பிஸ்மில்லாஹி ர்ரஹ்மான் னிர்ரஹீம்
அல்லாஹ் படைத்த மாதங்களிலேயே அமைதியும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் விற்கு மிகவும் பிடித்த மாதம் ரஜப்
ரஜப் உடைய மாதத்தில் நடந்த சிறப்புகளும் நடந்த நிகழ்வுகளும்
இந்த மாதத்தைப்பற்றி கூறும் பொழுது
ஷஹ்ருல்லாஹில் அஸம்’ என அரபிகள் இஸ்லாத் துக்கு முந்திய காலத்திலும் இம்மாதத்தினைக் குறிப்பிடு வர்.
அஸம் என்ற அரபுச் சொல் செவிட்டுத் தன்மையை குறிப்பது.
மனித உயிர்களுக்கு எந்த விலை மதிப்பும் காணா மல் கொலை கொள்ளை போன்ற அழிச்சாட்டியங்களிலேயே இன்பங் காணப்பட்டு வந்த அறியாமைக் காலத்திலேயே ரஜப் மாதம் பிறந்திடுமானால் அரபு மண்ணில் வாள்களின் மோதல்கள் ஒலிக்கா; அம்புகளின் சந்திப்புக் குரல்கள் செவி யுறா; பெற்ற தன் தந்தையைக் கொன்றவனையும் பழி தீர்க்கத் தேடித் திரிபவன் அந்த தன் வைரியை எதிர் கண்ட நிலையிலும் காணாதவனை போலவே கடந்து செல்வான் இம்மாதத்தில். அத்தகைய அமைதி நிலவிய காரணத்தினால் இம்மாதம் ‘அல்லாஹ்வின் – அமைதிநிறைந்த மாதம் – ஷஹ்ருல்லாஹில் அஸம்’ என்று அழைக்கப்பட்டது.
தரிகெட்டுத் திரிந்த எத்தனையோ சமுதாயத்தினர் மீது பல்வேறு காலங்களில் அல்லாஹ்வின் வேதனைகள் இறக்கியுள்ளன. அவையனைத்தும் அவையனைத்தும் பிற மாதங்களிலேயே இறங்கினவேயொழிய ரஜப் மாதத்தில் அல்லாஹ்வின் வேதனை – வழிகெட்டோர் மீதும் கூட ஒருபோதும் இறங் கியதில்லை என்றெழுதப்படுகிறது.
இஸ்லாத்தின் மூன்றாம் கலீஃபா ஸையதினா ஹழ்லரத் உஃஸ்மான் கனீ துன்னூரைன் (ரலி) அவர்கள் தங்கள் கிலாஃபத் காலத்தில்,
ரஜபு மாதம் பிறந்திடுமானால் தங்க ளின் ‘குத்பா’ப் பேருரைகளில், ‘மக்களே! இது அமைதி மாதமாகும். ‘ஜக்காத்’-என்னும் அறம்–வழங்கும் மாத மாகும். கடன்பட்டுள்ளவர் தம் கடனைக் கொடுத்துமுடித்து எஞ்சிய தம் உடைமைகளுக்கான ஜக்காத்தை வழங்கிடு வாராக’ என போதிப்பவர்களாக இருந்தார்கள்.
அமைதி மாதமான அல்லாஹ்வின் ரஜபு மாதத் தில் முஸ்லிமான தன் உடன்பிறப்பின் கவலையை நீங்கச் செய்தவருக்கு அல்லாஹ், ஃபிர்தவ்ஸ் எனப்படும் சுவனத் தில் பார்வைக்கு மட்டுப்படாத அளவு விரிவுடைய பிரம் மாண்டமான மாளிகையை நிர்மாணித்தருள்வான்.மக் களே! நீங்கள் ரஜபு மாதத்தைக் கண்ணியப்படுத்துங்கள். அல்லாஹ் உங்களின் தகுதியை ஆயிரம் மடங்கு உயரச் செய்வான்” என்ற அருளுரையை ஹழ்லரத் அப்துல்லாஹ் இப்னு ஜ்ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நபியவர்கள் ரஜப் மாதத்தை பற்றி கூறிய நிகழ்வுகள்

ரஜப் என்ற வார்த்தை தர்ஜீப் என்ற சொல்லில் இருந்து உருவானது தர்ஜீபு என்றால் மாண்புடையது மதிப்புடையது என்று பொருள் தரும்.
