்குப்படி கணித்து அந்த எண்ணிக்கையளவு தினமும் காலை மாலை ஓதி வருவது நாட்ட தேட்டங்களை நிறைவு பெறச் செய்கின்றது.”என்று
‘மலகூத்தில்லாஹ்
பீ அஸ்மாயில்லாஹ்’
எனும் நூல் எழுதுகிறது.
ஒரு சிறந்த பாதுகாப்பு
“யாரசூலல்லாஹ்! ஏதாவதொரு ஆயத்தை எனக்கு கற்றுத் தாருங்கள். அதை நான் ஓதி வருவதன் மூலம் அல்லாஹ் எனக்கு நற்பலனைத் தர வேண்டும். அது என்ன ஆயத்து!” என்று நபித் தோழர் ஒருவர் நபிகள் பெருமா னார் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்.
“நீர் ஆயத்துல் குர்ஸியை ஓதிக் கொண்டு வாரும். அது நிச்சயமாக உன்னையும், உன் சந்ததியையும் பாது காக்கும், மேலும் உன் வீட்டையும் பாதுகாக்கச் செய்யும் என்று நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
22
-அறிவிப்பவர் : ஹலரத் இப்னு மஸ்வூத் (ரலி) ஆயத்துல் குர்ஸியை ஓதுவது ஒரு சிறந்த பாதுகாப்பு சாதனம் என்பது இந்த ஹதீதின் மூலம் அறிய வருகிறது ஒதக் கூடியவரையும் அவர் குடும்பத்தையும், அவர் குடி யிருக்கும் இடத்தையும் பாதுகாக்கும் வல்லமையுடையது.
அறிவிப்பவர் : ஹலரத் ஹஸன் இப்னு அலி (ரலி) இவ்விரு ஹதீதுகளும் மிப்தாஹுஸ் ஸஆதத் எனும் நூலில் இரண்டாம் பாகம் 398வது பக்கத்தில் கூறப்படு கின்றன.
பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களுடைய பாது காப்புக்காக இந்த ஆயத்துல் குர்ஸியை வழமையாக வந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.
“சகல விதமான தீய-துஷ்ட ஜின் ஷைத்தான்களை விட்டும் பாதுகாக்க ஆயத்துல் குர்ஸி மிகச் சிறந்த திருவசனம்” என்று ஹதீது வல்லுனர்களான உலமா பெருமக்கள் பலரும் எழுதுகிறார்கள்.
இதன் சிறந்த பாதுகாப்புக்குச் சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய மற்றொரு ஹதீதும் காணட் படுகின்றது.
“யார் ஆயத்துல் குர்ஸியை மாலையில் ஓதினாரோ, அவரை காலை வரை அதைக் கொண்டு பாதுகாக்கப்படு கிறது. யார் காலையில் அதை ஓதினாரோ அவரை அதைக் கொண்டு மாலை வரை பாதுகாப்புச் செய்யப்படுகிறது.” அறிவிப்பவர் : ஹலரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள். ஓர் அனுபவ நிகழ்ச்சி
ஆயத்துல் குர்ஸியை தொடர்ந்து ஓதி வந்தவர்கள் யாரும் பலன் பெறாமல் இருக்க முடியாது. ஆனால், அது அவர்களுக்கு தொயாமல் வேண்டுமானால் இருக்கலாம். அதை ஓதி வருவதால் என்ன பலாபலன்களோ அவற்றை அது நிச்சயமாக அளித்துக் கொண்டுதான் இருக்கிறது.