‘தர்ஜீப்’ என்ற சொல்லிலிருந்து பிறந்த ரஜப் என்ற சொல்லுக்கு மரியாதைக்குரியது என்று பொருள். சிறப் பளிக்கப்பட்ட ஒரு மாதத்தை அரபிகள் ‘ரஜப்த்த ஹாதஷ் ஷஹ்ர்’ என குறிப்பிடுவார்கள். ஒரு காரியத்துக்காக தயா ரிப்புகள் செய்வதற்கும் தர்ஜீப் என்று சொல்லப்படுவதுண்டு.
إنَّهُ ليُرجَبُ فِيْهِ خَيْرٌ كَثِيرُ لِشَعْبَانَ
ஷஅபான் மாதத்துக்கான பல நன்மைகள் முந்திய இம் மாதத்தில் சித்தப்படுத்தப்படுவதாக நபி பெருமான் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் இது ரஜப் மாதம் என்று அழைக் கப்படுவதில் பொருளுண்டு.
ரஜப் என்ற அரபிச் சொல்லில் அடங்கியுள்ள ரே, ஜீம், பே என்ற மூன்று எழுத்துக்களையும் முன்னெழுத்து களாகக் கொண்டு முறையே, ரஹ்மத் (கருணை), ஜூது (மன்னிப்பு) பர் (அருள்) என்ற மூன்று சொற்களைத் தெரிந்தெடுத்து, இம்மாதம் முழுவதும் அல்லாஹ்வின் கரு ணையும், மன்னிப்பும், அருளும் மற்றெந்த நாளிலும் சொரி யப்படாத அளவு சொரியப்பட்ட வண்ணமாக உள்ளது- அதனாலேயே அது ரஜப் மாதம் என்றழைக்கப்படுகிறது என ஜீலானின் கோமான் – தீனுக்கு ஜீவனளித்த சீமான் குறிப்பிடுகிறார்கள்.
எனவே மாண்புடைய மாதமான இந்த ரஜப் மாதத்தை
قوله صلى الله عليه وسلم : (( رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي…….)).
الشيخ الألباني 3094
‘ரஜப் அல்லாஹ்வின் மாதம், ஷஃபான் எனது மாதம், ரமழான் எனது சமுதாயத்தின் மாதம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ரஜபு மாதம் அல்லாஹ்வுடைய மாதம், ஷஅபான் என்னுடைய மாதம். ரமழ்லான் என் சமுதாயத்தவர்களின் மாதம்’ என அண்ணலார் (ஸல்) அவர்கள் அறிவித்த போது, “பெருமானே! அல்லாஹ்வுடைய மாதம் என்பதன் அர்த்தம் என்ன?” என்று வினவப்பட்டது.
அண்ணலார் (ஸல்) அவர்கள், “அம்மாதத்தில் பிரத்தியேகமாக மன்னிப்பளிக்கப்படுகிறது. இரத்தக் களரிகளை விட்டும் பாதுகாக்கப்படுகிறது; அம்மாதத்தில் அல்லாஹ் தன் தூதர் களின் இறைஞ்சுதல்களை அங்கீகரித்தான்; தன் அடியார் களுக்கு அவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளித்தான். அம்மாதத்தில் நோன்பிருப்பவருக்கென, அல்லாஹ் தன்மீது மூன்று விஷயங்களைக் கடமையாக்கிக் கொள்கிறான். முந்திய அவரின் பாவங்களனைத்தையும் மன்னித்தல், பிந்திய வாழ்நாளில் ஏற்பட்டுவிடக் கூடிய பாவங்களை விட்டும்அவரைப் பாதுகாத்தல்,
மறுமை நாளன்று ஏற்படக்கூடிய பயங்கர தாகத்தை அவருக்கு தீர்த்து வைத்தல் ஆகியவை அம்மூன்று விஷயங்களாகும்” என்றார்கள்.
அதனைச் செவி யுற்று நின்ற ஒரு முதியவர், அல்லாஹ்வின் தூதரவர் களே! என் முதுமையின் பலஹீனத்தால், நான் அம்மாதம் முழுவதும் நோன்பிருக்கத் தங்கடப்பட்டவனாக இருக்கின் றேன்” என கவலையுற்றார். அண்ணலார் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி அதன் முந்திய நாளிலும், (பதினைந்தாம்) மத்திய நாளிலும், இறுதி நாளிலும் நீர் நோன்பிருப்பீ ராக. முழு மாதமும் நோன்பிருந்த பலன் உமக்குக் கிடைக்கும். ஆனால் ரஜபு மாதத்தின் முதலாம் வெள்ளிக் கிழமை இரவைத் தவற விட்டுவிட வேண்டாம். விண்ண வர் அவ்விரவை ‘லைலத்துர் ரகாஇப்’ என்று கூறுகின்றனர். விண்ணிலும் மண்ணிலும் சஞ்சரிக்கும் அத்தனை விண்ண வர்களும் அவ்விரவின் முந்திய மூன்றிலொரு பகுதி கழிந் தவுடன் கஅபாவைச் சூழ குழுமி நின்று ரஜபு மாதத்தில் நோன்பிருந்தவர்களின் பிழைகள் பொறுக்கப்பட இறைவ னிடம் வேண்டுதல் புரிகிறார்கள். அல்லாஹ் அவர்களின் வேண்டுதல்களை அங்கீகரிக்கிறான்” என்றருளியதாக ஹழ்ல ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பதன் பலன்கள்
நபி நூஹ் (அலை) அவர்கள் தம் காலத்திலேற்பட்ட பிரளயத்திலிருந்து மீள ரஜப் மாதத்திலேயே மரக்கலமேறிய தாகவும், ஆறு மாத காலப் பயணத்தை முடித்து அம்மரக்க லம் ஓர் ஆஷூராவுடைய நாளில் ஜூதி) மலையில் தரை தட்டியதாகவும் வரலாறு கூறுகிறது. ‘ரஜப் மாதம் மிகக் கண்ணியம் பொருந்திய மாதம். அம்மாதத்திய ஒரு நோன்பு ஓராண்டு கால நோன்புக்குச் சமமானது என அண்ணலார் (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்.
இம்மாதத்தில் இறைவனின் கட்டளைப்படி பயணம் துவக்கிய ஹழ்லரத் நூஹ் (அலை) அவர்கள், மரக்கலத் தில் தாங்களும் நோன்பிருந்தார்கள்; தங்களோடிருந்தவர் களையும் நோன்பிருக்கச் செய்தார்கள். அல்லாஹ் அவர் களைப் பிரளயத்தில் மூழ்கி விடாதபடி காப்பாற்றினான்; பிரளயத்துக்குப் பின் பூமியை நிராகரிப்பை விட்டும் அழிச்சாட்டியத்தை விட்டும் பரிசுத்தப்படுத்தினான் அண்ணலார் (ஸல்) அறிவித்ததாக நபிமணித் தோழர் ஹழ் லரத் ஸஹல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
என
இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்புகள் அந்நோன்பாளியின் பாவங்களை முழுமையாக அழித்து விடுகின்றன. உன் பாவங்கள் அழிந்து போயின, இனி நீ நன்மைகளைச் சேர்க்கத் துவங்கு’ என அவருக்கு நன்மாராயம் கூறப்படு கிறது. அதனாலேயே இம்மாதத்துக்கு ‘ஷஹ்ருல் மு(த்) தஹ்ஹர் – பரிசுத்தப்படுத்தும் மாதம்’ என்ற ஒரு பெயரும் உண்டு.
புனித மிக்க இம்மாதத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களிலும் நேன்பிருப்பவருக்கு அல்லாஹ் தொள்ளாயிரம் ஆண்டுகள் வணக்கம் புரிந்ததற்கான நன் மைகளை அருள்கிறான் என்று பெருமானார் (ஸல்) அவர் கள் அருளியதாக ஹழ்லரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
சுவனத்தில் ஒரு மாளிகையுண்டு, ரஜபு மாத்தில் நோன் பிருந்தவர் மட்டுமே அதில் நுழைவார் எனவும் ஒரு சமயம் அண்ணலார் (ஸல்) அவர்கள் அருளியதாகவும் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களே அறிவித்துள்ளார்கள்.
இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்புகளின் சிறப்பைப் பற்றி,
அண்ணலார் (ஸல்) அவர்களின் நீண்ட ஓர் அருளு ரையை விளக்கிய நபிமணித் தோழர் ஹழ்லரத் அபுத்தர்தா (ரலி) அவர்கள், ‘இம்மாதத்தில் நோன்பிருக்கும் வாலாயங் கொண்டிருந்தவரின் மரண சமயத்தில் இறங்கும் மரண தூதுவர் ‘ஃபிர்தவ்ஸ்’ எனப்படும் சுவனத்தின் நீரை
அவருக்குப் புகட்டுவார். அதனால் அவரின் சிரமங்கள் பரிக ரிக்கப்பட்டு விடும். மிக எளிதாக அவரின் ஆன்மா பிரி யும், மண்ணறையில் அவர் நிம்மதி பெறுவார். ‘கவ்ஃஸர்’ நீர்த் தேக்கத்தருகிலும் அவர் இடம் பெறுவார். மண்ண றையிலிருந்து அவர் உயிர் பெற்றெழும்போதோ
எழுபதி னாயிரம் விண்ணவர்கள் முத்தாலும் பவளத்தினாலும் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகைகளோடு பல்வேறான அணி கலன்களை ஏந்தி வந்து, இறைவனின் நேசரே! புறப்படுவீ ராக. எந்த உம் இரட்சகனை மகிழ்விக்க பகற்காலங்க ளெல்லாம் நீர் உம்மைத் தாகத்தால் வருத்திக் டீரோ, எந்த உம் இறைவனின் திருப்பொருத்தத்தைத் தேடி உம் உடலைப் பலஹீனப்படுத்திக் கொண்டீரோ அவனின் சந்திப்புக்கு விரைவீராக’ என்று அவரை அழைப் பார். மறுமை நாளன்று அவர் மேலான நன்மைகளோடு ‘அதன்’ எனப்படும் சுவனத்தில் முதன்மையாக நுழைவார். அல்லாஹ் அவரைக் கொண்டு பொருத்தங் கொள்வான். அவனைக் கொண்டு அவரும் பொருத்தங் கொள்வார். அதுவே அவர் பெறும் மகத்தான சன்மானமாகும். அன்றாட தம் நோன்புகளோடு தம் வருவாய்க்கேற்றவாறு தர்மமும் செய்தவர் தங்குமிடத்தைப் பற்றி என் சொல்வேன்! அவர் தங்குமிடத்தைப் பற்றி என் சொல்வேன்!! அவர் தங்குமிடத் தைப் பற்றி என் சொல்வேன்!!! (என அண்ணலார் (ஸல்) அவர்களும் மும்முறை குறிப்பிட்டார்கள்.) அவர் பெறும் பேற்றை, படைப்புகள் அனைத்தும் கூடி கணிக்கவாரம் பித்தாலும் அதில் பத்திலொரு பாகத்தையும் கணிக்க முடி யாது – என குறிப்பிட்டார்கள்.
சுவனத்தில் ஒரு நீரோடையுண்டு. அதன் பெயரே ‘ரஜப்’ ஆகும். அதன் நிறம் பாலைவிட வெண்மையுடைய தாயிருக்கும். அதன் சுவை தேனை விட இனிமையுடைய தாயிருக்கும். ரஜபு மாதத்தில் ஒரேயொரு நாள் நோன்பி ருந்தவரையுங்கூட அல்லாஹ் அந்நீரோடையிலிருந்து பருகச் செய்வான் – என பெருமானார் (ஸல்) அவர்கள் அரு ளக் கேட்டு ஹழ்லரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர் கள் அறிவித்துள்ளார்கள்.
.
“ரஜபு மாதம் முதல் நாள் வைக்கப்படும் நோன்பினு டைய பலன் அம்மாதம் முழுமையாக வைக்கப்படும் நோன் புகளின் மொத்தப் பலனுக்குச் சமமானதாயிருக்கும். இம் மாதத்தின் ஏழு நாட்கள் நோன்பிருந்தவருக்கு நரகின் ஏழுவாசல்களும் அடைக்கப்பட்டு போகும். எட்டு நாட் கள் நோன்பிருந்தவருக்கு சுவனத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு விடும். பத்து நாட்கள் நோன்பிருந்தவரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளைக் கொண்டு மாற்றி விடுவான். பதினெட்டு நாட்கள் நோன்பிருந்தவரை நோக்கி ‘ஓ நல்லடியாரே! நிச்சயமாக நீர் மன்னிக்கப் பட்டு விட்டீர். இனி நன்மைகளைச்சேகரிக்கத் துவங்குவீர்’ என விண்ணிலிருந்து நன்மாராயம் கூறப்படும் – என அண்ண லெம்பெருமான் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹழ்லரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் ஓர் அறிவிப்பும் காணப் படுகின்றது.
ஆக கண்ணியமாணவர்ளே !!! இந்த மகத்தான ரஜபை கண்ணியப்படுத்தி இந்த மாதத்தில் நிறைய அமல்கள் செய்து ரமலானை எதிர்பார்த்து ரமலானை அடக்கூடியபாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானக ஆமின் ஆமின்